<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9716164</id><updated>2012-01-28T23:54:48.846-08:00</updated><title type='text'>காற்றோடு....</title><subtitle type='html'>நிறைய கனவுகளோடும் காதல்களோடும் ஒரு வழிப்போக்கனாய்....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>56</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-5031813807052757000</id><published>2009-05-31T14:23:00.000-07:00</published><updated>2009-05-31T14:30:57.869-07:00</updated><title type='text'>எரியும் நினைவுகள்- யாழ் நூலக எரிப்பின் 28 ம் ஆண்டு நினைவு நாள்-ஜூன் 1</title><content type='html'>&lt;em&gt;புத்தரின் படுகொலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று என் கனவில்&lt;br /&gt;புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.&lt;br /&gt;சிவில் உடை அணிந்த&lt;br /&gt;அரச காவலர் அவரைக் கொன்றனர்.&lt;br /&gt;யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே&lt;br /&gt;அவரது சடலம் குருதியில் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் இருளில்&lt;br /&gt;அமைச்சர்கள் வந்தனர்.&lt;br /&gt;'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை&lt;br /&gt;பின் ஏன் கொன்றீர்?'&lt;br /&gt;என்று சினந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை ஐயா,&lt;br /&gt;தவறுகள் எதுவும் நிகழவே இல்லை&lt;br /&gt;இவரைச் சுடாமல்&lt;br /&gt;ஓர் ஈயினைக் கூடச்&lt;br /&gt;சுடமுடியாது போயிற்று எம்மால்&lt;br /&gt;ஆகையினால்......&lt;br /&gt;என்றனர் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி சரி&lt;br /&gt;உடனே மறையுங்கள் பிணத்தை'&lt;br /&gt;என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவில் உடையாளர்&lt;br /&gt;பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.&lt;br /&gt;தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்&lt;br /&gt;புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்&lt;br /&gt;*சிகாலோவாத சூத்திரத்தினைக்&lt;br /&gt;கொழுத்தி எரித்தனர்.&lt;br /&gt;புத்தரின் சடலம் அஸ்தியானது&lt;br /&gt;*தம்ம பதமும்தான் சாம்பரானது.&lt;br /&gt;&lt;br /&gt;                       -கவிஞர் எம்.ஏ.நுஃமான்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இ&lt;/strong&gt;ருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின் வழிகாட்டுதலில்&lt;br /&gt;யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..&lt;br /&gt;&lt;br /&gt;ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள்&lt;br /&gt;கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர் மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது.அவர்கள் தருணம் பார்த்திருந்தனர்.1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்க்கள் தமிழர் கல்வி ஆதரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது .&lt;br /&gt;1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப் பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும்,கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட&lt;br /&gt;சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது,தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு ,மகிழூர்ந்து என்பன தீக்கிரையாக்கப் பட்டன.1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கோண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல்&lt;br /&gt;தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்க்கும் தீ வைக்கப்பட்டது.அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது.எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீ யாழ்ப்பாண நகரமெங்க்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்க்கு மூலையில் முதல் தீ வைக்கப் பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவது தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்&lt;br /&gt;துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர்.தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது.அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள்.கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக் காணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில்&lt;br /&gt;தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின்நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும்.தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களும். இவர்களின் ஏற்பாட்டில்யே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர்.இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில்&lt;br /&gt;சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாளில் மொத்த யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ தமிழரின் உரிமைத் தீப் பிளம்பாக மாறியது.அந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்க்கும் எரிகிறது.ஈழத் தமிழரின் தேசிய அடையாளதின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும்.&lt;br /&gt;யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது.ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;1984 இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின்&lt;br /&gt;பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பத்திரங்களைப் பெறலாயிற்று.இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும் நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ&lt;br /&gt;அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சர்வதேசகக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டியிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவதற்கு உதவின. பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர்.இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.&lt;br /&gt;இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம்  ஒரு படுகொலையின்&lt;br /&gt;சமாதியாகவே இருகிறது இப்போது மீளவும் கட்டப் பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே.முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை.பெருமபால பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம்&lt;br /&gt;தனித்தே இருகிறது.அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;( இது கடந்த முறை நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரமே)&lt;br /&gt;***********                                                  ****************                                         **********&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;குறிப்பு : எரியும் நினைவுகள் என்ற எமது ஆவணப் படத்தினைப் பலரும் பார்த்திருப்பீர்கள் உண்மையில் அதில் இன்னும் பல தகவல்களும் சேதிகளும் சேர்க்கப்பட வேண்டும் நானும் சிவகுமாரும் முன்னமே திட்டமிட்டபடி ஒரு வரலாற்று ஆவணத்தை தாயாரிக்கும் எங்களின் முயற்சி இன்னமும் முடியவில்லை. உங்களிடம் நூலகம் பற்றிய தகவல்கள் சேதிகள் இருப்பின் அறியத் தரவும்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-5031813807052757000?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/5031813807052757000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=5031813807052757000' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5031813807052757000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5031813807052757000'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/05/28-1.html' title='எரியும் நினைவுகள்- யாழ் நூலக எரிப்பின் 28 ம் ஆண்டு நினைவு நாள்-ஜூன் 1'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-4769541538727177117</id><published>2009-05-29T20:46:00.000-07:00</published><updated>2009-05-30T09:38:55.950-07:00</updated><title type='text'>ஷோபாசக்தி &amp;கோ.. சுகமாத்தான் "பெறுவியளோ" ?</title><content type='html'>&lt;span style="font-style: italic;"&gt;ஆனால் இன்றைய சூழலில் என்னைப் போன்றவர்கள் ஈழத்துக்குப் போய் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு புலிகளின் துப்பாக்கிகளும் அரசின் சிறைகளும் எம்மைத் தடுத்து வைத்துள்ளன. வாய்ப்புள்ள சூழல் வரும்போது நான் என்னை இயக்கச் செயற்பாடுகளில் முழுமையாக இணைத்துக்கொள்வேன். இப்போது கூட அய்ரோப்பாவில் சிறு அளவில் குழுக்களாக அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். - ஷோபாசக்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;எழுத்தாளரும் நம்ம நண்பருமான ஷோபாசக்தி&lt;span style="font-style: italic;"&gt; &lt;/span&gt;கே. பாலமுருகன்&lt;span style="font-style: italic;"&gt; &lt;/span&gt;என்பவருக்கு எப்பவோ கொடுத்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.  இதை இந்த நேரத்தில் வெளியிட்டிருக்கிறார் போல&lt;span style="font-style: italic;"&gt; ... &lt;/span&gt;&lt;span&gt;ஆனால் துரதிஸ்ட வசமாக ஷோபா சொல்லும் துப்பாகிகள் அங்கு இப்போது செயலிழந்து விட்டன. வேறு இடங்களிலிருந்து வேண்டுமானால் துப்பாக்கிகள் வரக் கூடும். ஒரு வேளை இப்போது பேட்டி கண்டிருந்தால் கருணாவின், பிள்ளையானின் , டக்ளஸ் அண்ணையின் .... ... ...  துப்பாகிகளின்  அச்சுறுத்தல் இருக்கிறது என ஷோபா சொல்லியிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அரச அடக்கு முறை தடுத்து வைத்திருக்கிறதாம். அட நாதாரிப் பயலுகளா( நாதாரி பயலு எண்டு ஷோபாவைச் சொல்ல வில்லை இதையெல்லம் கேட்க்கும் வாய்ப்புப் பெற்ற என்னையும் உங்களையும்தான் சொல்கிறேன்) அடக்கு முறைக்கு எதிராக போராடுவதற்க்குத்தானே இயக்கம். அதுக்குப் பெயர்தானே போராட்டம். ஷோபா அந்த பேட்டியில் குட்டிரேவதி ஆதவன் தீட்சண்யா எல்லாரும் இயக்கத்தில் இணைந்து போராடுகிறர்கள் எழுத்தாளர்கள் இயக்கத்தில் சேரக் கூடாது என்பதல்ல என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில ஒரு சின்ன தகவல் இயக்கம் என்கிறது தமிழீழத்தில் உபயோகிக்கும் அர்த்தத்தில் அல்லாமல் பொதுவான அர்த்ததில் சொல்லுறன். ஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று கூட்டங்களில் கலப்பதால் அவர் அனைத்துலக பிரிவுடன் தொடர்பு என்றோ... குட்டி ரேவதி கவிஞர்களின் ஈழத்தமிழர் பாதுகப்பு முயற்சிகளில் முன்நிற்பதால் அரசியற் துறைத் தொடர்பு என்றோ நினைத்து விட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அட ஆமங்கண்ணு அவுங்க மாதிரி உங்களுக்கு நாட்டின் சூழல் இருந்தால்  &lt;/span&gt;&lt;span&gt;அப்ப சுகமா உக்காந்துகின்னு போராடுவிங்களோ.&lt;/span&gt;&lt;span&gt; ( அவுங்க நாட்டில போராடுறது அத்தனை சுகம் என்பதில்லை என்பது வேறு கதை. கருணாநிதி மற்றும் செயலலிதா போன்றவர்களின் அரசாட்சியின் சிறைகள், தேசிய பாதுகாப்புச் சட்டம், ரவுடிகளின் துப்பாகிகள் காரணமாக தமிழ்நாட்டிலும் உங்களைப் போன்றவர்களால் தீவிரமாக போராட முடியாது) &lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு வாய்த்த சமூகத்தின் சூழலில் இருந்து போராட வேண்டும் அல்லது  நீ வாழும் சமுகத்தில் நாட்டில் போராட வேண்டும் அல்லது உனது மொழிச் சமுகத்தில் போராட வேண்டும் அதை விட்டு விட்டு புலிகளின் ஆயுதம் இலங்கை அரசின் அடக்கு முறையும் முடியட்டும் இயக்கம் அமைத்து போராடுறன் எண்டால்....  ..... ....&lt;br /&gt;&lt;br /&gt;புலியெதிர்ப்பு ஆதாரவு பாசிசம் சாதிய ஆதிக்கம் என்பன எல்லாவற்றையும் உங்களால் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையும் தாண்டி இலங்கையில் இப்போது வரை இருந்து போராடிய அத்தனை பேரும் உங்களைப் பொறுத்த வரையில் ஒரு வேளை முட்டாள்களாக இருக்க முடியுமோ. ஷோபாசக்தியினது இன்னாள் முன்னாள் தோழர்கள் மற்றும் சில நாட்க்கள், மாதங்கள்  முன்பு பிரிந்து போன தோழர்கள் என பலரும் பூட்டிய குளிர் அறைகளுக்குள் கணனி முன்னால் உட்கார்ந்து கொண்டும் அல்லது அழுக்கான ஆடைகளுடன் நிறைந்த போதையிலும் விமர்சித்துக் கொண்டிருக்க இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களின் மரணங்களை கூட நீங்கள் பாசிசத்தின் மரணங்களாகவே சொன்னீர்கள். சிவராம் உட்பட பலரின் மரணங்களையிட்டே நான் பேசுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் கொண்ட கருத்துக்காக இயங்கிக் கொண்டிருந்தார்கள். சிவராம் எங்க இயக்கத்தில் இருந்தார் என்றால் பத்திரிகையாளர் அமைப்புகளும் இயக்கம்தான். சுனந்த தேசப்பிரிய, சனத் பால சூரிய, சிறித்துங்க ஜெய சூரிய , விக்கிரமபாகு கருனாரட்ண, ரவிராஜ்,  என அரசியல் சமூக இயக்கம் சார்ந்து பலரும் இயங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். ராவிராஜ் தனது அரசியலாக எதை கொண்டிருந்தாலும் நமக்கு ஒத்து வந்தாலும் வராவிட்டாலும் அவர் ஏதோ ஒரு இயக்கத்தில் இயங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகளுக்காக இன்னும் வழக்காடும், முடிந்தவரை அவற்றை வெளிக்கொண்டுவரும் எத்தனை அமைப்புகள் தொடர்ந்து இயங்கின. அதில் பணியாற்றிய நண்பர்களுக்கு அச்சுறத்தலே இல்லையா? இப்போதுதான் படிப்படியாக அவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்து செல்ல வில்லை.  சும்மா என்னகடா விடுகை விடுறீங்க. எங்களால போராட முடியல சும்மா எழுதிக்கிட்டும் பேசிக்கிட்டும் இருப்போம். அதுவும் பிரச்சனை வராமலுக்கு ... .... இந்தியாவுக்கு வந்தால் யரைப் போய் பார்கணும் அவர்களைப் பார்ப்பம். எப்ப பேட்டி கொடுக்கணுமோ எதைப் பற்றிக் கொடுக்கணுமோ அதைக் கொடுத்து விட்டு கிளம்பிடுவம். இதுதானே உங்கள் பார்முலா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நம்ம நண்பன் ஷோபா அண்ணாச்சி ( மட்டக்களப்புல அண்ணன் என்பதை அன்பா அண்ணாச்சி எண்டு சொல்ர நாங்க..மறுகா யாரும் சரவணபவான் அண்ணாச்சி மாதிரி நினைச்சிடக் கூடாது)  சின்னதாக தான் வழும் நாட்டில் சிறு சிறு குழுக்களாக  இயங்குகிறாராம். நல்லது அங்க உள்ள தொழிளார்கள் குடியேறிகள் குறித்தாவது வேலை செய்வது என்றால் நல்லதுதான். ஆனால் அதை சத்தமாக சொல்லுமளவிற்க்கு இவர்களின் இயக்கம் அத்தனை ஆழமாக இல்லை . கூட்டம் போடுவதற்க்கும் கூடிப் பேசுவதற்க்கும் புத்தகம் எழுதுவதற்க்கும் புலியை விமர்சிப்பதற்க்கும் . ஈழத்தின் எந்த வேலியில் புலியின் குடும்பியில் சாதியாதிக்கம் இருக்கிறது என்பதை புகுந்து தேடுவதற்க்கும் போதையேற்றுவதற்க்குமே இவர்களுக்கு நேரம் போதாமல் இருக்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;சரியப்பா இப்ப பிரச்சனைக்கு வருவம். சதா புலிகளையும் ஈழத்தில் நடக்கும் சாதிய , வர்க்க அடக்க முறையையும் பேசிக் கோண்டும் தமது அரசியலாகக் கொண்டும் தமக்கிருக்கும் எழுத்துவன்மையைக் கொண்டும் இணையத்தில் இயங்கி வந்த தமிழரங்க ,சத்தியகடதாசிக் காரர்களே இப்போதும் உங்களுக்கு பாதுகாப்பான இணையதில் இயக்கம் வளர்க்கிறீர்களோ? நீங்கள் வைத்திருந்த வைத்திருக்கும் மாற்று அரசியல் என்ன? இப்போதுதான் நீங்கள் இதுவரை விமர்சித்த பாசிஸ்டுகள் அழிக்கப் பட்டனரே  அப்படியானால் உங்களின் மாற்று அரசியலை இந்நேரம் துக்கிகொண்டு கிளம்பியிருக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.....  ஒரு வேளை வெளிநாட்டு புலி பாசிஸ்ட்டுகளும் அழிக்கப் பட வேண்டுமோ. எனக்கென்னமோ இப்ப இருக்கும் நிலையில் அவர்கள் துப்பாக்கி தூக்கிக் கொண்டு உங்களைக் கொல்ல வருவதற்க்கான சூழல் இல்லையென்றே தோன்றுகிறது. உங்க கூடவே யாராவது கூட்டத்தில் துப்பாக்கியோடு இருக்கப் போகிறார்கள் பாருங்கள். சைகிள் கப்பில தோழர்கள் யாரவது உங்கள் மாற்றுத் திட்டங்களை அடித்துப் பறித்து விடப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா புலிகள் 100 வீதம் கொடுமைக் காரர்கள் என்றால் இலங்கை அரசு 200 வீதம் கொடுமைக் காரர்கள் என கருணாநிதித்தன டயலக்குகளை ஷோபசக்திகள் இனியும் சொல்லப் போகிறார்களா? ( இந்த 100வீதம் புலி எதிர்ப்பு,200 வீதம் இலங்கை அரசு  எதிர்ப்பு எனபதை குறைந்தது 3 பேட்டிகளிலாவது இதுவரை ஷோபாசக்தி சொல்லியிருக்காலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கதையாடல்களால்  மக்களை மயக்க நினைக்கிறீகளா? இதுதான் மக்களை அணி திரட்டி அரசியல் அறிவு பெற வைப்பதா? அய்யாமாரே  என்னைவிடவும் நமது மக்களை விடவும் நிறையப் படித்த கருதியல்கள் இசங்கள் அனுபவங்கள் கற்றுகொண்ட நீங்கள் பேசுவதையே விளக்கங்கெட்டதனாமா பார்த்துக் கொண்டிருக்கும் எங்களிடம் எதுக்கு கதையளக்கிறீர்கள். உங்கள் எழுத்துகளின் மயக்கத்தில் ஊசியேற்றப் பார்க்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நட்டை விட்டு வெளியேறிய பின்னர் , இதுவரை உங்களில் எத்தனை பேருக்கு ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகள் துயரங்கள் செய்திகள் குறித்து நேரடியாக தகவல் பெற முடிந்தது. உங்களின் தொடர்பு எப்படியிருந்தது. ஷோபா ,  நீங்கள் உங்கள் கிரமாம் பற்றிய ஒரு கொலை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதும் போது நான் உங்கள் கிராமத்தில் இருந்தேன்.அப்போது நீங்கள் பிரான்ஸில். அப்போது உங்களுக்கு புலியால் ஆபத்து என்பது உங்கள் வாதமாக இருக்கலாம். ஆனால் அந்த சம்பவம் பற்றி எழுதுவதற்கான உங்களின் தொடர்ப்பு என்பது எது? ஒரு வேளை உங்கள் நண்பர்களும் உறவினர்களும் இருக்காலாம். ஆனால் இதே போன்ற பல கதைகளை வெறும் இணைச் செய்திகளை  வைத்தே எழுதும்  பலர் உங்களின் கூட்டளிகளாக இருந்தார்கள் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக மீண்டும் முன்பு கேட்ட கேள்வியே,  இதுவரை உங்களின் அரசியலுக்கு புலிதான் பிரச்சனை என்றால். உங்கள் எதிர்பார்ப்புப் படி புலிகள் வந்து கொண்டிருந்த தவறான அரசியல் ராணுவ வழிமுறை அவர்களைத் தோல்வி நோக்கி இட்டுச் சென்று கொண்டிருந்தது என்றால் அப்போதே உங்களிடம் மாற்று திட்டங்கள் இருந்திருக்க வேண்டுமே அப்படியானால், உங்களின் மாற்று அரசியல் என்ன? இப்போது தவிக்கும் மக்களுக்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுவரை  செத்து கொண்டிருந்த மக்களுக்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்னை போலவே நீங்களும் சும்ம வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் வெளிப்படையாச்  சொல்லுங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;இல்லா விட்டால் ரயாகரன் என்பவர் அசிங்கமாய் தனக்கு ஒத்துப் போகும் புலியெதிர்ப்பு பதிவுகளை இப்போது தேடிக் கண்டுபிடித்து,  புலியே அழிந்திருக்கும் நிலையில் வேதனைகளை கொட்டும் உணர்வுகளில் இருக்கும் புலியெதிர்ப்பை தனக்கு சாதகமாக்கி மீள் பிரசுரம் செய்வது  போல் புலியெதிர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருந்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt;ஒரு வேளை நீங்கள் புலியும் முடிந்து இலங்கையில் மகிந்த ஆட்சியும் ஒழிந்து  வேறு புதிய ஆட்சி வந்து ஒரே நாடு ஒரே மக்களாகி வாழும் ஒரு காலத்தில் ஒரு 20 வருடங்களுக்கு பிறகு தலித்துகளுக்காக போராடுவதற்க்கு இலங்கையில் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை தொடங்க போவதாக நினத்து நீங்கள் சொன்னத நாந்தான் தப்பா புரிஞ்சிகிட்டு உணர்ச்சி வசப்பட்டு எழுதிற்றனோ.... சே தமிழனாப் பிறந்ததால எல்லாத்திலையும் கொஞ்சம் உணர்ச்சி அதிகம்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-4769541538727177117?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/4769541538727177117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=4769541538727177117' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/4769541538727177117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/4769541538727177117'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/05/blog-post_29.html' title='ஷோபாசக்தி &amp;கோ.. சுகமாத்தான் &quot;பெறுவியளோ&quot; ?'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-7607018161598116543</id><published>2009-05-28T06:51:00.000-07:00</published><updated>2009-05-28T22:37:40.581-07:00</updated><title type='text'>பிரபாகரன் தெய்வமானார்...</title><content type='html'>&lt;span style="font-style: italic;"&gt;“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.&lt;/span&gt;&lt;br /&gt;                    - உங்களை எல்லோரும் அசாத்திய திறமைகளை உடையவர்கள் என்கிறார்களே என்கிற Fr.ஜெகத் காஸ்பரின் கேள்விக்கு  வி.பு தலைவர்  பிரபாகரன் சொன்ன பதில் இது என காஸ்பர் அவர்கள் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்  ஈழத்தில் இந்திய ராணுவம் வெளியேறிய பின்னர் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த அல்லது பள்ளிக் கூடம் போக ஆராம்பித்த ஈழத்தின் புதிய தலை முறைகளுக்கு பிரபாகரன் ஒரு சாகசக் காரந்தான். மேலே பார்க்கமல் இளநீர் குலையில் இருக்கும் ஒற்றை இளநீர் காயை சுட்டு வீழ்த்துவார். கண்ணைக் கட்டிக் கொண்டு குறிதப்பாமல் சுடுவார். அவர் துப்பாக்கியை சுழற்றி லாவகமாக  எடுக்கும் ஸ்டைலே தனி.....இந்தியாவோடு சண்டை பிடிப்பமெண்டு அவர் முன்னமே தீர்கதரிசனமாக சொன்னார்... இப்படி இன்னோரன்ன கதையாடல்களை நாங்கள் சின்ன வயதில் இருந்தே கேட்டு வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்களையும் எழுத்துகளையும் அமைப்புகளையும்  கடந்தகாலம் முழுவதிலும் கண்டாகிவிட்டது. இந்த அமைப்புகள் அனைத்தினதும் பேச்சுகளில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் எம் மக்கள், இன்னமும் இன்னமும் வலிய துயரத்தில் இருகிறார்கள். அந்த மக்களை பிராபகரன் கை விட்டரா அல்லது அந்த மக்கள் பிரபாகரனை கைவிட்டு வர நினைத்தார்களா என்ற வதங்களுகெல்லாம்  விடைதேடிக் கொண்டிருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்போது யாருடைய தொலைபேசியை எடுப்பதற்க்கும் பயமாக இருக்கிறது. பிரபாகரன் அல்லது தலைவர் உயிரோடு இருக்கிரார இல்லையா என  என்னைத் தொலைத்தெடுக்கும் கேள்விகள் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. நான் முன்னெப்போதோ பத்திரிகைக்காரனாக இருந்ததன் அவதி இது.  யாரவது என் தொலைபேசியை ஒட்டுக் கேட்பானோ என்கிற  அநியாயப் பயம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள் , இணையம்  வானொலி தொலைக்காட்சி எல்லத்தையும் பார்த்து நம் நண்பர்கள், ஊடக வட்டம் எல்லாத்திலையும் துலாவி சில பதில்களை வைத்திருந்தேன். இப்போது புலிகளின் அதிகார பூர்வமானவரே சொல்லி விட்டார். கிழக்கில் இப்போது  மீதமிருக்கும் போராளிகளின் அரசியற்பிரிவுப்&lt;br /&gt;பொறூப்பாளரே சொல்லியிருக்கிறார். ஆனால் இன்னமும் சந்தேகம் தீரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்கிற குழபத்திற்க்கு முடிவே இல்லை. தலைவரால் கைவிடப்பட்ட மக்களையும் மறந்து அவர்கள் முகம்களில் படும் துயரையும் மறந்து. ..இதுவரை ஐநா...ஐநா என்று தவங்கிடந்த தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பையும் மறந்து இன்னமும்  அவர் வருவாரா...இருக்காரா என்ற ஏக்கம் கடுப்பைக் கிளப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவிலும்  ஐரோப்பாவிலும் மட்டும் போராடினால் போதாது உலகின் பலமான சக்திகள் ஆசியாவிலேயும் இருக்கிறது என்பதையும் எங்கள் போராட்டத்தின் பெரும் பலவீனத்தையும் ஐநா வில் இலங்கைக்கு அதாரவாக முடிந்த தீர்மானம் சொல்லியிருக்கிறது. மக்கள் போரட்டமல்ல இது ராணுவப் போராட்டம் என்பதையும் உலகின் கவனத்தை நமது அரசியலால் திருப்பாமல் ராணூவ பலத்தாலும் வன்முறையினாலும் திரும்ப வைத்ததன் விளைவு இது . பலஸ்தீனம் ,கியூபா...என  சீனாவோடும் இந்தியாவோடும் ரஸ்யாவோடும் இணைந்து இலங்கையை ஆதரித்த நாடுகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப எனது பதிவின் தலைப்புக்கு வருவம். பிரபாகரன் இருக்கிறார இல்லையா எனக் கேட்கபடும் கேள்விக்கான எனது விடை அவர் தெய்வமாகிவிட்டார். தெய்வம் இருக்கிறது என நம்புபவர்கள் நம்பலாம்  தெய்வம் இல்லை என நாத்திகம் பேசுபவர்கள் பேசலாம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை தெய்வம் நம் கண்ணூக்கு தெரியாத ஒன்றுதான். எமது நாளந்த காரியங்களில் நாம் யாரும் கடவுளைத் தேடிக் கொண்டிருபதில்லை. சைவத்தையும் தமிழையும் சில சாபகேடுகளையும் வளர்த்த தமிழனுக்கு இது தெரியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கருணா 2004 இலேயே சொல்லி விட்டார் பிரபாகரன் எங்களுக்கு கடவுள் போன்றவர் என்று.அவரை நாங்கள் தெய்வமாக மனதில் இருத்தி கிழக்கில் தனியான ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்துகிறோம் என்பதே கருணா என்கிற பூசாரியின் முதல் அறிக்கை. ஒரு போராளியை கடவுளாகி அவரைச் சுற்றி மந்திரம் ஓதும் பூசாரிகளும் பஜனை பாடுபவர்களும் பக்தர்களும் உருவானது துரதிஸ்ட வசமானதுதான். பிரபாகரன் சொன்னது போல யாருடைய தலையிலாவது பிரச்சனையைக் கட்டி விட்டு தப்பித்து போய் வேடிக்கை பார்ப்பது தமிழனின் இயல்பு. அதுக்கு அவனுக்கு சரியான ஆள் கடவுள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனை அதிசயம் செய்யக் கூடிய கடவுளாகவே பலரும் பார்த்தனர். ஆனால் இப்போது கடவுளைக் காணவில்லை. ஆக கடவுளை தேடுவதை விடுத்து மக்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பம். கடவுள் வரவேண்டிய நேரத்தில் வந்து தொலைக்கட்டும். இப்போது அந்த கடவுளோடும் அவர் சேனையோடும் இருந்து காத்தருளிய மக்களை காப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் இருந்து இப்போது முகாம்களில் இருக்கும் மக்கள்தான் கடந்த முப்பது வருட கால போராட்டதின் முதுகெலும்பாக இருந்தவர்கள். இவர்கள் வன்னி மண்ணின் குடிகள் மட்டுமல்ல. தமிழீழ நிலப்பரப்பின் அத்தனை பகுதிகளிலும் மட்டக்களப்பு அம்பாறை உட்பட எல்லா இடங்களையும் சேர்ந்த மக்கள். இவர்களுக்கான உடனடி உதவிகளும் மனிதாபிமானப் பிரச்சனைகளுமே உடனடியானது. ஒரு போராளி இயக்கத்தின் அழிவுக்கு பின்னால் எழும் பெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்பை பெற்ற அரசியல்மயப் பட்ட சமூகமாக நாம் இல்லாததால் முதலில் அந்த மக்களைக் காப்பதற்க்கு ஏதாவது செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; புலிகளுக்கு எதிரான பேச்சு என்பது இந்த மக்களிடம் எழுவது இயல்பானது. இது துயரத்திலும் ஆற்றாமையிலும் கோபத்திலும் கையறு நிலையிலும் இன்னும் பலவிலும் எழும். இதனையே வாய்ப்பாக்கிக் கொள்ள பல சக்திகள் காத்திருக்கின்றன.இப்படி நான் கூறூவதன் அர்த்தம் எல்லரும் புலிகளை ஆதரியுங்கள் அவர்கள் புனிதர்கள் என்பதாகது. ஆனால் இதனை வைத்து பிழைப்பு நடத்தவும்  போராட்டத்தை மழுங்கடிக்கவும் நினைப்பவர்களுக்கு சோரம் போய்விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 13 ம் திருத்தச் சட்டம் என்ர ஒன்றுமில்லாத ஒரு தீர்வை முன்வைக்கவே அரசாங்கம் விரும்பவில்லை. (13ம் திருத்தச்  சட்டம் அப்பிடீன்னா என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள் அதுபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்)13 ம் திருத்தம் தொடர்பாக த.வி கூட்டணி 1987 இல் முன் வைத்த சில திருத்தங்களை இன்று வரை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அதை வலியுறத்த இப்போதைய அதன் தலைவர் தயாராக இல்லை அவருக்கு வடக்கு முதலமைச்சர் ஆகுவது மட்டுமே கனவு. இதுல டக்ளஸ் க்கு எங்கே ஈபிடிபி யைக் கலைகச் சொல்லிவிடுவார்களோ என்ற கவலை. பிரேமதாசவால் புலிக்கு எதராக தமிழர் தரப்பாக உருவாக்கி சந்திரிக்காவால் வளர்க்கபட்ட அந்த அமைப்பு இப்போதைக்கு  மகிந்தவுக்கு தேவையற்றதுதான். மற்றது கருணா நம்பிக்கையோடு இருக்கிறார் ததேகூ கிழக்கு எம்பிக்களில் பலர் தன்னோடு அரச கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் யாருக்கும் தமிழருக்கான தீர்வுபற்றிய எந்த திட்டமும் கிடையாது. மகிந்த என்ன சொல்லுகிறாரோ அதுதான் திட்டம். இந்தியாவும் கிட்டத்தட்ட இந்த கட்சிகளின் நிலையில்தான் இருக்கிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் திட்டம் எதுவும் இல்லை. அப்பிடியிருந்தாலும் அதை அவர்கள் சொல்லும் வாய்ப்பு இல்லை. அடுத்து என்ன பேசுவதெனக் கேட்பதற்க்கு ஆளும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் அரச கட்சி எம்பிகளுக்கு மட்டுமே வவுனியா முகாம்களுக்குள் அனுமதி வழங்கப் படுகிறது. மற்ற எம்பிக்கள் மக்களைச் சந்திக்க வேண்டுமானால் மஹிந்தவின் அரச கட்சியின் இணைய வேண்டும் என்று வெளிப்படையாக அந்த எம்பிக்களிடம் சொல்லப் படுகிறது.அரச தொலைக் காட்சிகள் மட்டுமே மக்களைச் சந்தித்து நிகழ்ச்சி செய்ய முடியும். அல்லது அரசின் சாதனைகள் மட்டுமே தனியார் உட்பட எல்லா ஊடகங்களும் பேச வேண்டும் என்கிற பல நடை முறைகள். தமிழ் தினசரிகளே மகிந்தவின் சேதியை மட்டுமே பிரசுரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இலங்கை ஒற்றைக் கட்சியின் அதிகாரத்தினை நோக்கி போய்க் கொண்டிருகிறது. பேருக்கு வேண்டுமானால் ரணில் கட்சி நடதாலாம் என்ற நிலை உருவாகும். தமிழ் கட்சிகளே இல்லை என்ற நிலை வரும். இந்த ஆபத்தான அடுத்த கட்டம் பற்றி யோசிக்க வேண்டிய நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-7607018161598116543?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/7607018161598116543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=7607018161598116543' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7607018161598116543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7607018161598116543'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/05/blog-post_28.html' title='பிரபாகரன் தெய்வமானார்...'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-2607373556304175557</id><published>2009-05-24T03:00:00.000-07:00</published><updated>2009-05-24T06:45:10.221-07:00</updated><title type='text'>ஷோபாசக்தியின்  F இயக்கமும் நம் இயக்கமும்..</title><content type='html'>இந்த தலைப்பில் இருக்கும்  இரண்டுக்கும் அல்லது நான் எழுதப்போகும் விடையத்துக்கும் எனக்கும் நேரடியாக தொடர்பில்லது விட்டாலும் எனக்கு இப்படி ஒரு தலைப்பிடுவதே பிடித்தமாக இருந்தது. ஷோபாவில் இருக்கும் கிளுகிளுப்பும் இயக்கதில் இருக்கும் வன்முறை நிறைந்த கிளுகிளுப்பும் மசாலாப் படங்களை சின்ன வயதில் இருந்து பார்த்த எனக்கு இப்படியொரு தலைப்பிட  வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியிருக்க கூடும்.ஆனால் நான் இதுவரை ஷோபா குறித்து பாலுமகேந்திராவிடமோ இயக்கம் குறித்து வட இந்திய நண்பர்களிடமோ பேசியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படிப் பேசாததுக்கு என்னுடைய இருப்பு பற்றிய அக்கறையும் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்ளும் மனோநிலையும் காரணமாக இருக்கலாம். மற்றது இது நமக்கு புதுசில்லைத்தானே. இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து சுடும் போது ராஜிவ் வாழ்க இந்திரா வாழ்க என குரல் எழுப்புவதும். இயக்கம் வந்தாலும் இராணுவம் வந்தாலும் கை கட்டி தேனீர் கொடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதுவெல்லாம் கொடுத்து உபசரிப்பதும் நமது பண்பாடுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் இருந்தே யாரிடம் எது பேச வேண்டும்  எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்பட தலைமுறை நாங்கள். யாழ்ப்பாணத்தில் ஒன்பது பத்து வயதுகளில் எங்களுக்கு சினிமாப் பாடல்கள் அவ்வளவாகத் தெரியாது இயக்கப்பாடல்களை சினிமாப் பாடல்களைப் பின்னாளில் எப்படிக் கிளுகிளுப்போடு படித்தோமோ அதே கிளுகிளுப்போடும் அதற்க்கு மேலதிகமாக அதீத உணர்ச்சியோடும் படித்தோம். கிளுகிளுப்பே உணர்ச்சி மயமான மாயைதானே எனச் சொல்லும் கூட்டங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"புலிக்குப் பயந்து பிரேமதாச கோட்டைய விட்டாரே...." என்ற பிரபலமான பாடல் நான் யாழ்ப்பாணத்தை விட்டுவெளியேறும் நாட்களில் அதிகம் படித்து திரிந்த பாடல்கள்.பெடியன் போறபோக்கு சரியில்லை இப்படியே இருந்தால் இன்னும் நாலு வருசத்தில இயக்கத்துக்கு போடுவான் எனச் சொல்லிக்கொண்டிருந்த அம்மம்மாவின் பேச்சைக் கேட்டோ என்னவோ யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் முடிவை அம்மா எடுத்தார்.அப்பா மட்டக்களப்பில் வேலை செய்து கொண்டிருந்தார் என்கிற காரணமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டுமல்ல நிறையப் பேர் நீண்ட பயணத்தின் முடிவில் இராணுவ எல்லைக்குள் வந்தோம். என்னைப் போல பிள்ளையள் எல்லாரிட்டையும் ஊரில இருந்து புறப்பட முதலே  இரு வாராமாக திரும்பத் திரும்ப சொன்ன விசயம் வாவுனியா தண்டினா இங்க பாடுற பாட்டுக்களைப் பாடக்கூடாது. ஆமி பாடச் சொல்லிக் கேட்டால் தேவாரம் பாடிக் காட்டுங்கோ எண்டு  ஒருவாரம் தேவாரமும் திருப்புகழும் படாமாக்க விட்டர்கள்.இராணுவப் பகுதிக்கு வந்து 10 வருடங்களுக்குப் பிறகு அமைதி ஒப்பந்தத்தின் பின்னர் இயக்கப் பகுதிக்குப் போகும் போது என் நினைவில் தென்னிந்திய  சினிமா பாடல்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தன.வன்னியில் இன்னமும் இயக்கப் பாடல்களையே போட்டுக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;90களின் ஆரம்பத்திலே எமக்கு அறிவு தெரிந்த நாட்களில்  இயக்கம் என்ற பெயருக்கு எங்களிடம் ஒரே அர்த்தம்தான் இருந்தது. அப்போது விஞ்ஞானப் பாடப்புத்தகத்தில் இயக்கம் என்ற சொல் வரும் போது எமது நினைவில் வரி ஆடை அணிந்த உருவங்கள் வந்து போகும். பின்னர் மட்டக்களப்பில் சிறிசபாரத்தினம் என்ற ஒருவருக்காக நினைவஞ்சலி  தெரிவித்தது ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களின் அடிப்பாகத்தில் இயக்கம் என்ற எழுத்துக்கள் தெரிந்தன.அப்போதுதான் வேறு இயக்கங்களும் இருப்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். பின்னர் 7 அல்லது 8 ஆம் வகுப்பு படிக்கும்போது ஈபீ ..நாய்பீ.. என்றூ ரைய்மிங்காக சொல்லுவது எங்கள் காதுகளில் வந்து விழும்.  ஆனால் நாங்கள் இதுபோன்ற குழுகள் பற்றி அறிவதில் நாட்டமற்றிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புளட் ,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புக்களின் பெயர் பலகைகள் அதிகம் காணக் கிடைக்கும் பின்னர் ஈபிடிபி பெயர் பலகையும் காணக் கிடைத்தது. இவை தவிர மட்டக்களப்பில்  தேர்தல் நடந்த போது ஈரோஸ் என்ற பெயர் அறிமுகமானது. இந்த நாட்களில் இயக்கம் நடத்து சில பல தாகுதல்களின் செய்திகள் படிக்க கிடைக்கும். மற்றம் படி மாத்தையா..ஸ்கூல் மாத்தையா  ரியூஸன்...என்று சொல்லியபடி சோதனை சாவடிகளைக் கடந்து கொண்டிருந்தோம்.இந்த மாத்தையா புலிகளின் பிரதிதலைவராக இருந்து மரண தண்டனைவிதிக்கப்பட்ட மாத்தையா இல்லை. சார், ஐயா போன்றவற்றிற்க்கு ஒப்பான மரியாதையான சிங்கள வார்த்தை.  இந்த நேரத்தில் ராசிக் குழுதான் இயக்கத்துக்கு அடுத்ததாக எங்களிடத்தில் புகழ் பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பொறு ரசிக் குரூப்ல இரிகிற மாமாட்ட சொல்லித் தாரன் என சில பையன்கள் பள்ளீயில் வைத்து மிரட்டுவார்கள். சண்டை பிடித்தால் இப்பிடிப் பயமுறுத்துபவர்களிடம் நாம் எச்சரிக்கையாகவே இருப்பம். ரசிக் குரூபில  தன் மாமாவைக் கொண்டிருக்கும் பையனுக்கு இடவேளை நேரத்தில கன்ரீன் கவனிப்புகள் இருக்கும். நம்ம கூட அவன் இருந்தால் மற்றவனுகள் பயப்படுவானுகள் என்பதால் அவனை அடிக்கடி கவனித்தாக வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராசிக் குரூபில் யார் வேணுமெண்டாலும் சேரலாம். மட்டக்களப்பு வாவியை நோக்கி ஒருதரம் துப்பாக்கியால் சுட்டுக் காட்டினால் போதுமானது, இராணுவச் சீருடையும் எட்டாயிரம் ரூபா சம்பளமும் துப்பாக்கியும் தருவார்கள் என எனது நண்பர்கள் சொல்லுவார்கள்.இந்த நிலையில், புளட்,ரெலொ,எபி.ஆர்.எல்.எப் போன்றவர்களை மற்ற இயக்கம் எண்டு அழைக்க ஆரம்பித்தோம். மட்டக்களப்பில் இயக்கம் ,மற்ற இயக்கம் ,ராசிக் குழு இது மூன்றும் எங்களிடம் பிரபலமான வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில்  காமினி திஸ்ஸாநாயக்க செத்துபோகவும் தினமுரசில் அற்புதன் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தார். தினமுரசு ஒரு வாரப் பத்திரிகை. முதன் முதலில் கலர்புள்ளாக வந்த பத்திரிகை.  தினமுரசு முதல் இதழில் இருந்து எங்கள் வீட்டில் வாங்கி வந்தார்கள்.என் நண்பர்களிடமும் பிரபலமான ஒரே பேப்பர் அதுதான்.நடுப்பக்கத்தில் கலராக வரும் சினிமா கிசு கிசு வில் இருந்து அரசியல் கட்டுரைகள், செய்திகள் ,இராணூவ ஆய்வுகள், கல்லாறு சதீஸ் கதைகள் வரை உண்மையென்று நம்பிப் படித்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; தினமுரசு அளவில் கறுப்பு வெள்ளையில் இன்னொரு பத்திரிகையும் வந்தது அதை என் நண்பன் ஒருவனின் அப்பா வாங்கிப் படித்துவிட்டு  அலுமாரியின் மேல் வைத்து விடுவார். ஒளித்து வைக்கிறாரே என்ற ஆர்வத்தில் அதை எடுத்துப் படித்தோம் அதன் பெயர் சரிநிகர். நடுப்பக்க கிசுகிசுகளும் இயக்கம் பற்றிய கிளூகிளுப்புகளும் அதில் அவ்வளவாக இல்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வதில் படித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் நண்பனின் அப்பாவிடம் கேட்டம் ஏன் இதை மேல வைக்கிறீங்கள் என்று... இயக்ககாரரின் பேப்பர் என்றார். இயக்கமா மற்ற இயக்கமா என அவர் சொல்ல வில்லை. தினமுரசும் இயக்ககார்ட பேப்பர்தான் எனவும் சொன்னார். அதேபோல மற்ற இயக்கங்கள் இருகிற ரோட்டில போகும் போது 5 ரூபாவோ பத்துரூபாவோ வாங்கிப் போட்டு அவர்களும் பத்திரிகைகள் கொடுத்தார்கள். நாங்கள் ஐஸ்பழம் வாங்கி சூப்பிக் கொண்டும் போகும் வயசு என்பதால் எங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். இப்போது சின்ன சைஸ் பேப்பரெல்லாம் இயக்கங்கள்தான் அடிக்குது எண்ட முடிவுக்கு வந்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படியிருக்க எங்களுக்காக தினமுரசில் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரையென்ற வராலற்று தொடரை அற்புதன் ஆரம்பித்தார்.அதாவது எங்களுக்கா எண்டால் ஆயுதபோராட்டத்தை ஆரம்பித்தவர்களுக்கா இல்லை ஆயுதப் போரட்டதில் பிறந்தவர்களுக்காக. அந்த நேரதில் தற்கொலைத் தாக்குதலில் பலியான காமினியின் கொலையை இயக்கம்தான் செய்தது  எனப் பேசிக் கொண்டார்கள். அல்பிரட் துரையப்ப கொலையை யார் செய்தது என்பதில் ஆராம்பித்து நகரும் தமிழீழ வரலாற்று கிளுகிளுப்பு தொடருக்காக ஒவ்வொரு வியாழனும் நாங்கள் காத்திருந்தோம்.தினமுரசு வியாழனில்தான் கடைக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒருவேளை சம்மந்த சம்மந்தமில்லாமல் எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிரன் என எனக்கே அலுப்புத் தட்டுகிறது. ஆனால் எங்களுரில் எப்போதும் பத்திரிகையாளர்கள் சம்மந்த சம்மந்தமில்லா விசயங்களை  எழுதிக் கொண்டிருபார்கள். அதில் ஆகச் சிறபானது ராணுவ ஆயுவுகள். இராணுவம் பரந்தன் தாண்டி புதுகுடியிருப்பு போகும் வரை எழுதிய சில ஆய்வாளர்கள் ஆய்வதை நிறுத்திக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய எழுத்தாளர்....ஷோபாசக்தியின் F இயக்கம் என்ற கதையில் ஒரு இடத்தில் 1986இல் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார். காரை நகரில் இருந்து முன்னேறி வந்த ராணுவம் ஊறாத்துறை அந்தோணியார் கல்லூரியி முகாமிட்டது.அந்த இராணுவத்தை  ஒரு இயக்கம் சுற்றி வளைத்தது . 20 பெடியள் சிறிய ஆயுதங்களை வைத்து சண்டையிடுகின்றனர். ஒரு பெடியன் செத்து விழுகிறான். மேலதிக கொமண்டோகளை ஹெலியில் கொண்டுவந்து இறக்குகிறார்கள்.புதிய கொமாண்டோக்கள் முன்னேறிக் கடும் தாக்குதல் நடத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது முற்றுகைக்குள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிக்கத் தொடங்கினர் ஆனாலும்  அந்த இயக்கப் பெடியள் பின் வாங்காமல் சண்டையிட்டனர். அவர்கள் சண்டையிட்டு சாவதென தீர்மனித்திருக்க கூடும் என சொல்லும் அந்தகதையில்  சிறிது நேரத்தில் இன்னுமொரு இயக்கம்  வந்து மேலதிகமாக இறக்கப்பட்ட கொமாண்டோக்களை நோக்கி கடுமையாக தக்குதல் நடத்தி நிலை குலையச் செய்தது. மற்றுமொரு இயக்கம்  ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த இயக்கத்தோடு  இணைந்து தாக்குதல் நடத்தி காயப்பட்ட பெடியன்களைக் காப்பாற்றுகிறது என்பது போல் அந்தகதையில் வருகிறது. தோள் கொடுத்த தோழர்களுக்கு நன்றி என ஒரு இயக்கம் துண்டுபிரசுரமும் வெளியிட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஷோபாசக்தி இந்த சம்பவம் நடந்ததாகச் சொன்ன வருடத்திலும் அதற்க்கு சில வருடங்கள் முன்னும் பின்னுமாக பிறந்த எங்கள் தலை முறைக்கு ரணுவத்திற்க்கு எதிராக போராடியது என்றால் ஒரு இயக்கத்தைத்தான் தெரியும். எங்களில் பெரும்பாலானவர்களுக்கு தினமுரசுதான் வரலாறே சொன்னது. களத்தில் நின்ற சில பேரை சந்தித்து பேசிய போது சொன்னார்கள் நீங்கள் வாசித்த அந்த தொடரை நாங்களும் வாசித்தோமென. ஒரு வேளை அவர்களும் அந்த கிளுகிளுபூட்டும் தொடரை ஆயுதப் போராட்ட வரலாறு என வாசிதிருக்ககூடும்..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 20 பேர் அன்று சண்டையிட்ட ஆண்டிலும் அதற்க்கு முன்னும் பின்னுமாக   பிறந்த ஆயிரமாயிரம் பேர் எங்கள் தலைமுறையில் இராணுவத்திற்க்கு எதிராகப் போராடினார்கள்.முள்ளிவாய்க்காலில்  முற்றுகை வரும் வரை போராடினார்கள் தப்புவதற்க்கான வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டே போராடினார்கள்.  முன்னைபோலவே போராடியே சாவதென அவர்கள் முடிவெடுத்திருக்க கூடும் அல்லது அவர்களின் தளபதிகள் முடிவெடுத்திருக்க கூடும்......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;செய்தி 1 : இலங்கை இராணூவம் போரில் வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை அதிபர் நாடு திரும்பினார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிபரைக் கட்டித்தழுவி முத்தமிட்டு வரவேற்றார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;செய்தி 2 : கர்ணல் கருணா அல்லது அமைச்சர் வி.முரளிதரன் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டினார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;செய்தி 3 : புளட் சித்தார்த்தன், ஈபிஆர் எல் எப் சிறிதரன், தவிகூ ஆனந்தசங்கரி ஆகியோர் இந்திய தூதுவர்களைச் சந்தித்து விடுவிக்கப்பட மக்களை மீளமர்த்துவது குறித்து பேசினர்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-2607373556304175557?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/2607373556304175557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=2607373556304175557' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/2607373556304175557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/2607373556304175557'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/05/f.html' title='ஷோபாசக்தியின்  F இயக்கமும் நம் இயக்கமும்..'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8303346262720949187</id><published>2009-05-20T11:33:00.000-07:00</published><updated>2009-05-20T14:31:38.792-07:00</updated><title type='text'>தலைவனைத் தேடும் தமிழர்களே...</title><content type='html'>எப்போதுமே  எழுதிவிட்டு தலைப்பிடும் எனக்கு எழுதுவதற்க்கு முன்பே இந்தலைப்பு  வந்து உட்காந்து கொண்டது. தமிழனுக்கு எப்போதுமே தலைவன் தேவை. பாட்டுடைத் தலைவர்களின் வீரமும் காதலும் கலந்த வரலாறுகளில் கதைபேசி கதைபேசி கடந்து போவது எமக்கு பிடித்தமானதுதான். சின்ன வயதில் பாட்டி சொல்லும் கதைகளில் இருந்து விசயகாந்த் படங்கள் பார்க்க ஆரம்பித்த நாட்கள் வரை நமக்குள் கதாநாயக ஆதிக்கம்  கால் வைக்கிறது. அப்படி ஒரு கதா நாயகர் என பிரபாகரனை வரிந்து கட்டியிருக்கும்  என் தமிழ் உறவுகள் நிறைய நிறைய. எங்கள் எல்லோரும அவர்  வீரத்தை ஏற்படுத்தும் தலைவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;5 ம் வகுபில் தமிழீழ தேசம் வேண்டாமா? என 1990 இல் நான் பேச்சுப் போட்டியில் பேசியதக்கு பரிசாக  பிரபாகரனின் படம் ஒன்றும் 100 ரூபாவும் தந்தார்கள்.தலைவர் ஒரு புலியின் பக்கத்திலோ சிறுத்தையின் பக்கத்திலோ அமர்ந்திருக்கும் படம் அது.அந்த படமோ 100 ரூபாவோ இல்லை 5 ம் வகுபில் படித்த அந்த பெட்டை என்னை கண்வெட்டாமல் பார்த்தோ என்னை அத்தனை குசிபடுத்தியிருக்கவில்லை. அந்த படத்தின் பின்னால் அண்ணை கையெழுத்துப் போட்டிருந்தார். அந்த கையெழுத்துக்காக என்னை எல்லோரும் மொய்த்துக் கொண்டார்கள். மின்னியல் பிரதியெடுக்க முடியாத  அந்த நாளில்  மெல்லிய ரிசு பேப்பர் வைத்து அதை பிரதியெடுத்தவ்ர்கள் எத்தனை பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யாழ்ப்பாணத்தை விட்டு மட்டக்களப்பு வரும் போது எனது புத்தகங்களில் அதிக பக்கமுடைய கணிதப் புத்தகத்திற்குள் மறைத்து வைத்து இராணுவ பரிசோதனைகளைத் தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்புக்கு அந்த படத்தை கொண்டு வந்தேன். அம்மா பாடம் சொல்லித்தரும் போது அந்த படம் தவறி விழ பதறியடித்து  அதனைக் கிழித்து தீ வைத்தர் என் அம்மா.  ஆமி செக் பண்ணும் போது பிடித்தால் குடும்பத்தோட பிடிச்சுக்கொண்டு போவாங்கள் எண்ட பயம்தான். நான் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை . வாரம் தண்டி படிக்காமல் அடம்பிடித்தேன். அண்ணை எங்களுக்கு தலைவன், கதாநாயகன் ,ஒரு உந்துதல் எல்லாமும் தான்.&lt;br /&gt;      &lt;br /&gt;எங்களின் அண்ணையை பின்னாளில் எல்லோருமே தலைவர் என விழித்தார்கள். தலைவர் என்பது இன்னும் மிடுக்காக இருந்தது. நாங்கள் உரத்து சொன்னோம் தலைவன் இருக்கிறான் கலங்காதே தமிழீழம் பிறக்கும். அவன் காலத்தில் அதை வெல்வோம். அந்த தலைவன் தேசிய தலைவன் ஆகினான்.எங்களின் தலைவன் முன்னால் மேதகுவும் வந்து விழுந்தது. ஒரு மாதிரி அரசு( Demo State) உருவானது. இந்த இடைவெளியில் நம் தலைவர் தலமையிலான இயக்கம் ஒரு அரச படைகளுக்கான வளம் கொண்ட கொரில்லா போராட்ட அமைப்பு என்பதை நம்மில் பெருந்தொகையோர் மறந்தே போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ அசரின் அரச படைகளாகவும் அந்த  மாதிரி தேசதின் அதிபர் எங்களின் அண்ணை எனவும் உருவாகிப் போனது.வெளிநாடுகளில் இருந்து நிதியும் உள்நாட்டில் வரியும் கிடைக்கப்பெற்றது. மக்களும் சில பல போராளிகளுமே இந்த மதிரியை நம்ப ஆரம்பித்தார்கள்.இப்போது அந்த தேசத்தின் வீழ்ச்சியில் எல்லோருமே துவண்டு போயிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைபோல கடந்த 25 வருடங்களாக ஒரு திரைப் படத்தைப் போல பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டுக் காரருக்கு இந்த கிளைமாஸ் காட்சிகள் அதிர்ச்சியைத் தருகிறது. நிதானம் தவறுகிறார்கள். நெடுமாறன் அய்யா போன்றவர்களின் மிக  நிதானமான பதில்கள்தான் அவர்களை ஆசுவாசப் படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பின்னணியில் இப்போது எல்லோரும் தலைவரைத் தேடுகிறார்கள். நானும்தான் தேடுகிறேன். பிரபாகரன் என்கிற பெயரும்  அந்த முகமும் உருவமும் ஒவ்வொரு தமிழனையும் உறுதி கொள்ளச் செய்யும், வீரம் கொள்ளச் செய்யும். வீழ்ந்தவனை எழச் செய்யும் மந்திரமாகும். இது எங்கள் வரலாறும் வாழ்க்கையும்  இயல்பும். இது தமிழனின் இயல்பு . தலைவனின் வீரத்திலும் , கதைகளிலும் அவன் பார்வையிலும் வீறு கொண்டெழுவது எங்கள் பாரம்பரியம். வெளிநாடுகளில் இசங்கள் படித்தவர்கள் புதுக் கருத்தியல்களால் புது அறிவு பெற்று மறுகணமே எம் மறவர்களையும் மக்களையும் மாற்றுவதற்க்காக அவர்கள் செய்யும் இணையப் புரட்சிகளில் இவை மாறிவிடப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  -                                                  -                                              -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழனின் அரசை வீழ்த்திய வீர மன்னனாகவே ராஜபக்சே இருக்கிறார். துட்டகைமுனு எல்லாள மன்னை வீழ்த்தியது போல் என என் சிங்கள நண்பன் குறுஞ் சேதி கொழும்பில் இருந்து அனுப்புகிறான். (எல்லாளன் படை என்ற பெயரில் புலிகளின் குழுவொன்று யாழ்ப்பணத்தில் உலாவியதையும் கெமுனு படையணி சிங்கள ராணுவத்தில் இருப்பதையும் வைத்து இதைச் சொல்ல வில்லை) அவர்கள் இன்னமும் மன்னர் காலத்தில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நாட்டை வென்று ஒரே தேசமாக்கும் அந்த கணத்தில் எதிரி தேசத் தலைவன் அல்லது மன்னன் போரில் மாண்ட சேதி அவசியமாகிறது. எதிரி நாட்டு மன்னை போர்களத்தில் கொன்று வீழ்த்திய வெற்றிச் செய்தியை அறிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரி மன்னனை நேரடியாகக் கொல்வது வஞ்சகமகக் கொல்வது துட்டகைமுனு போல் தன் தாயைக் காட்டி மயக்கிக் எல்லாளனை கொன்றது போல.பெண்களை காட்டிச் சபலமுறச் செய்து கொல்வது என மன்னர் காலத்தில் பல முறைகள் இருபது போல இப்போது ஏதோ ஒரு உடலை பிரபாகரன் உடல் என கூறுவது கூட புது முறையாகலாம். ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்கிற சாதாரண தயாரிப்பாளரால் கமலை புஸ் மாதிரி ஆக்க முடியுமானால எத்தனை பேரிடம் காசு வாங்கிப் போர் நடத்தும் இலங்கையால் முடியாதா என்ன. அந்த உண்மை பொய்களுக்குள் நாம் சிக்குப் பட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல தேசங்களாக பிரிந்திருந்த இலங்கைத் தீவை பண்டாரவன்னியைக் கொன்றும் கண்டி மன்னனை கபடமாகக் கவிழ்த்தும் இறுதியாக ஒன்றுபடுத்தி ஒரே தேசமாகினான் ஆங்கிலேயன். இப்போதுதான் இலங்கை விடுதலை பெற்றதாக சிங்களவன் கூக்குரலிடுகிறான். அப்படியெனில் ஆங்கிலேயன்  வெளியேறியதும் இலங்கை இரண்டாக பிரிய தொடங்கியது என்பதை அவன் ஒத்துக் கொள்கிறான். அப்படி பிரிந்த தேசம் நம் தலைவன் தலைமையில் இரு நாடானது என்று அவன் நம்புகிறான்.  இப்போது அந்த தேசத்தை வென்றாகிவிட்டது.அந்த மக்களை அடிமையாக்கிவிட்டோம் என்பது அவனிடம் ஒளிந்து தெரியும் சேதி.&lt;br /&gt;&lt;br /&gt; இதே முல்லைத்தீவு சமர்க்களத்தில் பண்டார வன்னியனை ஆங்கிலேயருக்கு காக்கை வன்னியன் இனம் காட்டினான். அப்போது நெடில் கா செய்த வேலையை இப்போது குறில் க செய்திருக்கிறது. அப்படியானல் இது பிரபாகரனின் உடலா?  நம் தலைவன் போய் விட்டானா? உங்களுக்கு வாய்த்த தலைவன் எங்களுக்கு வாய்க்கவில்லையே என முத்துக்குமார் சொன்னானே அந்த தலைவனும் போய்விட்டானா? அழுகுரல்களும் பதட்டமாகும் குரல்களும் கடந்த  3 நாட்களாக என்னை உலுப்பிக் கொண்டேயிருந்தன. நானும் அழுது தெளிந்து பின்னர் மீண்டும் அதிர்ந்து இல்லை இது அவர் இல்லை என தன் நம்பிக்கை ஊட்டி ஆராய்ந்து ஆரய்ந்து.......&lt;br /&gt;&lt;br /&gt;-                                   -                                        -                                                        -&lt;br /&gt;&lt;br /&gt; கோடி தமிழர்கள் தலைவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்திய மற்றூம் உலக உளவுத் துறையை விட அதிகமாக இந்திய தமிழர்களும் உலகத் தமிழர்களும் பிரபாகரனைத் தேடுகிறார்கள். உண்மையில் பிரபாகரனின் மரணம் தமிழனின் மீது வீழும் அடி மிகப் பெரும் அடி. மண்சுமக்காமல்  மதுரையில் அடிவாங்கிய சிவபெருமானுக்கு விழுந்த அடி எல்லோருக்கும் விழுந்தது என்ற கதை போல இதுவும் எல்லோருக்கும் விழுந்த அடிதான். அதாற்காக அவரைத் தேடுவதில் நேரத்தையும் வளத்தையும் எங்கள் சிந்தனையையும் செலவிடுவது சிங்களவன் எதை எதிர்பார்த்தானோ அதைப் பரிசளிப்பதாகவே முடியும். இதுவரை  தான் செய்த கொலைகளையும் இப்போது செய்வதையும் இனிச் செய்யப் போவதையும் சிங்கள அரசு இதன் மூலம் திசை திருப்பி விடும்&lt;br /&gt;&lt;br /&gt;இது புலிகளின் வீழ்ச்சிதான். அவர்களின் அரசியல் இராணுவ பலகீனத்தின் வீழ்ச்சிதான்.  கொரில்லா அமைப்பு தன்னை அரசாக ஆசுவாசப் படுத்திக் கொண்டதின் வீழ்ச்சிதான். நாம் எல்லோரும் புலிகள் என்ற போராளி அமைப்பை  எமது தமிழ் தேசிய ராணுவமாக பார்த்து நமக்காக போராடச் சொன்னதன் விளைவால் உருவான வீழ்ச்சிதான். ஒன்று திரளாமல் இதுவரை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு   சாவின் விளிம்புக்கு மக்களும் நம் போரளிகளும் வந்த போது அவசரமாக கை கோர்த்தோமே....அதன் விளைவுதான்...இத்தனை இழப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை தளபதிகள், எத்தனை என் வயசு தோழர்களும் தோழிகளும். அக்காக்கள் அண்ணன்கள்.  நான் சமாதான காலத்துஇல் சந்தித்த எத்தனை அறிவாளிகள். ஆழுமை மிக்க போராளிகள். அய்யோ.......வெள்ளைக் கொடி ஏந்த வைத்து கொன்றார்களே. குப்பி கடித்தார்களே, எரிந்து மாண்டார்களே, இரசாயங்களில் உடல் வெந்தார்களே....கடைசி நான்கு நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள். பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் என கணக்கு வைக்கிறார்கள். இன்னமும் ஒளிந்து ஒளீந்து வெளியே வருபவர்களைக் கொன்று புதைக் கிறார்கள். விரும்பியும் விரும்பாமலும் போர் களத்தில் நின்ற எத்தனை பேர் மாண்டு போயிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளையும் போரட்டத்தையும் முப்பது வருடாமாகக் காத்த மக்கள் அதன் பலனை இப்போது கம்பி வேலிகளுக்குள் அனுபவிக்கிறார்கள். நாங்கள் கம்பியூட்டர் முன்னால் இருந்து தலைவரைத் தேடிக் கொண்டிருகிறோம். தலைவரும் அவரின் சில தளபதிகளும் போராளிகளும் ஏதோ ஒரு காட்டில் இருக்கக் கூடும். அது இப்போது எதற்க்கு இப்போது ஏன் தலைவரையும் புலிகளையும் தேடிக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் அவர்களைப் போராடவிட்டு வேடிக்கை பார்க்கவா? ஈழத்தமிழர் பிரச்சனையின் அரசியலை தமிழ் நட்டு  மக்களிடம் எடுது சென்று தெளிவூட்ட முடியாத தமிழக தமிழர்கள் தங்கள்  சக  தமிழர்களின் வீரதில் கிளுகிளுப்புக் கொள்ளாவா?&lt;br /&gt;&lt;br /&gt;   நாம் பேசிக் கொண்டிருக்கும் கணம் வரை  அழிவின் துயரின் விழிம்பில் நிற்க்கும் தமிழனை காப்பாற்ற ஐநா தலைமையில்  படை அனுப்பி இலங்கையில் சனநாயகத்தை உறுதிப் படுத்தி  தமிழர்கள் இனியும் இரத்தம் சிந்தாமல்  பாதுகாக்க தமிழகத்தில் ஓட்டு அரசியலுக்காக பிழைப்பு நடத்தும் கட்சி அரசியல் தாண்டிஒன்று படவேண்டும். உலகம் பூராவும் இருக்கும் தமிழர்கள் அணி திரண்டாக வேண்டிய இறுதிக் கணம் இது. உலகத்தால் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை தலைவனைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியானால் இனி உலகம் எதற்காக தாமதிக்கிறது. ஈழத் தமிழர்களின் விருப்பதை  கேட்குமாறு  இன்னும் வீச்சோடு  போராட வேண்டாமா.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்காக போராடிய இயக்கமும் தலைமையும் முற்றாக அழிந்த போது வீதிக்கு வந்து 2 வருடங்கள் வீட்டுக்குள் போக்கமல் வீதிகளிலேயே இருந்து விடுதலை பெற்ற அல்ஜீரியர்களைப் போல் போராடும் வலுவில் இலங்கையில் உள்ளவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் துப்பாக்கி முனைகளில் இருகிறார்கள். அவர்களுக்கு சாப்பாடு போடக்கூட ஆளில்லை. இப்போது வதை முகாமில் இருக்கும் அந்த மக்கள் போராளிகளுக்கு வருசக்கணக்கில் சாப்பாடு போட்டவர்கள். உங்கள் அனைவரையும் வீரம் பேச வைத்தவர்கள். இப்போது அவர்களுக்கு என்ன செய்யப் போக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ........ போய் வவுனியாவில நிக்கிற சனத்தை பாருங்கடா.....புலிகளை வலிமையாக ஆதரித்தவர்கள் போக முடியாது என்பது யதார்த்தம். நீங்களாவது போய் அவர்களுக்காக காசு சேருங்கள்  உதவுங்கள். வணங்கா மண் கப்பலுக்காக சேர்த்த பொருட்களை வவுனியா முகாமில் உள்ள மக்களுக்கு கொடுக்க   உலக வல்லரசுகளின் அனுமதியைக் கேளூங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில்  அடுத்து நிகழப் போவதுதான் பெரும் கோரம் , அழிவு,கொடுமை&lt;br /&gt;இதுவரைதான் நாம் தடுத்து நிறுத்தவில்லை. புலிகள் மக்களை தடுத்து வைதிருக்கிறார்கள் என்றார்கள். இப்போது..?&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து அனைவரும் வீதிக்கு வரவேண்டிய கடைசித் தருணம் இது.  இந்தியாவுக்கு வெளீயே இந்திய விடுதலைக்காக போராட்டம் நடத்திய நேதாஜிதானே தலைவனுக்கு முன்னுதாரணம்.அப்போது  இலங்கையில் அடுத்து நிகழப் போகும் அழிவைத் தடுக்க அணிதிரள ஏன் தாமதம். முதலில்  முகாம் களில் இருக்கும் 3 லட்சம் தமிழர்கள் அடுத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்தவின் அடுத்த அடக்குமுறை  தாக்குதல்கள் சிங்களவர்கள் பலரையும் கூட உலகத்தை நோக்கி அவலக் குரல் எழுப்ப வைக்கப் போகிறது. உலகை அழைத்து வருவதற்க்குச் சரியான அரசியல் வேலையைச் செய்வோம்.  தலைவனைத் தேடாமல் தமிழனைக் காக்க அரசியல் போராட்டம் செய்து உலகை நம் பக்கம்  இழுத்து வருவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8303346262720949187?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8303346262720949187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8303346262720949187' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8303346262720949187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8303346262720949187'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/05/blog-post.html' title='தலைவனைத் தேடும் தமிழர்களே...'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-159839252789785465</id><published>2009-05-01T16:05:00.000-07:00</published><updated>2009-05-01T17:35:44.937-07:00</updated><title type='text'>மே -3 உலக ஊடக தினம் - சிறீல்ங்காவில் மரணத்தின் நாள்</title><content type='html'>மே 3 ம் திகதி 2006 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்க்கு அருகில் ஊடக சுதந்திரத்திற்க்கான போராடமும்  கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான அஞ்சலியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஏறத்தாள 100 பேர் வரையில் கூடியிருந்தோம். சிவாரம்,நடேசன்,ரிச்சட் டி சொய்சா என இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் சிங்கள பத்திரிகையாளர்களின்  படங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருந்தன.  கடைசியாக கொல்லப்பட்டதால் சிவராமின் படம் பெரிதாக வைகப் பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 6.45 வரை மெழுகு வர்த்திகளைக் கையில் ஏந்தியபடி பத்திரிகைகாரர்கள் இணைந்திருக்க..சுனந்த தேசபிரிய உள்ளிட்டவர்கள் உரத்துக் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சனத், மஞ்சுள,சுனந்த,ஹராவ பத்திரிகை நண்பர்களின் சிங்களத்திலான கோஷங்களுக்கிடையில் தமிழ் கோஷங்கள் அடங்கிப் போயிருந்தன. தமிழ் பத்திரிகைக்காரகளின் எண்ணிக்கையும் குறைவுதனே..சிவராம் கொலைக்குப் பின்னர் தமிழ் பத்திரிகையாளர்களில் பெரும்பாலனாவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மீதி உள்ளவர்கள் தலைமறைவு வாழ்க்கையில் ....&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாதரன் நான் சிவாகுமார் ருஷாங்கன் ஆகியோர் போராட்டம் முடிந்ததும் பேசிய படி விடைபெற்றோம், ஆளுக்கொரு திசையில். இதற்கிடையில்  சுதந்திர ஊடக இயக்கம் எழுதுவதற்க்கும் பேசுவதற்க்குமான  உரிமையை வலியுறுத்தி அச்சடிக்கப்பட்ட வாசகங்களுடானான  ரீ-சேட்டுகளைக்  கொடுத்தார்கள் 150 ரூபா கொடுத்து அவற்றை வாங்கிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவராம் கொலையின் மர்மத்தை விலக்கி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட வேண்டுமென்பதே பிரதான கோரிக்கை. ஏனெனில் இதுவரை கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் கொலை விசாரணைகளில்  அதிக ஆதாரம் சிவராம் கொலையில் கிடைத்திருக்கிறது. புளட் இயக்க உறுப்பினரின் வாகனம்தான் கொலைக்கு பயன்படுத்தப் பட்டது என்பது கண்டுபிடிக்கப் பட்டு வாகனமும் கைப்பற்றப் பட்டது. சிவராமின் கைபேசியை வைத்திருந்த நபரை கண்டுபிடித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாராம் தமிழ்நெற்க்கு விரைவாக செய்தி அனுபுவதற்க்காக பல்வசதி கொண்ட விலையுயர்ந்த கைபேசி வைத்திருந்தார். கொலை செய்தவர்களோடு இருந்த ஒருவருக்கு அந்த கைபேசியில் விருப்பம் இருந்திருக்குப் போல அவர் அந்த கைபேசியை  ஆன் செய்து வைத்திருந்தார். சிவராம் இறந்து சில நாட்களில் அவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுக்கும் போதெல்லாம் அந்த இனிய பாடல் ஒலிக்கும். இதனை பல முறை காவல்துறைக்கு சொன்ன பின்னர் வேறு வழியில்லாமல் அந்த நபரை சில வாரம் கழித்து கைது செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா இதைவிட போதிய ஆதராங்கள் ஒரு கொலைவிசாரணைக்கு கிடைக்கது என்றாலும் கூட இலங்கை காவல்துறை ஆதாரங்களைத் தேடியது. இந்த சூழலில் சிவாரம் கொலை நடந்து ஒரு வருடத்தின் பின்னர் நாம் போராட்டம் நடத்தினோம்(&lt;span style="font-style: italic;"&gt; இப்ப நாலு வருசமாச்சு.. கடதலுக்கு பயன்பட்ட ஜீப் வைத்திருந்தவர் செல்போன் வைத்திருந்தவர் இருவரையும் விடுவித்துவிட்டார்கள் ஆனல் இன்னமும் ஆதாரம் தேடுகிறார்களாம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;போராடம் முடிந்து எட்டு மணியளவில் வெள்ளவத்தைக்கு  வந்து சேர்ந்த போது தொலைபேசி அலறியது. இப்ப 7 மணிக்கு யாழ்ப்பாணம் உதயன் பேப்பருக்குள் புகுந்து சுட்டிருக்கிறார்கள். 2 பேர் சரியாம்( கொல்லப்பட்டார்கள் என்பதன் கொலோக்கியல்) எடிற்றோறியலுக்குள்ளும் புகுந்து சுட்டிருகிறார்கள். பின்புறமாக இருந்த எடிற்றோறீயலுக்குள் போவதற்க்குள் அங்கிருந்தவர்கள் தப்பித்துவிட்டதால் சாவகாசமாக கணணிகளூக்கு சுட்டு விட்டு கொலையாளிகள் கிளம்பிச் சென்றார்கள் என்ற தகவல் எனக்கு சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நிமலராஜன்,நடேசன்,சிவராம் உள்ளீடவர்களின் கொலைகளுக்காவும் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் பட்டதற்க்காகவும் போராட்டம்  செய்து முடித்த ஊடகதினதின் இரவு 7 மணிக்கு கொலை நடக்குது. நடேசன் கொல்லப்பட்டு ஒருவருடத்தில்  சிவராம் கொல்லப் பட்டார். சிவாராம் கொலை செய்யப் பட்டு சரியாக ஒரு வருடமும்  4 நாட்களும் ஆன நிலையில் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து கொலை....&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்னுமோர் ஊடக தினம் வருகிறது.. இலங்கை அரசு போர் வெற்றியின் போதையில் இருக்கும் ஒரு நிலையில் முன்னணி ஊடகவியலாளர்கள் செயற்பாட்டாளர்கள் எல்லாம் நட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில்  உரத்து ஊடக சுதந்திரம் பற்றி கத்துவதற்க்கு அங்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மகிந்த அரசே ஏதாவதுவிழா எடுக்கக் கூடும் சிறந்த ஊடகவியலாளருக்கு விருது  கொடுக்கக் கூடும். வன்னியில் இருந்து ரூபவாகினிக்கு  செய்திகள் வழங்கியவ்ர் இலங்கையில் சிறந்த பத்திரிகையாலாளராக தேர்ந்தெடுகப் படலாம். ஏற்கனவே இலங்கை அரசின் பல பரிசுகாளைப் பெற்ற" லங்கரட்னா" என்ர இலங்கையின் உயரிய விருதுபெற்ற  என் . ராம்  (இந்து என்ற சென்னை ஆங்கில பத்திரிகை ஆசிரியர்) ஏதும் விருதுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அங்கே கடந்த இரண்டு வருடத்தில் 60 முதன்மைப் பத்திரிகையாளர்கள் வெளியேறியிருக்கிரார்கள். இவர்களில் பாதிக்கு மேல் சிங்களவர்கள். லசந்த விக்கிரமதுங்க வரை 19 ஊடகப் பணீயாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். திசநாயகம் ஜசிதரன், வளர்மதி என சிறையில் அடைக்கப்டிருக்கும். டைக்கபட்டு விடுதலையான  விசாரிக்கப்பட்ட  கடத்தப்பட்ட  தொடர்ந்தும் அச்சுறுத்தப் படும் பத்திரிகையாளர்களின் எண்ணிகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாவை எதிர்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி நிற்க்கும் என் பத்திரிகைத் துறை தோழர்களூக்கு வாழ்த்துக்கள். நமீதா நெஞ்சு நிமிர்த்தி நிற்க்கும் புகைப்படத்தோடு கிசுகிசுகும் பத்திரிகையாளரும் சேர்த்திதாணெ எண்டு கேட்டு அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம். மனிதத்தை தொலைத்துவிடாத பத்திரிகைக்காரனுக்கு.....அவன் கிசு கிசு எழுதுபவனாலும் சரி இந்து நாளிதழில் வேலை செய்பவனாக இருந்தாலும் சரி....ஊடகதினத்தில் உறூதியேற்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-159839252789785465?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/159839252789785465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=159839252789785465' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/159839252789785465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/159839252789785465'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/05/3.html' title='மே -3 உலக ஊடக தினம் - சிறீல்ங்காவில் மரணத்தின் நாள்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-6668229860610542156</id><published>2009-04-29T12:08:00.000-07:00</published><updated>2009-05-02T15:29:45.340-07:00</updated><title type='text'>சிறீலங்கா-கொலையான ஒரு பத்திரிகைகாரன் -சிவராம்- 1</title><content type='html'>பாகம் -1&lt;br /&gt;2005 ஏப்பிரல் மாதம் 28 ம் திகதி மதியம் முகமாலைக்குச் செல்லும் கடைசி தொடர்புப் பேருந்தில் தொற்றிக் கொண்டு   யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படுகிறேன். மூன்று பேருந்து மாறி 90 கி.மீ தூரம் உள்ள வவுனியாவுக்கு வந்த போது மாலைதண்டி இருட்டு  மெல்ல எட்டிப் பாக்கிறது. ராணுவச் சோதனை, புலிகளின் சோதனை பின்னர் மீண்டும் ராணுவச் சோதனை என்று ஒவ்வொன்றிலும் குறைந்தது அரைமணி நேரம் போக அவசர அவசரமாக 5 மணிக்கு பாதை மூடுவதற்க்குள் ஓமந்தை கடந்து ஒரு வெற்றிக் களிப்போடு இப்போது வவுனியா வந்திருகிறேன். மாலை 5 மணிக்கு ராணுவம் எல்லையில் பாதையை மூடினால் பிரக்கு இரவு முழுவதும் எல்லையில் காத்திருந்து காலை 7 மணிக்கு பாதை திறந்த பின்னர்தான் வரவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு செல்லும் பேருந்தில் இரவு 7.45 க்கு பயணிக்கும்  முடிவோடு வழக்கமாக வவுனியாவில் சந்திக்கும் பத்திரிக்கை நண்பன் மகாமுனியைப் பார்த்து சில பல கதைகளைப் பேசி சிவராம் வவுனியாவின் ஒரு பத்திரிகையாளர் பற்றி சொன்ன கிண்டல் ஒன்றைச் சொல்லி மகாமுனியை குசிப் படுத்திவிட்டு கொழும்பு பஸ்ஸில் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;9 மணிக்கு அனுராதபுரத்தில் ஏறிய சிங்கள பெண்களில் யாராவது காலியாக இருக்கும் என் பக்கத்து இருக்கையில் அமருவார்களா என்ற என் எதிர்பார்ப்பு வழமை போலவே பொய்த்துப்போக ஒரு 'இஸ்லாமிய வயோதிபர் வந்து உட்காந்தார். தூக்கம் வரவில்லை. தமிழ்நாட்டுப்(இந்திய) பேருந்துகள் போல அங்கே பேருந்தில் சின்னதிரை இல்லை. வேகமாக செல்லும் பேருந்தின்  வெளியே வீதியோரத்தில் சிங்கள இளைஞர்கள் கூட்டம் போட்டுக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். வீதி விளக்குகள் பிரகாசமாக இருந்தன. சிங்களப் பெண்களின் சிரிபொலி காற்றினை ஊடறுத்து கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 12 மணி எனக்கு இன்னமும் துக்கம் வரவில்லை. அனுராதபுரம் வரும் வரை ஒலித்த தமிழ் பாடல் இப்போது நிறுத்தப்பட்டு சிங்கள மெல்லிசை பாடல்  இதமாக பேருந்தினுள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. என் செல்பேசி மணியடிக்க ஆரம்பித்தது. நண்பர் சிவகுமாரின் அழைப்பின் போது மட்டும் பிரத்தியோகமாக ஒலிக்கும் ஒலி அது.&lt;br /&gt;'என்ன சிவா அண்ணா இந்த நேரத்தில்'&lt;br /&gt;'சோமி.... சிவராம கடத்திப் போட்டாங்கள். . . .'&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் 'பம்பலபிட்டி ரெஸ்ரொரண்ட் ' வாசலில் வைத்து இரவு பத்தரை மணியளவில்  சிவாரமை கடத்திச் சென்று விட்டர்கள்.கூட இரண்டு சிங்களப் பத்திரிகையாளர்கள் இருந்தார்களாம். சிவராம் தண்ணியடித்திருந்தாராம். ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது பேசிக்கொண்டே  பஸ்நிறுத்தம் அருகே வந்தப்போது ஒரு பஜிறோ வாகனதில் தூக்கிப் போட்டுக் கோண்டு போய் விட்டர்களாம் என்று சிவகுமார் விபரம் சொன்னார். சிவராம் தண்ணியடிக்க ஆரம்பித்தால் ஒரு முடிவு வரை அடிப்பார். எல்லோரும் போதும் என்று முடிக்கிறபோது  இரண்டு லாட்ஜ் கொண்டுவரச் சொல்லி குடிப்பார். அன்றும் அப்படித்தான் குடித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமி முடிந்தவரை  சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும்  சொல்லியாகிவிட்டது. சிங்களப் பத்திரிகையாளர்கள் அரசியல் அமைப்பைச் சார்ந்தவர்கள் அனைவரும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறனர். என்று சொல்லி சிவா அண்ணா தொடர்பைத் துண்டித்தார். எனக்கு பதட்டத்தின் உச்சத்தில் வியர்க்க ஆரம்பித்தது. நானும் என் பங்குக்கு  யார் யாரோவிடமெல்லாம் பேசினேன். ஒரு உலகறிந்த பத்திரிகைக் காரன், முன்னாள் போரளி, உலகின் பல நாட்டின் இராஜதந்திரிகளொடு நேரடித் தொடர்பில் இருந்த ஒருவர் சிவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்து படித்த சிவாராம் பல்கலைக்கழக படிப்பை இடை நிறுத்திவிட்டு. புளட் இயக்கத்தில் இணந்து அதன் அரசியல் பிரிவின் முதலாவது  பொதுச் செயலாளராக பதவியேற்று பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி பத்திரிகைக்காரனாகி சராசரிகளைத் தாண்டி அரசியல், இலக்கிய,கருத்தியல்,ராணுவ,புவியியல் தளங்களில் மிக ஆழ்ந்த ஞானம் கொண்டு.. . . .. புலிகளை  விமர்சித்து பின்னர் தீர்க்காமாக ஆதரித்து..சிங்கள தமிழ் ஆங்கில ஊடகவியாலளர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும்  ஆராவாரத்திற்குரியாவராகி.....  சிவராம் பற்றி நினைத்துக் கொண்டே அவ்வப்போது சிவா அண்ணாவிடம் நிலமையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சிவாரம் என்ற பெயர் என் பள்ளிகூடக் காலங்களில்தான் அறிமுகமானது. ஒயாத அலைகள் தாக்குதல்களில் புலிகள் வெற்றிகளைப் பெற்று இலங்கைப் படைகளை ஓட ஓட விரட்டிய நாட்களில் நாங்கள் பி.பி.சி மற்றும் வெரிட்டாஸ் தமிழ்பணி செய்திகளை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்போம். தினமுரசு எங்களின் வெற்றிக் களிப்புக்கு புலிகள் பற்றிய நிறையச் செய்திகளைத் தந்தது. தினமுரசு ஆசிரியர் அற்புதன் எங்களின் ஹிரோ ஆனது போலவே பின்னாளில் போர் பற்றிய செய்திகளையும்  நகர்வுகளையும் பி.பி.சி யில் தொடர்ந்து சொல்லும் ராணுவ ஆய்வளர் சிவராமும் எங்களுக்கு பரிச்சயமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு சந்தைக்கு அருகில் உள்ள சுப்பையா வீதியில் எங்கள் வீட்டுக்கு பக்கதிலும் எதிரிலுமாக சிவராமின்  சகோதரிகளின் வீடுகள் இருந்தன. வாவியோரதில் சுப்பையா வீதிக்கும் லேடிமானிங் வீதிக்கும் இடையில் இருந்த வீட்டில்தான்  சிவராமின் அம்மா இருந்தார். எபோதாவது அங்கு வந்து செல்லும் சிவராமை தெருவில் வைத்து என் பக்கத்து வீட்டு அங்கிள் அடையாளம் காடினார்.அதன் பின்னர்  மட்டகளப்பில் நடந்த சில கூட்டங்களில் எட்ட நின்று சிவராமை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சினியர் கனவுகளோடு இருந்த எனக்குள் பத்திரிகை மீதான பரவசங்கள் ஏற்பட்ட அந்த நாடகளில் மட்டக்களப்பில் அரிதாய் நடக்கும் சில நிகழ்வுகளில் சிவராமைப் பார்த்திருகிறேன், ஆனால் பேசியதில்லை. கால ஓட்டதில் என் கணிதத்துறை கலைந்து  பொறியாளர் ஆகும் எண்ணம் தூராமாகி பத்திரிகைத் துறைக்குள் வந்து சேர்ந்து விட்டபின்னர் யாழ் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் மாவட்ட ராணூவத் தளபதிசரத்பொன்சேகா யாழ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில்  ஒரு ரகசியக் கூட்டம் கூட்டுகிறார்.  இந்த செய்தி எனக்கு பழக்கமான ஒரு கப்டன் மூலம் கிடைகப்பெற அவனின் உதவியோடு அந்த கூட்டம் நடைபெற்ற இடத்திற்க்கு வந்து  ராணுவத்தினரோடு உட்கார்ந்து கொள்கிறேன், யாழ் மாவட்ட கல்வித்துறையினருக்கும் ராணுவத்தினருக்குமான சந்திப்பு அது. மிகவும் இரகசியமாக நடந்த அந்த சந்திப்பில் சரத் பொன்சேக்கா பேசியவைகளை நான் பதிவு செய்துக் கொண்டேன். சமாதான காலம் என்பதால் ராணுவதினரோடு நமக்கிருந்த பழக்கம் காரணமாக உள்நுழைய முடிந்தது.மற்றது துணைக்குழுகளும் இருந்ததால் என்னை அவர்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. அந்த கப்டனுக்கும் வேறு இருவருக்கும் மட்டுமே நான் பத்திரிகைக் காரன் என்பது தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஆயுதங்களை கைவிடும் வரை யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுக்காப்பு பகுதிகளில் இருக்கும் பொதுக் கட்டடங்கள் மற்றும் பாடசாலைகளை விட்டு ராணுவம் வெளியேறாது என்ற சரத் பொன்சேக்காவின்  பேச்சு அடுத் நாள் தினக் குரலில் வெளியாகிறது. ஏனைய பத்திரிகைகளுக்கு இந்த செய்தி முழுமையாக கிடைக்காததால்  சரத் பொன்சேகா கல்வித்துறயினரை  சந்தித்துப் பேசினார் என பெட்டிச் செய்தி போட்டார்கள். பேச்சுவார்த்தை நடந்து வந்த அந்தகாலப் பகுதியில் மக்கள் வாழ்விடங்களிலும் பொது இடங்களிலும் இருந்து ராணுவம் வெளியேறும் என அரசாங்கம் புலிகளிடம் கூறியிருந்தது. இது பேச்சு வார்த்தையிலும் உடன் பாடாகியிருந்தது. இந்த நிலையில் சரத் பொன்சேக்கா வின் இந்த கருத்து ராணுவத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்திதான் என் வாழ்க்கையில் ஊடகத் துறைக் கதவுகளை அகலத் திறந்தது. நண்பர் தயாபரன் அழைத்தார்.&lt;br /&gt;'சோமி சிவாரமண்ணை உன்னைப் பாக்கோணுமாம்.இப்பவே உன்னைக் கூட்டி வரச்சொன்னார்.'&lt;br /&gt;'இல்ல இப்ப ஒவிசில இருகிறன் இந்த  செய்தியை எழுதிக் குடுத்திட்டன்  எண்டால் வேலை முடிஞ்சிடும் நான் வாரன் .'&lt;br /&gt;'கட்டாயம் வா ஆள் உன்ர சரத் பொன்சேகா செய்தியை பார்த்துட்டுதான் உன்னை கூப்பிட்டுது. என்ரார் தாயபரன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினகுரலின் பிரதான தலைப்பு செய்தியாக என் செய்தியப் போட்டிருந்தார்கள்.ஒரு செய்தியின் மூலம் சிவராமே என்னை அழைக்கிறார் என்ற பரவசம் உள்நுழைய சிவராமைச் சந்தித்தேன். சாப்பாடுகளின் மீது அதிகம் பிரியம் கொண்டவரான சிவாரம் ஏதோ ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். கூடவே பருத்தித்துறையில் பிரபலமான எள்ளுப்பாகு ஒரு பைநிறைய அருகில் இருந்தது.  என்னையும் சாப்பிடும் படி சொல்லி அவரும் சில பல உருண்டைகளை உள்ளே தள்ளினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமிதரன் நீ தினகுரல விட்டுத்து என்னோட சேந்து வேலை செய்யிறியா..?  உன்ர நியூஸ் பாத்தன். இவனுகள் ஆருக்கும் தகவல் கூட தெரியா நிலையில நீ நியுஸ் போட்டாய்..ஒரு பத்திரிகைக் காரனுக்கு எல்லப்பக்கதிலையும் ஆள் இருக்கோணும் அப்பதான் நியூஸ் தவறாம கிடைக்கும். சமதானத்தை குழப்புறதில ராணுவம் எப்பிடி வேலை செய்யுது. மக்கள் அமைதிக்காலத்தை அனுபவிக்கிராங்களா? நம்மட ஊர் ட  அபிவிருத்தி ,வளங்கள் ,கலை இதுகளப் பத்தியெல்லம்  நாம வெளிய கொண்டு வரணும். உனக்கு தமிழ் நெற்றில வேலை செய்ய் விருப்பமா எண்டார். நான் உடனே  இல்லை...அதன் மீதான அடையளாம் எனக்கு பிரச்சனையாக இருக்கும் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. நீ அதுக்கு வேலை செய்ய வேணாம். நாங்கள் தொடங்கியிருக்கிற நோர்த் ஈஸ்டன் ஹெரல் பேப்பருக்கு வேலை செய். நான் யோசித்தேன். சோமிதரன்..நீ ஒரு பத்திரிகைகாரனாக இருகிரதெண்டால்  முதல்ல சுதந்திரமான பத்திரிகைகாரனா வா...தினகுரல்ல இருந்து வெளிய வந்து "பிறீலான்ஸ்" ஆக இரு .இல்லாடி காலம் முழுவதும் எதோ ஒரு பத்திரிகையில இருந்து குப்பை கொட்ட வேண்டியதுதான். யோசிச்சுப் போட்டு நாளைக்கு சொல்லு... சிவரமிடமிருந்து விடைபெற்றேன்...மேலும் இரண்டு எள்ளுபாகுகளை உள்ளே தள்ளிக் கொண்டு கணனியில் தான் எழுதிய கட்டுரையை தொடர்ந்தார் சிவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் சிவராமோடு ம் , திசநாயகத்தோடும் இணைந்து நோர்த் ஈஸ்டன் ஹெரல்டில்  பணீயாற்றுகையில்  நிறைய விசயங்களை வெளியே கொண்டுவர சிவராம் என்னைத் தூண்டினார். வழுகையறு என்று ஒரு ஆறு யாழ்ப்பாணத்தில் ஓடுது அதைப் பற்றி எழுது என்பார். அகதிகளாக உயர் பாதுக்காப்பு வலையத்தில் இருந்து இடம் பெயர்ந்தவரகள் குறித்து எழுது என்பார். சிவராமின் ஊக்கம் என்னை நோர்த் ஈஸ்டர் ஹெரல்ட் ஆங்கிலப் பத்திரிகை தாண்டி தினகுரல் உட்பட பல பத்திரிகைகளில் எழுத தூண்டியது. பிபிசி யோடு இனைந்து அவர்களின்  செய்தி ஆவணவிவரண படத்தில் பணியாற்றுவதற்க்கான வாய்ப்புக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டுரைக்கான விரங்களை சேகரித்து எழுதினால். அதில் பல குறைகள் சொல்வார். இது காணாது போய் இன்னும் விசயம் தேடு என்பார்.  கேள்விகளாய் கேட்பார். அவரின் கேள்விகள் பின்னர் எனது கேள்விகளாகின. நான் ஒரு கட்டுரைக்காக மாதக் கணக்கில் உழைக்கும் நிலையைக் கூட உருவாக்கியது. உதாரணமாக வழுக்கையாறு பற்றிய காட்டுரையை எழுதி முடிக்க 6 மாதம் ஆனது. உண்மையில் சிவராம் யாருக்கும் எதையும் நேரடியாக கற்றுத் தர மாட்டார். தனக்கிக்ருக்கும் தொடர்புகளை ஒருக்காலும் சொல்ல மாட்டார். ஆனால் அவருக்கு இல்லாத சில இடங்களில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வலுவையும் ஒரு முழுமையான விவரணக் கட்டுரையை எழுதுவதற்க்கான அர்பணிப்பையும் தேவையான உழைபின் அளவையும் அவர் உணர்த்தியபடியே இருப்பார். உண்மையில் உரு பத்திரிகைக்கரன் எனபன் செய்தி சேகரிப்பவன் மட்டுமல்ல அவன் தினம் தினம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டியவன் எனபதை அவர் உணர்த்துகிறவராகவே எனக்கு இருந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சாதாரணமானவர்களை,  பத்திரிகையியலுக்கு புதியவர்களை பத்திரிகைக்காராக்கிய பங்கு சிவராமுக்குரியது. ஆனால் கொஞ்சம் போதையேறினால்...இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களின் தலைகள் உருள ஆரம்பிக்கும்.  நான் எழுதிய சில கட்டுரைகள் பற்றி யாரவது நன்றாக சொன்னால் சிவராமுக்குக் குஷி வந்து என்னை அழைப்பார். நான் அப்போதெல்லாம் மது அருந்துவதில்லை. ஒரு பெப்சி யோடு உட்காந்திருப்பேன். எனக்காக பார்ட்டி என்று கூறி சிவராம் குடிக்க ஆரம்பிப்பார். சமயத்தில் திசநாயகம் அல்லது வீரகேசரி தேவராஜ் வருவார்கள். குறிப்பாக கிழக்கிலங்கை செய்தியாளர்களை காச்சியெடுப்பார்.  ஒரு காட்டுரை பத்திரிகையில் எப்பிடி எழுதக்கூடாது என்பதற்க்கான உதாரணங்களாக சிலரது பெயர்களைச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் கட்டுரை எழுதுவார்கள். என்று விவரிப்பார். ஆனால் அவருக்கு எல்லார் மீதும் நட்பு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனது சிவாராம் பற்றிய நினைவுகளில் ஓடிக் கொண்டிருக்கும் போது. கொழும்பு  பேருந்து நிலையத்தில் நான் வந்த பேருந்து நிறுத்தப் பட்டது. நள்ளிரவில்  களுத்துறை பஸ்ஸில் ஏறி கல்கிசையில் இருக்கும் சிவகுமார் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சிவா அண்ணா விழித்தே இருந்தார். விடிய விடிய நானும் சிவா அண்ணாவும் மற்றவர்களோடு தொட்ர்பு கொண்ட படியே இருந்தோம். காலை 6 மணிக்கு பத்திரிகையளர் புத்திக வீரசிங்க தொடர்பு கொண்டார்.   இலங்கைப் பாரளுமன்றத்துக்கு பக்கத்தில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதனைப் பார்ப்பதற்க்காக புறப்படுகிறேன். பொலிசார் அங்கு இருகிறார்கள். தமிழ் பத்திரிகையாளர்கள் யாரும் இப்போது வர வேண்டாம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு பதட்டம் .....கடத்தியவர்கள் சிவரமைக் கொன்று விட்டர்களோ?  அடுத்து வந்த அரை மணி நேரத்தில் நாங்கள் நுகேகொடையில்  காத்திருக்கிறோம். புத்திக்காவின் அழைப்பு வருகிறது. அவரின் குரல் உடைகிறது. அது சிவராமின் உடல்தான். தலையில் சுட்டுள்ளார்கள் போல இருக்கு........ ... . . .,.&lt;br /&gt;&lt;br /&gt;90 இல் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளார் ரிச்சட் டி சொய்சாவின் உடலை இனம் காட்டிய  சிவராமின் உடல் இன்று இன்னொருவரால் இனம் காட்டப் படுகிறது.ஆட்சியும் , கட்சிகளும் மட்டுமே அரசியலில் மாறுகின்றன. அதிகாரத்தை எதிர்த்து ஒடுக்குமுறைக் கெதிராக போராடுபவர்களின் நிலையும் மக்களின் நிலையும்  மாறவில்லை. இலங்கை முழுவது அதிர்ச்சிக் கண்டன அறிக்கைகள் வெளீயாகின்றது. அடுத்து வந்த சில மணி நேரத்தில் சிவராமின் உடல் கிடந்த இடம் ஊடகக்காரர்களாலும் பொலிஸாலும் முற்றுகைக்குள்ளாகிறது. சிவராமுக்கு நெருக்கமான  கிழக்கிலங்கைச் செய்தியாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு வருடதினுள் இப்போது சிவராம் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் வருவதற்க்கு முன்னமே முதல் ஆட்களாக சிவகுமார்,குருபரன் ஆகியோரோடு  நானும் சென்றேன். உயரமான் ஒரு வீரனைப் போன்ற தோற்றமளிக்கும் அந்த உடல் மல்லாந்து கிடந்தது.உறைந்தும் உறையாமலும் இரத்தம் பரவியிருக்கிறது அவரின் தலையெங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவராம் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பத்திரிகையாளன் எவ்வளவு கற்க வேண்டும் எவ்வளவு தேடல் கொண்டிருக்க வேண்டும்,எத்தகைய பணியை எந்த நிலையில் ஆற்ற வேணும் என்பதை அடுத்த தலை முறைக்கு உணர்த்தியவர் சிவராம்.சிங்களவர்களாலும் தமிழர்களாலும் மிகவும் அறியப்பட்ட பல்மொழி புலமை மிகு ஆளுமையின் மூளை சிதறியிருந்தது..................&lt;br /&gt;&lt;br /&gt;சிவராமின் மகளை அழைத்து வருகிறார்கள். இலங்கை பாரளுமன்றத்தை நோக்கி தலை வைத்து மல்லாந்திருந்த சிவராமின் உடலின் மீது போர்த்தப் பட்டிருந்த துணியை விலக்குகிறார்கள். ஒரு பத்திரிகையாளனின் மகள் கதறிய கதறல் இலங்கைப் பாராளுமன்றின் தோட்டக்காரன் காதுவரை கேட்டிருக்கக்கூடும். சிவராம் என்கிற பத்திரிகைகாரனின் நிரந்தரமான இழப்பின் தொடர் அவலத்தை அவனின் குடும்பம் சுமக்க இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவராமின் உடல் காவல் துறையினரால் வாகனத்தில் ஏற்றப் படுகிறது. 6 அடுக்குப் பாதுக்காபு நிறைந்த இலங்கையின் பாரளுமன்றதின் அருகில் மிகத் துணிகரமாக தூக்கியெறியப்பட்ட பத்திரிகையாளனின் உடல் நாடளுமன்ற வளாகத்தைத் தாண்டி பயணீக்கிறது.உலகின் பல நாடுகளில் இருந்து கண்டணக் அறிக்கைகளூம் அனுதாபங்களும் வருகீரது. வழமை போலவே இலங்கை அரசு விசாரனைக் குழுவை அமைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரிச்சட் டி சொய்சா, யாழ்பாணத்தில் கொல்லப்பட்ட நிமலராஜன் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட நடேசன் போனற பத்திரிகையாளர்களின் கொலைகளைப் போலவே முற்றுப் பெறாத விசாரனைக்கான ஒரு குழு அமைக்கப் படுகிறது.கல்கிசையில் உள்ள சிவராமின் வீட்டினைச் சுற்றி ஏராளமான இரணுவ மற்றும் துணைபடகளின் உளவுத்துறைகள் காத்திருகின்றன. உடல் வீட்டினுள் கொண்டு செல்லப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;29 ம் திகதி அதிகாலையிலேயே சிவராமின் உடல் அந்த இடத்தில் இருப்பது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது அதாவது 28 ம் திகதி 10.30 க்கு  பம்பலபிட்டியில் கடத்தப்பட்ட சிவராம் 29ம் திகதி 1.30 இற்க்கு  கடத்தப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீ க்கு அப்பால் இருக்கும் பாரளுமன்றத்திற்க்கு அருகில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  கண்டவர்கள் காவற்துறைக்கு தகவல் கொடுக்க காவல் துறை அதிகலாஇயில் உடலை கைபெற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இந்த கொலைத் திட்டத்தை நிறைவேற்றியவர்கள் இரண்டரை மணி நேரம் சிவராமை உயிரோடு வைத்திருந்திருக்கிறார்கள். குடிக்கும்போது சிவராம் பேசுவார் பின்னர் அதிகமாக குடித்து மட்டையாகுவதுதான் பெரும்பாலும் அவரின் வழக்கம். அவரை நல்ல போதையில் கடத்திச் சென்றவர்கள் அவரின் போதையை தெளிய வைக்க நினைத்திருபார்கள் போல. அவரின் உடலுக்கு அருகில் இரத்தம் தோய்ந்த தயிர் சட்டி இருந்தது. அவருக்கு தயிர் ஊட்டி போதை தணிக்க முனைந்திருபார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் பேசாலம் என்பதின் அர்த்தம் குடித்துக் கொண்டே பேசுவதுதான் என்பதை எனக்கு முதலின் தெளிவித்தவர் சிவராம். குடி என்பது கூட சேர்ந்து குடிப்பவரைப் பொறுத்தே அதன் அற்புதம் தெரியும் என சிவராம் சொல்வார். உண்மைதான் எல்லோரோடும் குடித்துவிட முடியாது. சிவாரம் இன்று யாரோடு குடிப்பது என தீர்மானித்து வீட்டில் இருந்து புறப்படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;சிவராமின் உடல் மட்டக்களப்புக்கு கொண்டு செல்வதற்க்கான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அவரின் சொந்த மண்ணில்  தனது உடல் புதைக்கப் பட வேண்டும் என்ர அவரின் ஆசையை நிரைவேற்ற அரசிடமும் ராணுவத்திடமும்  அதிக அனுமதிகலைப் பெறவேண்டியிருந்தது.எனில் எங்கள் மண்ணியில்  சுடலையில் கூட ராணுவம் முகாம் அமைதிருந்தது.மரணித்த பின்னரும் ராணுவ அனுமதியோடுதான் மயானதிற்க்குள் செல்ல முடியும்.....&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-6668229860610542156?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/6668229860610542156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=6668229860610542156' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/6668229860610542156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/6668229860610542156'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/04/1.html' title='சிறீலங்கா-கொலையான ஒரு பத்திரிகைகாரன் -சிவராம்- 1'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-534020391616509159</id><published>2009-04-21T11:34:00.000-07:00</published><updated>2009-04-21T11:45:49.118-07:00</updated><title type='text'>இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் - இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகிறார்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span class="palmcoast_gray_block_text style42"&gt;&lt;span class="style49 style29 style28"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;                                                                            &lt;table width="36" align="left" border="0" cellpadding="5" cellspacing="0"&gt;                             &lt;tbody&gt;&lt;tr&gt;                               &lt;td width="36"&gt;&lt;span style="font-family:Latha;font-size:78%;color:#000000;"&gt;&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/sarathi-200.jpg" style="border: 0px dotted rgb(255, 153, 51);" align="left" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/td&gt;                             &lt;/tr&gt;                           &lt;/tbody&gt;&lt;/table&gt;                             &lt;span style="font-size:78%;color:#000000;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:Verdana, Arial, Helvetica, sans-serif;" class="palmcoast_gray_block_text" &gt;வீரகேசரி நாளேடு &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:Verdana, Arial, Helvetica, sans-serif;" class="currentPage style2" &gt;4/21/2009 10:21:45 PM&lt;/span&gt; -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span class="style47"&gt;இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது  &lt;br /&gt;&lt;br /&gt;இந்நியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான அனைத்துவித இராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கமானது முழு நாட்டினையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் ஈழம் இராச்சியத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் இந்த கனவு ஒருபோதும் நனவாகிவிட இராணுவத்தினர் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே பலமான அபிவிருத்தியுள்ள நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். இன அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைத்து இன மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இராணுவத்தின் பலத்தை ஒன்றுதிரட்டும் நீண்ட கால நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இராணுவம் முற்றாக புனரமைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடபகுதியிலும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களிடமிருந்து விடுதலைப் புலி உறுப்பினர்களால் பிரித்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பத்தினையும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-534020391616509159?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/534020391616509159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=534020391616509159' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/534020391616509159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/534020391616509159'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/04/blog-post_21.html' title='இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் - இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகிறார்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-4102717898803543176</id><published>2009-04-19T02:06:00.000-07:00</published><updated>2009-04-19T03:48:03.515-07:00</updated><title type='text'>தமிழீழ போரில் செத்த மக்களை திருப்பி தர முடியுமா</title><content type='html'>&lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;இரண்டு ஈழத்தவர்கள் ஜீமெயிலில் நடத்திய சாற்றிங் உரையாடல்இது. இருக்கிறார். எனது பார்வைக்கு வந்ததை உங்களின் பார்வைக்காக தருகிறேன். வர்களீன் பெயர்கள் இதில் இல்லை. படிக்கும் போது புரிந்து கொள்ளுங்கள்(!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":tt"&gt;that interview s painfull...&lt;/span&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":tr"&gt;&lt;img framecount="195" style="background-image: url(im/emotisprites/frown1.png); background-position: 0px -1246px;" src="http://mail.google.com/mail/images/cleardot.gif" onload="'_GM_EmoticonHandler(" onmouseover="'_GM_EmoticonHandler(" alt=":(" pattern="frown" createtime="1240131198496" iconset="round" width="14" height="14" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":ts" dir="ltr" class="kl"&gt;மிரட்டி கதைக்க வைக்கமுடியும்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":sh"&gt;அழுது கதைக்க வைக்க முடியுமா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நண்பன்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":si"&gt;அதில உண்மை இல்லமல் இல்ல...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":sj" dir="ltr" class="kl"&gt;மரணத்தின் விழிம்பில் பல மரணங்களைப் பார்த்த மக்களுக்கு அழாமல் பேச முடியாது எதை பேசினாலும் அழுதுகோண்டே பேசுவார்கள்...&lt;/div&gt;&lt;div id=":sk" dir="ltr" class="kl"&gt;ஆனால் புலிகளை இப்படி மக்கள் திட்டுவது உணர்ச்சிவசப்ப நிலையில் சொல்லுவது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div id=":sl" dir="ltr" class="kl"&gt;அவங்கள் மறிப்பாங்கள் எண்டது உண்மைதான்..&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":tq"&gt;ஓம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நண்பன்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":to"&gt;ஆனால் மக்களுக்கான பாதுக்கப்பான வழி என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;தோழர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":tu"&gt;100 வீத பாதுகாப்பு வழி இல்லாதபோது ஒப்பீட்டு ரீதியில் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":ty" dir="ltr" class="kl"&gt;ஓரளவு பாதுகாப்பு குறித்து&lt;/div&gt;&lt;div id=":tz" dir="ltr" class="kl"&gt;யோசிப்பதுதான் இயல்பு&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":e"&gt;மக்களை கட்டுபடுத்தி சில விசயங்களை செய்ய வேண்டியிருக்கு.&lt;wbr&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":d" dir="ltr" class="kl"&gt;யாழ் இடப் பெயர்வின் போது வர மாட்டம்  எண்டு சொன்ன மக்களை  கட்டயாப் படுத்திதான் கொண்டு வந்தார்கள் அதனால்தான் பெரு இழப்பு தடுக்கப் ப்ட்டது..&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":c"&gt; நான் யாழ்பாணத்தில இருந்தனான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":ur" dir="ltr" class="kl"&gt;இடம்பெயர்ந்தனான்&lt;wbr&gt;&lt;/div&gt;&lt;div id=":tv" dir="ltr" class="kl"&gt;அப்பிடியொரு இழப்பும் வந்திருக்காது&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":un"&gt;ராணுவம் கைப்பற்றிய பின்னர்  யாழ்பாணத்துக்கு திரும்பி போனவர்களுக்கு என்ன நடந்தது..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":tw"&gt;யாழ் கைப்பற்றல் ஒரு சுத்தி வளைத்த முற்றுகையாக நடந்தது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":tx"&gt;செம்மணி உங்களூக்கு இழபில்லையா தோழர்களே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":9"&gt;இராணுவம் வரும்வழியில் உள்ள மக்கள் தாங்களாகவே இடம்பெயர்ந்திரு&lt;wbr&gt;ப்பார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":b" dir="ltr" class="kl"&gt;ஐயா.. 100 வீத பாதுகாப்புக்கு எங்கும் வழியில்லை என்றபிறகு&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":a"&gt;ஒரு கிருசாந்தியின் கதைதான் உங்களூக்கு தெரியும் தெரியாத கிருசாந்திகள் எத்தனை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":us"&gt;13 வருடத்தில யாழ்பாணத்தில கிட்டத்தட்ட 5000 மக்களை இராணுவம் கொலைசெய்திருக்க&lt;wbr&gt;லாம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":8" dir="ltr" class="kl"&gt;வன்னியில் கடந்த 3 மாதத்தில் 3000&lt;/div&gt;&lt;div id=":0" dir="ltr" class="kl"&gt;இன்று சாகிறாயா நாளை சாகிறாயா எனக் கேட்டால் &lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;span class="kn" dir="ltr"&gt;&lt;/span&gt;&lt;span dir="ltr" id=":f"&gt;&lt;/span&gt;&lt;span dir="ltr" id=":1"&gt;நாளை என்றுதான் சாதாரணமாக எல்லாரும் சொல்வார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;/span&gt; &lt;span dir="ltr" id=":sf"&gt;நான் மக்கள் பக்கமிருந்து கதைக்கிறேன். நீங்கள் புலிகள் பக்கமிருந்து கதைக்கிறீர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":7" dir="ltr" class="kl"&gt;அதுவும் வன்னி மக்கள் பக்கமிருந்து&lt;/div&gt;&lt;div id=":6" dir="ltr" class="kl"&gt;நான் ஆமி பக்கமிருந்து கதைக்கும் நிலையை ஏற்படுத்த வேணாம் &lt;img framecount="195" style="background-image: url(im/emotisprites/smile1.png); background-position: 0px -1246px;" src="http://mail.google.com/mail/images/cleardot.gif" onload="'_GM_EmoticonHandler(" onmouseover="'_GM_EmoticonHandler(" alt=":)" pattern="smile" createtime="1240131680533" iconset="round" width="14" height="14" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":5"&gt;வன்னியில் அனைவரும் கடந்த 25 வருட போராட்டதின் ஆணி வேர்கள். கட்டாயப் பயிற்சி பெற்றவர்கள். புலிகளீன் பலம் இவர்கள். அங்கு வன்னி மக்கள் மட்டுமல்ல ..மட்டகளப்பு யாழ்ப்பாண திருகோண்மலை உள்ளிட்ட தமிழீழத்தின் சகல பகுதி மக்களூம் இருகிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;நண்பர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":tn"&gt;ஏன் இவர்கள் வன்னிக்குப் போனார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":2"&gt;இருக்கிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":tp" dir="ltr" class="kl"&gt;யாழ்பாணத்தான் எஸ்கேப்பு&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;நண்பர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":sm"&gt;புலிகள் பலவந்தமாக கூட்டிப் போனார்களா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":ve" dir="ltr" class="kl"&gt;இல்லையே..&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vf"&gt;வெளிநாடொன்றுக்கு போக வசதியுள்ள எவனும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":vg" dir="ltr" class="kl"&gt;வன்னியில இல்லை&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;நண்பர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vh"&gt;2006 ல் சண்டை தொடங்கிய போது...வண்டி வண்டியாக  வன்னி நோக்கி போய்கொண்டிருந்த மக்களை  நான் பார்த்திருகிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":vi" dir="ltr" class="kl"&gt;நேரடியாக பேசியிருக்கிறேன்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;&lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vj"&gt;நம்பிக்கைதான்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":vl" dir="ltr" class="kl"&gt;ஒப்பீடுதான் ஒரு குறித்த சூழலில அங்காலயா இங்காலயா பாதுகாப்பு&lt;/div&gt;&lt;div id=":vm" dir="ltr" class="kl"&gt;என்றுதான் மக்கள் யோசிப்பினம்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;நண்பர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vn"&gt;அமாம் அவர்களூக்கு ராணுவப் பகுதி பாதுகாபில்லை..புலிகள்தான் பாதுகாப்பு என்று நம்பினார்கள்.இன்னமும் லட்சக்கணக்கில் புலிகளை நம்பி வன்னியில் இருகிறார்கள் அவர்களுக்கு யார் பாதுக்கப்பு வாழங்குவது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vo"&gt;இப்ப.. வன்னியில பாதுகாப்பில்லை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":vp" dir="ltr" class="kl"&gt;திருகோணமலைக்கு கப்பலில போறதுதான்&lt;/div&gt;&lt;div id=":vq" dir="ltr" class="kl"&gt;பாதுகாப்பு&lt;/div&gt;&lt;div id=":vr" dir="ltr" class="kl"&gt;என மக்கள் நம்புகினம்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;நண்பர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vs"&gt;ராணுவப் பகுதியில் எப்போதும் பாதுகாபு இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vt"&gt;அது உண்மையா இல்லயா என்பது வேறு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":vu" dir="ltr" class="kl"&gt;மக்கள் நம்புகிறார்கள்&lt;/div&gt;&lt;div id=":vv" dir="ltr" class="kl"&gt;வன்னியை விட ஒப்பீட்டு ரீதியில் உயிர்வாழ்வதற்கா&lt;wbr&gt;ன வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நன்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vw"&gt;ஆகவே..போரை நீறுத்த சொல்லி சொல்ல வேண்டுமே தவிர இப்படி..மக்களை மற்றுமொரு பொறிக்குள் தள்ளும் வேலையைச் செய்யக் கூடாது...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vx"&gt;தமிழ்நதி மற்றும் நீங்கள் விரும்புவதுபோல&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":vy" dir="ltr" class="kl"&gt;அவர்கள் அங்கிருக்கிறதுதான் நல்லது..அவர்கள் செத்தாலும் மரியாதையாக சாகட்டும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":vz"&gt;திடிரென போர் நிறுத்தப்பாட்டா&lt;wbr&gt;ல் இப்போது வெளீயில் சென்ற மக்களை நீங்கள் பாதுகாப்பீர்களா? மக்களின் பாதுக்கப்பை உறுதிப்ப்படுத்தி அனைதுலக மைப்பின் பாதுக்காபில் மக்களி வைத்திருக்க யரும் முன்வரவில்லியெனில் புலிகள் தான் பாதுகாப்பு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":w0"&gt;தர்க்கரீதியில் - யுத்தத்தில மக்களை தங்கட சொந்த இடத்த விட்டு போ என்டு கேட்கேலாதுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":w1" dir="ltr" class="kl"&gt;ஆனா உயிர்வதையில தர்க்கமாவது&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":we"&gt;இதெற்க்கு முன்னர் ராணுவப் பகுதிக்கு சென்ற மக்களுக்கு யாழிலும் மட்டக்களபிலும் என்ன நடந்தது ?1990 இல புளட் மோகனோடு சேர்ந்து இரணூவம் மக்களைக் கொலை செய்தது... டயர் போட்டு இளைஞர்களை கொழுத்தியது..நா&lt;wbr&gt;ன் கருகிய உடல்களை பாடசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளிலும் பார்த்திருக்கிற&lt;wbr&gt;ன் 1991,1992 , 1993 காலப் பகுதில் இது நடந்தது. கிழக்கு பகுதியை மீட்ட பின்னர் மட்டக்களப்பு நகரில் மட்டும் 2 மாதத்தில் கானமல் போனவர்கலைன் எண்ணிக்கை 1200. மரணீத்தவர்கள் 3 மாதத்தில் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் 4000 பேர்.&lt;br /&gt; இப்போது கரூணாவோடு செர்ந்து அரசு கொலை செய்தவர்களின் பட்டியல் கிழக்கில் நீளமானது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":wf"&gt;போர் நிறுத்தப்படாவிட்டால்.. செத்த மக்களை திருப்பி தர முடியுமா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":wg" dir="ltr" class="kl"&gt;கிட்டத்தட்ட தமிழீழ போராட்டம் புலத்திற்கு வந்த பிறகு - யாழ் மட்டு திருமலை மக்களை போல வன்னி மக்களும் இருக்கட்டும்&lt;/div&gt;&lt;div id=":wh" dir="ltr" class="kl"&gt;இங்க திண்டுகொழுத்த நாங்கள் கொஞ்சம் போராடட்டும்&lt;/div&gt;&lt;div id=":wi" dir="ltr" class="kl"&gt;அங்க சனம் களைத்துவிட்டார்&lt;wbr&gt;கள்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;நண்பர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":wj"&gt;போர் என்னபது மனிதர்களை கொல்லும் ஒரு கருவி...ஒரு சாத்தான்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":wk" dir="ltr" class="kl"&gt;சாத்தனை ஒழிக்க வேண்டும்...&lt;/div&gt;&lt;div id=":wl" dir="ltr" class="kl"&gt;போர் நிக்க வேண்டும்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt;தோழர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":wm"&gt;புலத்தில சனம் மாயை கலைந்து எழும்பியற்காகவே&lt;wbr&gt;னும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":wn" dir="ltr" class="kl"&gt;இந்த நிலை ஏற்பட்டது நல்லதுதான்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நணப்ர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":wo"&gt;அதற்க்கு உலகம் என்ன செய்கீறது..புலிக&lt;wbr&gt;ளே மக்களை விடுங்கள் எண்டுதானே உங்கள் மனித உரிமை வாதிகள் கேட்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div id=":ws" dir="ltr" class="kl"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":wp"&gt;நான் உறுதியா சொல்லுவன். புலிகளின் தாக்குதலில் 3000 படையினர் பலி&lt;/span&gt; என்றாலும் சனம் இப்ப பரபரப்பாககிறதில்லை&lt;wbr&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;br /&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":wt"&gt;அங்க்குள்ள அத்தனை மக்களுகும் புலிகளிடமிருந்து பிரிந்து வரத் தயராக இல்லை....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;&lt;span class="kn" dir="ltr"&gt;&lt;/span&gt;&lt;span dir="ltr" id=":x3"&gt;&lt;/span&gt;&lt;span dir="ltr" id=":wt"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":x3"&gt;அப்படியாயின் வர விரும்புகிரவர்க&lt;wbr&gt;லையெல்லாம். வெளியே எடுத்து விட்டு மற்ரவர்கலைக் கொல்லாம் என்கிறீர்களா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div id=":xg" dir="ltr" class="kl"&gt;&lt;span class="kn" dir="ltr"&gt; &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":x4"&gt;இப்ப நாங்க போராடவேண்டியது.&lt;wbr&gt;. போர்நிறுத்தத்தோ&lt;wbr&gt;டு.. இ.டம்பெயரும் மக்களுக்கு&lt;/span&gt; அலைனத்துலக கண்காணிப்பில பாதுகாப்பு அவர்கள் இடம்பெயர்கிறார்&lt;wbr&gt;கள் என்பதற்காக துரோகிகள் ஆகமுடியாது&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":xh"&gt;2 லட்சம் மக்களில் 1 லட்சம் வருகிறார்கள் எண்டு வைத்துக்கொள்ளுங்கள்..அப்படியானால் உங்களுக்காக போராடியவர்களோடு இருக்கும் அடுத்த 1 லட்சம் மக்களை பலிகொடுப்பது சரி என்கிறீர்களா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":xi" dir="ltr" class="kl"&gt;வெளியே வருகிறவர்கள் துரோகிகள் அல்ல....&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":xp"&gt;அப்படி வெளிநாட்டில் இருந்து சொல்லும் அனைவரும் தங்களைத் துரோகி எண்டு அறிவிக்கட்டும்.&lt;wbr&gt;.அப்படி அறிவிப்பது எவ்வளவு சின்னபுள்லதானமா அறிவற்றதோ அது போலவே இதுவும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":xq"&gt;ஆனா நிலைமை அப்படியில்லை.. ஆமிட்டபோன சனத்தில எத்தினைபேரை அவன் கொல்லுறானோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":xr" dir="ltr" class="kl"&gt;அந்தளவுக்கு&lt;/div&gt;&lt;div id=":xs" dir="ltr" class="kl"&gt;பிரசாரம் செய்யலாம் என்ட நிலைமைதான்&lt;/div&gt;&lt;div id=":xt" dir="ltr" class="kl"&gt;இருக்கு&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt;நண்பர்&lt;span class="kn" dir="ltr"&gt;: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":xu"&gt;இல்லை 2 லட்சம் பேர் இருந்தால் போராடம் வலுக்கும் உலகம் கேட்ட்டக வேண்டும்..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;தோழர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":xj"&gt;அப்ப பலியாவார்கள் என்று&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":xl" dir="ltr" class="kl"&gt;தெரிகிறதுதானே 1 லட்சம் பேர் பலியாகிவிடகூடாது என்பதற்காக&lt;/div&gt;&lt;div id=":xo" dir="ltr" class="kl"&gt;2 லட்சம்பேரை பலிகொடுக்கலாமா என்ன லொஜிக் இது&lt;/div&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;br /&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":xw"&gt;இப்ப மக்கள் வெளியேற தாயராக இருகிறார்கள் எண்டு போராட்டத்தை திசை திருப்புகிறார்க&lt;wbr&gt;ள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":xx" dir="ltr" class="kl"&gt;போர் நிறுத்தம் என்ற ஒன்றைத் தவிர வேறு பேச்சு எதுவும் இல்லை..&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div id=":xz" dir="ltr" class="kl"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="km" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="kk"&gt; &lt;span class="kn" dir="ltr"&gt;நண்பர்: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":y0"&gt;மக்கள் வெளியேற விரும்புகிறார்கள் என்று சொல்வதின் மூலம் இலங்கை அரசு பொய்ப் பரப்புரை செய்து உலகை திசை திருப்பும் இந்தியா ரஸ்யா போன்ற ஆதரவு சக்திகள் இதனை தமக்கு சார்ப்பாக்கிக் கொள்ளூம்..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="kq" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="kp"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="jU"&gt;&lt;div style="overflow: auto;" class="nH"&gt;&lt;textarea dir="ltr" class="jT" ignoreesc="true" style="height: 36px; overflow-y: hidden;"&gt;&lt;/textarea&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-4102717898803543176?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/4102717898803543176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=4102717898803543176' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/4102717898803543176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/4102717898803543176'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/04/blog-post.html' title='தமிழீழ போரில் செத்த மக்களை திருப்பி தர முடியுமா'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-6101353582065691546</id><published>2009-03-14T01:15:00.000-07:00</published><updated>2009-03-14T01:19:09.306-07:00</updated><title type='text'>இலங்கை சிக்கல்-பெங்களூருவில் இன்று படம் திரையிடல்</title><content type='html'>எரியும் நினைவுகள் ஆவணப்படம் இன்று(14.3.2009) பெங்களூருவில் திரையிடப்படுகின்றது.இரண்டு நாள் இலங்கை சிக்கல் தொடர்பான படங்கள் பெங்களுருவில் உள்ள படஸ்ரேரியன் பிக்சஸ் சார்பில் குயின் வீதியில் உள்ள விவசாய தொழில்நுட்ப மையத்தில் இந்த திரையிடல் நடைபெறுகிறது.4.30 மணீக்கு ஆரம்பமாகிறது. தொடர்ந்து கலந்துரையாடலும் இரவு 7 மணிக்கு எரியும் நினைவுகள் படமும் எரியும் நினைவுகள் படத்தின் ஆங்கில வடிவமும் நடைபெறும்.நிகழ்வுகள் அனத்தும் ஆங்க்லத்தில் நடைபெறுவதால்ந்க்களின் பல் மொழி சார்ந்த நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.&lt;br /&gt;institute of aricultural technologists, queens road, opsite to sanje vaani news paper office, indian expresscircle.time: 4.30 - film screening (hot spots -srilanka) bbc documentary.5.15 to 6.45 panel discussion( journalist problem in lanka and eelam )7pm - burningmemories( a film on burnt jaffna library)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-6101353582065691546?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/6101353582065691546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=6101353582065691546' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/6101353582065691546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/6101353582065691546'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/03/blog-post_14.html' title='இலங்கை சிக்கல்-பெங்களூருவில் இன்று படம் திரையிடல்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-9135140797523681773</id><published>2009-03-01T14:59:00.000-08:00</published><updated>2009-03-01T15:21:58.945-08:00</updated><title type='text'>மட்டக்களப்பு முற்றவெளி. . .</title><content type='html'>மட்டக்களப்பின் மையப்பகுதி,&lt;br /&gt;'மட்டக்களப்பு மாநகரசபை'என்ற பெரிய பெயர் பலகை,உயர்ந்து நிற்கும் காட்டடம் அதன் அருகே வாவியோரத்து முற்றவெளி, முன்னால் வெபர் மைதானம் அல்லது முற்றவெளி மைதானம்,கோட்டைச் சுவர் இவையனைத்தையும் இராணுவகச் சுருள் முட்கம்பிகளினூடே ஆவலாய்ப் பார்த்தன என் கண்கள் ஆயுதம் தரித்த 3 இராணுவத்தினரது கண்களும் 2 பொரிஸ்காரரது கண்களும் ஆயுதம் வைத்திருக்கும் இன்னுமொரு நபரது கண்களும் சமகாலத்தில் என்னைப் பார்த்தன.இண்டைக்கு இதை பார்க்கும் எனக்கு வயது 25.இன்றைய தேதி ஜூன் 15,2006.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/battiHSZ.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px;" src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/battiHSZ.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(மட்டக்கள்ப்பு உயர் பதுக்கப்பு வலையம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மட்டக்களப்பு முற்றவெளி அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாலைப் பொழுதிலிருந்தே எக்கச்சக்க கூட்டம். சிறிதரன், மாபி என்கிற சிறீபவன்(மாப்பிளையின் சுருக்கம்) பவுச்சா இன்னும் சிலர் வின்சற் மகளீர் பாடசாலைக்கு அருகில் இருக்கும் மகளிர் விடுதிக்கு முன்பு சீமைப் பனைகளுக்கு கீழே நின்று கொண்டிருந்தனர்.&lt;br /&gt;அன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு இந்தப் பகுதி மிகப் பெரும் பொழுது போக்குப் பிரதேசம்."இண்டைக்கு யாரெல்லம் பாடபோறாங்களாம்" என்று கேட்கும் சிறிதரனுக்கும் வயது 25 தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பெரிய இசை விழா, ஏ.ஈ.மனோகரன் குரல் மட்டக்களப்பு மையப் பகுதி வரை ஒலிக்கிறது. "மட்டு நகர் மரகத வீணை மீன்பாடும்..... " இலங்கையின் முன்னணி பொப் இசை பாடகர்களும் மெல்லிசைப் பாடகர்களும் பாடிகொண்டிருகிறார்கள்.பொப் பாடல்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்களின் ஆட்டம் பலமாக இருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றவெளி முழுவதும் சரியான கூட்டம். மாநகரசபைப் பகுதி ஒளிவெள்ளத்தில் தெரிகிறது. சறோயினி,மலர்,தேவகி இன்னும் சில பெண்கள் அப்பா அம்மவோடு கோட்டைக்கும் அரச அதிபர் பங்களாவுக்குமிடைப்பட்ட ஆற்றங்கரைப்பகுதியில் உட்காந்திருக்கிறர்கள்.எல்லா இடமும் துள்ளல் பாட்டும் மெல்லிசைப் பட்டும் இரவு 11 மணி தாண்டிக் கேட்டுக் கொண்டிருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தா தையத்தைய தா தையத்தைய....... வந்தேன் இராவண மகாராசன்.... தென்மொடிக் கூத்து சத்தம் முத்தவெளியில் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கூத்துக்கு போறயா? ஆரு நம்மட கன்னங்குடா சினத்தம்பி அண்ணாவியாரா போடுறாரு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓண்டா......"&lt;br /&gt;&lt;br /&gt;"மறுகான்ன நானும் வாறன் அவர் போடுற கூத்த பாத்திட்டே இரிக்கலாமெல்லுவா....."&lt;br /&gt;"அவளுகளும் கூத்து பாக்க போயிரிக்களுகள்......நீ அவளுகளப் பாத்து கூத்தாடாமவுட்டா சரி"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/battikooththu.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/battikooththu.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(இது இன்றைய கூத்துப் படம் 2003 இல் மட்ட்க்களப்பில் நடந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;முழுநிலவு நாளில வருசா வருசாம் முத்தவெளியில நடக்கிற கூத்து அதிகம் பிரபலமானது.தென்மோடி வடமோடி 2 வகை கூத்தும் வருசா வருசம் மாறி மாறி நடக்கும்.தர்மபுத்திரன் கூத்தும் இராவணன் கூத்தும் பிரபல்யமானவை விடிய விடிய முற்றவெளி களை கட்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன....இதெல்லம் எப்ப நடந்திச்சு தெரியுமா? நான் பிறக்கிறதுக்கு முந்தி அதாவது 25 வருசத்துக்கு முந்தி. என்னுடைய அப்பாதான் இந்தக் கதையளச் சொன்னார்.அதில இருக்கிற சிறீதரன்தான்  என்து அப்பா. நான் பிறந்த பிறகும் கூட மட்டக்களப்பில கூத்து நடந்ததாம். 90க்கு பிறகுதான் முற்றாக நின்று போய் விட்டது.அதுக்குப் பிறகு இந்தப் பகுதி முழுமையான இரணுவலையமாகப் போய்விட்டது.இந்தியன் ஆமியும் முத்தவெளியில தங்கியிருந்தவனுகள்.இப்ப இலங்கை இரணுவம் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;92 இல் நான் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மாணவனாக சேர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சேர் றில்(உடற் பயிற்சி கண்காட்சி க்கான தயார்ப் படுத்தல்) பழகுறதுக்கு இண்டைக்கு எத்தினை மணிவரைக்கும் முத்தவெளிக்குள்ள விடுவானுகள்".&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில 7 மணியில இருந்து 11 மணிவரைக்கும் "&lt;br /&gt;எனது கேள்விக்கு சுரேசாநந்தம் சேரிடமிருந்து வந்த பதிலிது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நாங்க போவதற்கு அனுமதிக்கப்படும் முற்றவெளி முன்பு டச்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்து மயானமாக இருந்ததாம்.அருட் தந்தை வெபர் அவர்களின் முயற்சியால் இது பின்னர் மைதானமாக மற்றப் பட்டது இதனால் இதற்கு வெபர் மைதானம் என்று பெயர் சூட்டப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உணமையில ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முற்றவெளியிலதான் கூத்து நடந்தது.அந்தப் பகுதியை இதுவரை நான் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.எங்களுக்கு இது மட்டும்தான் முத்தவெளி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் மட்டக்களப்பு நகரில் இருக்கும் நான்கு பாடசாலைகளுக்கான ஒரே மைதானம்(புனித மிக்கேல் கல்லூரி,மெதடிஸ்த மத்திய கல்லூரி,விசன்ற் மகளிர் உயர்தப் பாடசாலை,புனித சிசிலியா மகளிர் பாடசாலை ஆகியவை அந்த நான்கு பாடசாலைகளுமாகும்) எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டி காலத்தில் மட்டும் இந்த மைதானத்தை முழுமையாக எங்களால் உபயோகப் படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதானத்தை சுற்றி இராணுவ பாதுகாப்பு அரண்கள் இருக்கும்.கிட்டத்தட்ட ஒரு இராணுவப் பாடசாலை மாணவர்களைப் போல சூழல் எங்களை மாற்றி விட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன, அப்ப எங்களுக்கு அது பெரிய பிரச்சனையே அல்ல வின்சன்ட் ,கொன்வெண்ட் பொம்பிளப்பிள்ளையள் வரும் அதுகளும் நாங்களும் ஒரே மைதனத்தில் இருப்பது என்பது ........எவ்வளவு பெரிய நிகழ்வு.நான் மாணவத் தலைவனாக இருக்கையில் மற்ற மாணவர்களை ஒழுங்கு படுத்துறது,உத்தியோக பூர்வத்த தொடர்புகளை வைத்துக் கொள்ளுவது எண்டு வின்சன்ற் ,கொன்வென்ற் பிள்ளையளுகளோடு அறிமுகமாகிறதுக்கு எடுத்த பிராயத்தனங்கள் எத்தனை. . .&lt;br /&gt;&lt;br /&gt; நான் மட்டுமில்ல என் சக மாணவ தலைவர்களும் எனக்கு முன்பிருந்தவர்களும் கூட எத்தனை முயற்சி எடுத்திருப்பார்கள்......நாலு பொம்பிளப் பிள்ளையளுக்கு நம்மள தெரிஞ்சா அது நமக்குப் பெருமை எண்டுற காலமது.&lt;br /&gt;&lt;br /&gt;வருசத்தில ஒருக்கா வெசாக் பண்டிகை(புத்த பகவான் ஞானம் பெற்ற காலம் இது யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட சர்வதேசப் பண்டிகை) இந்த மைதானத்தில கொண்டாடப் படும் அண்டைக்கு மட்டுதான் நங்கள் இந்தப் பகுதியில் ஒளியூட்டப் பட்ட இரவினைப் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆச்சித்தப்பர லாளிலா பீச்சித்தப்பர லாளிலா ஆச்சித்தப்பர பீச்சித்தப்பர லாளிலாளி லாளிலா...."&lt;br /&gt;சிறிலங்கா இராணுவ இசைகுழுவின் சிங்களப் பைலாப் பாடல்கள் அந்த முத்தவெளியை வியாபித்திருக்கும்.அன்றைக்கு ஒருநாள்தான் இரவில் வெளியில் வருவதற்கு அனுமதி என்பதால் சிங்களப் பாடல்களின் இடையே ஒலிக்கும் தமிழ்படல்களையாவது கேட்போம் என்று ஒரு பெரிய கூட்டம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாடுவதற்கு இராணுவம் அனுமதித்த நாட்களில் இந்த முற்றவெளீ மைதானம் அமைந்துள்ள பகுதி முழுமயினையும் பார்ப்பதற்கு ஆர்வப்பட்டு இரணுவப் பகுதிகளுக்குள் ஒரு நாள் உள்நுழைந்தோம்.துப்பாக்கி முனையில் ஒருமணி நேரம் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆசிரியர் வந்து கேட்டுக் கொண்டதன் பின்னால் எங்களை விடுவித்தனர் அதுவும் தண்ணிகுடிக்க வந்தம் தெரியாமல் வந்து விட்டோம் என்று சொன்ன பிறகு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இராணுவத்தின் மட்டக்களப்பு தலைமையகம் இந்தப் பகுதியில்தான்  இருகிறது. எமது முத்தவெளியில்தான் இராணுவ உலங்கு வானூர்திகள் தரையிறங்கும்.இராணுவத்திற்குப் பயிற்சிகளும் இந்த மைதானத்தில் வைத்துதான் கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் பாடசாலை மாணவிகள் பயிற்சியில் ஈடுபடும் சமயங்களில் பெரும்பாலும் ஆண்கள் பாடசாலை மாணவர்களை உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை.இந்தப் பொழுதுகளில் அரைக் காற்சட்டை இராணுவத்தினர் மைதானத்தில் நிறைந்திருப்பர்.அவர்கள் செய்யும் பல சேட்டைகளை என் தங்கைகள் சொல்லக் கேட்டிருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது என்னோடு படித்த ஒரு நண்பனொருவனுக்கு இதெல்லம் பார்க்கும் போது ஆத்திரமாதிரமாக வரும்.அவனுக்கு மட்டுமல்ல நாங்களும் இராணுவத்தை திட்டிகொள்ளாத நாட்கள் குறைவுதான்.மட்டக்களப்பின் மிக அழகான பகுதியொன்றை மயானமாக்கிவிட்டிருக்கும் இராணுவம் எங்களுக்கு பயங்கரமாகவே தெரிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவனுகளை இங்கயிருந்து விரட்டணும்.நம்மட மைதானத்தில விளையாட நம்மள வுடுறதுக்கு அவனிட்ட கையேந்தோனுமாம் நீங்க போய் இளிச்சிக் கொண்டு நில்லுங்க.....அவனுகள் என்ன சோக்கா நம்மட இடத்துல விளையாடுறானுகள்"&lt;br /&gt;&lt;br /&gt;இரணுவத்தினர் கிறீக்கற் உதைப்பந்தாட்டம், கூடைபந்தாட்டமெல்லம் வேளையாடுறதை மைதானத்தின் கம்பி வேலிகளுக்கு வெளியே இருந்து பார்க்கும் எங்களுக்கு கோவம் வரும்.என்  நண்பன் இதையெல்லம் பார்த்துக் கொதித்துப் போவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நண்பன் 1998 இல் படுவான்கரைக்குப் போனான். அதன் பின்னர் அவன் குறித்த தகவல்கள் இல்லை. சமதான பேச்சுவார்த்தக் காலத்தில் அவனை கொக்கட்டிச்சோலையில் சந்திதேன். விடுதலைப் புலிகள் இயக்கதில் இருப்பதாக சொன்னான். என்னோடு பேசுவதற்க்கு அவனுக்கு இப்போது அவகாசம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை சந்தித்துவிட்டு வரும் போது என்னை கூட்டிச் சென்ற இன்னுமொரு நண்பன் சொன்னான்&lt;br /&gt;&lt;br /&gt;"இவன் இப்ப ஆட்லறி பிரிவில இரிக்காண்டா............."&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 2006 இல் நிலமை இன்னும் மோசம் முற்றவெளி அமைந்துள்ள இந்தப் பகுதிக்கு அவசரத் தேவைக்கு மட்டும் என் நண்பர்கள் போய் வருவதாகச் சொன்னர்கள்.என்னையும் சும்மா போகத்தேவையில்லை என்றார்கள். அஞ்சல் அலுவலகம்,மெத்டிஸ்ட் ஆலாயம்,வில்லியம் ஓல்ட் மண்டபம்,மகளிர் விடுதி, வின்சன்ற் பாடசாலை இவற்றுக்கு போபவர்கள் மட்டும் போய்வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்புபோல் சீமைப் பனைகளுக்கு கீழ் சைக்கிளை நிறுத்திவிட்டு ,இராணுவம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் இளைஞர்களைக் கூடக் காணவில்லை. எனது பழைய நண்பர்களில் பலர் நாட்டை விட்டு வெளீயேறி விட்டிருந்தனர்.(கிளைவிடும் பனைமரமே சீமை பனைகள் இவை பனங்காய் போல ஒருவகை காய்களை காய்க்கும். ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் அரிய வகை இனம். மட்டக்களப்பின் அற்புத அடையாலங்களில் ஒன்று)&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்போது முற்ற வெளியை  கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். துப்பாக்கி ஏந்திய அவர்களின் கண்கள் தொடர்ந்தும் என்னை நோக்கியே இருந்தன நண்பன் அவசரப் படுத்தினான் டேய் அவனுகள் உன்னப் பாக்கிறானுகள். நீ புது ஆள் பிரச்சனை வாரதுக்குள்ள கிளம்பணுண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;சரியென்று ஹாயியார் ஹொட்டலுக்கு போவதற்காக வண்டியைத்திருப்பினோம்....( மட்டக்களப்பின் சுவைமிகு அசைவ உனவுகளுக்கு பெயர் பெற்ற இடம் அங்கு சாப்பிடும் மாட்டிறச்சிக்கு அப்பிடியொரு சுவை)&lt;br /&gt;&lt;br /&gt;பெரியதொரு வெடியோசை ...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதட்டம்.....&lt;br /&gt;&lt;br /&gt;ஹாயியார் கடைக்குள் நாம் ....&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமோரு சத்தம்......&lt;br /&gt;&lt;br /&gt;பதட்டம் கூடியது.......&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் சொன்னான் *படுவங்கரையில் இருந்து ஆட்லெறி வருகுது. முத்தவெளிக்கு பின்னால விழுந்திரிக்கலாம் இவனுகளுக்கு எதும் சேதமெண்டால் சிக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பழைய நண்பண் எனக்கு நம்பிக்கை தருவதற்க்காக இதை அடித்திருக்க கூடுமோ....&lt;br /&gt;என் மனது சொல்லியது. . .&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;*(படுவான்கரை மாட்டக்களப்பு ஆற்றின் மேற்க்கு பகுதி இங்கு சூரியன் படுவதால்(மறைவதால்) இந்தப் பெயர் வந்தது கிழக்கு பகுதியில் சூரியன் எழுந்து(உதிப்பது) வருவதால் மட்ட்க்கள்ப்பு நகரம் இருக்கும் பகுதிக்கு எழுவான்கரையென்று பெயர்.படுவான்கரை முழுவதும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(இந்தக் கட்டுரை கிழக்கு மாகாணம் முழுவது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் படுவதற்க்கு முன்னர் 2006 இல் மட்டக்களப்புக்கு இறூதியாக சென்று வந்த பின்னர் எழுதப் ப்ட்டது. என் மககளின் நம்ம்பிகைகள் தளர்ந்து போன இந்த சந்தர்ப்பத்தில் மீள் பிரசுரிக்கின்றேன்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-9135140797523681773?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/9135140797523681773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=9135140797523681773' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/9135140797523681773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/9135140797523681773'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/03/blog-post.html' title='மட்டக்களப்பு முற்றவெளி. . .'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-3258238152936671992</id><published>2009-01-20T07:27:00.000-08:00</published><updated>2009-01-20T23:01:47.021-08:00</updated><title type='text'>இலங்கை ரூபவாகினியின் வேலையில்...</title><content type='html'>கனடாவில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசினார்... தம்பி உங்கள் ஆவணப் படதின் விலை அதிகமாக இருக்குது என்றார் ..."சினிமா படமெல்லாம் இங்க ஒரு டாலரில் கிடைக்குது ஆனா உங்கட DVD மாட்டும் 10 டொலர் என்றார்... " எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன்..&lt;br /&gt;என் மற்றய நண்பர்களிடம் விசாரித்தேன் ஒறியினல் சினிமா DVD 25 டொலர் வரை விற்பனையாகுது ..1 டொலரில் விற்பனையாவது பைரசி DVD என்றனர் அவர்கள்... எமது "எரியும் நினைவுகள்" படத்தை பைரசியில் விற்பதற்க்கு யாரும் முன்வரவில்லை?! என்பதால் அது இன்னமும் 10 டொலரில் விற்க்கப் படுகிறது. தமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய மூன்று மொழிகளிலான படங்கள் அடங்கிய ஒரு DVD யின் விலைதான் 10 டொலர். இந்தியா உட்பட உலகம் பூராவும் ஏறக்குறைய ஒரே விலையைத்தான் நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உணமையில் எமது போராட்டத்தின் ஆரம்பம் குறித்துப் பேசும் ஒரு படத்திற்க்கு நமது மக்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்ற எனது நம்பிக்கை தோற்றுப் போனதாகவே நான் உணருகின்றேன்.தமிழ் சினிமாவின் மீதிருக்கும் மாயையில் இருந்து மீளாத நமது தமிழர்களிடம் ஆவணப் படத்தைக் கொண்டு செல்வதும் அதன் முக்கியத்துவத்தை உணரச் செய்வதும் மிகப் பெரும் சவாலாகவே இருக்கிறது. நாம் விடிய விடியப் பேசும் ஒரு விடையத்தை ஒரு மணி நேர ஆவணப் படம் மிக இலகுவாக எடுத்துச் சொல்லும். நமது மக்களின் அவலங்களையும் போராட்டத்தின் அவசியத்தையும் உலகிற்க்கு உணர்ர்த்த வேண்டிய மிக அவசியம் இருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காட்சி ஊடகம் மக்களைக் கட்டிப் போட்டிருக்கும் சூழலில் அதன் உச்ச பட்ச பயன் பாட்டை எமக்கானதாக மாற்றியாகா வேண்டும்.யாழ் நூலகம் பற்றிய எமது படம் ஒரு முன் வரைபு மட்டுமே...இன்னும் பலரின் ஒத்துழைப்பும் பல தகவல்களும் ஆவணங்களும், வீடியோகளும் புகைப்படங்களும் கிடைக்கப் பெற்றால். ஒரு முழுமையான படத்தை உருவாக்கிட முடியுமென நானும் நண்பர் சரிநிகர் சிவகுமாரும் நினைத்திருந்தோம்.எப்போதும் புனைக்கதைகளிலும், பெருமைபேசுதலிலும் காலத்தைக் கழிக்கும் எமது தமிழ் சமூகம் வரலாற்றில் தோல்வியடையும் சமூகமாக மாறிவிடுமோ என்ற கவலையே எமக்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே, உலகம் பூராவும் விரவிக் கிடக்கும் நாம் அனைவரும் இன்று செய்ய வேண்டிய அவசிய வேலை நமது அரசியல் பிரச்சனையை சாத்தியமான எல்லா வழிகளிலும் உலக மக்களிடம்ம் எடுத்துச் செல்வதுதான். அதற்க்கு காட்சி ஊடகம் நல்ல தெரிவு. உங்களை ஆவணப்ப்டம் மட்டும் எடுங்கள் என்று நான் சொல்லவில்லை. பாடல்கள், குறும் படங்கள் ,முழுநீளப் படங்கள், பல் மொழி தொலைக்காடசி நிகழ்ச்சிகள் என்று சாத்தியமான எல்லா வழிகளிலும் முயற்சிப்போம்.&lt;br /&gt;வெறுமனே தமிழில் இணையத்தளம் நடத்துவது,தொலைக்காட்சி நடத்துவது,வானொலி நடத்துவது என்பது மட்டும் போதாது.இலங்கை ரூபவாகினி செய்யும் வேலையில் பாதியைக்கூட நாம் செய்து விட வில்லை.இலங்கை அரசின் ராணுவபலத்திற்க்கு நிகராக நம்மை வளர்த்துவிட்டால் மட்டும்போதாது...கடந்த முப்பது வருடத்தில் நாம் மக்கள் தொடர்பிலும் எந்தளவைத் தொட்டிருக்கிறோம் என்று ஒருதடவை பாருங்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இது குற்றம் சுமத்துவதற்க்கான பதிவல்ல...நான் உட்பட நமது பணிக்கான ஒரு முன்வரபு..&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-3258238152936671992?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/3258238152936671992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=3258238152936671992' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/3258238152936671992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/3258238152936671992'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2009/01/blog-post.html' title='இலங்கை ரூபவாகினியின் வேலையில்...'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-9084542233160615200</id><published>2008-11-12T04:45:00.000-08:00</published><updated>2008-11-12T05:16:59.890-08:00</updated><title type='text'>உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும்- அறிவுமதி</title><content type='html'>யாழ் நூலகம் எரிப்பு ஆவணப் படம் உலக ளாவிய அளவில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக பரப்பப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடக்க மற்றும் எரியும் நினைவுகள் என்ற தலைப்பில் யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம் திரையிடல் கொண்ட வரலாற் றில் மிக முக்கிய நிகழ்ச்சியாக 8.11.2008 அன்று சென்னை - பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், பாவலர் அறிவுமதி அவர்களும் நிகழ்ச்சியில் பார் வையாளர் வரிசையில் அமர்ந் தனர்.மண்டபம் நிரம்பி, நிற்க இடமில்லைஆனால் நிகழ்ச்சி துவங்குவ தற்கு முன்பே அன்னை மணி யம்மையார் அரங்கம் நிரம்பி வந்திருந்தோர் நாற்காலி மற் றும் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர். கூட்டம் அளவுக்கு அதிக மாக ஈழத் தமிழர் உணர்வு காரணமாகக் கூடியிருந்தது.முதலாவதாக சோமீதரன் என்ற ஈழத் தமிழரான இளை ஞர் எரியும் நினைவுகள் என்று அவரது முயற்சியால் எடுக்கப்பட்ட குறும்படம் ஆவணப் படம் திரையிடப் பட்டது. யாழ் நூலகம் எப்படி எரிக்கப்பட்டது? ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குரிய பழைய கால ஓலைச் சுவடிகள், வரலாற்று ஆதாரங்கள், ஏராள மான நூல்கள் சஞ்சிகைகள் எப்படி எரிக்கப்பட்டன? ஏன் அந்த சூழ்நிலை ஏற்பட்டது? என்ன காரணம்? எந்த நேரத் தில் யாழ் நூலகம் எரிக்கப் பட்டது?97,000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிந்து சாம் பல் மேடாயின? என்கின்ற வர லாற்றுச் செய்தியை விளக் கியது இக்குறும்படம்.இதைப்பற்றி அறிஞர்கள் கா.சிவத்தம்பி, ஓய்வுபெற்ற ஆசிரியர் அந்தோணிதாசன், சித்ரலேகா மவுனகுரு, சுலோச்சனா ரகுநாதன், நூலக உதவியாளர் பீதாம்பரம், யாழ்ப் பாண மாநகர சபை ஆணை யாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண முதல்வர் இராச. விஸ்வநாதன் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங் கம் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை தாங்கொணாத துயரத்தோடு சொன்ன செய் திகள் இக்குறும்படத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழர்கள் தேர்தல் சமயத் தில் எங்கே முன்னேறி விடு வார்களோ? என்ற ஆத்திரத்தில் சிங்களவர்கள், சிங்கள காவல் துறையினர், சிங்கள இராணு வம் தமிழர்களை ஒடுக்கத் திட்டமிட்ட வரலாறு.பொதுசன யாழ்ப்பான நூலகம் எப்படி எரிக்கப்பட் டது? யாழ் நகரை எப்படி சிங்கள போலீஸ் தீ வைத்து எரித்தது?100 கோடி மில்லியன் ரூபாய் சேதம்தமிழர்கள் அங்கிருந்து முற்றாக கதறி எப்படி வெளி யேறினார்கள்? யாழ் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. 1981லே யாழ் நகர மக்களின் 100 கோடி மில்லியன் ரூபாய் சொத்துகளை எப்படி எரித்து சிங்களவர்கள் சாம்பலாக்கினர் என்ற வரலாறு மீண்டும், மீண்டும் நூலகத்தைப் புதுப் பிக்க எடுத்த முயற்சி மீண்டும் நூலகத்தை சிங்களவர்கள் வெடி வைத்து தகர்த்தது.மற்றும் யாழ்ப்பாண நூலக வரலாறு இனக் கலவரம் தோன்றியதற்கான அறிகுறி மூல காரணம் என்ன? என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக விளக்கியது இக்குறும்படம் இது. ஒவ்வொரு தமிழனும் பார்க் கப்பட வேண்டிய படம். ஒவ் வொரு கிராமத்திலும், ஒவ் வொரு ஊரிலும் திரையிடப் பட வேண்டிய வரலாற்று ஆவணம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணக் குறும் படமாகும் இது.இதைப் பார்க்கத் தவறிய வர்கள் நல்லதொரு வரலாற் றுச் சம்பவத்தை அறிந்து கொள்ள முடியாமல் போயிற்றே என்ற ஆதங்கத்திற்குத்தான் ஆளாவார்கள்.இந்த ஒரு குறும்படமே போதும் ஈழப் பிரச்சினையை மக்கள் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அரிய படம் இது. திரைப்படம் முடிவடைந்து - அடுத்த நிகழ்ச்சி தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலி.பூங்குன்றன்திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் &lt;/strong&gt;கவிஞர் கலி.பூங் குன்றன் அனைவரையும் வர வேற்று பேசினார். அவர் தனது உரையில் இன்று ஓர் முக்கிய நாள். அறிவியல் ஆண்டில் நமது இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் சான்று. இன உணர்ச்சி மேலும் தீவிர மாகியது. குருதி உறையக் கூடிய அளவுக்கு இப்படம் அமைந் திருந்தது என்று கூறினார்.குறும்படத்தை எடுத்த சோமீதரன், ஒரு ஈழத் தமிழர் இளைஞர் என்று அவரைப் பற்றிய அறிமுகத்தை பெரியார் சாக்ரட்டீஸ் விளக்கிய அவர், சிங்கள அரசின் கொடுமை களை காலா காலத்திற்குக் காட்டும் படம் இது என்றார்.&lt;br /&gt;சோமீதரனுக்குப் பாராட்டுஅடுத்து எரியும் நினை வுகள் (யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம்) என்ற இந்த குறும்படத்தை எடுத்து தயாரித்த இளைஞர் சோமீ தரன் அவர்களுக்கும், பாவலர் அறிவுமதி அவர்களுக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாவலர் அறிவுமதி பிரபல திரைப்பட பாடலா சிரியர்,&lt;/strong&gt; இன உணர்வாளர் பாவலர் அறிவுமதி தமது உரையில், ஒரு கனத்த நெஞ் சத்தோடு நாம் அமர்ந்திருந் தோம். உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும் என்ற சோமீதரன் தனது குறும் படத்தில் காட்டியிருக்கின்றார்.உடைந்த வரலாற்றை நமக் குக் காட்டியிருக்கின்றார்.உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமைக்காரர்கள் உண்டென்றால் அவர்கள் சிங்கள இன வெறியர்கள்தான்.பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை உலக அறிவு களத்தில் ஒரு முன் மாதிரியான நிகழ்ச்சியைத் தொடங்கியி ருக்கிறது என்றார்.&lt;br /&gt;&lt;strong&gt;கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்&lt;/strong&gt;.அவர் தமது உரையில் குறிப் பிட்ட முக்கிய செய்தியாவது, இன்றைக்கு இளைஞர்கள் எங்கோ திசை தடுமாறிச் சென்று கொண்டிருக்கக் கூடிய கால கட்டத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய குறும்படத்தை வெளிக் கொணர்ந்த இளைஞர் சோமீ தரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்ட வார்த்தைகளே இல்லை.சோமீதரன் ஒரு வரலாற்று இயக்குநர்சோமீதரன் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவரை ஒரு வரலாற்று இயக்குநர் என்றே அழைக்கலாம். சமுதாயத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பெரி யார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டு இயக்க வரலாற்றிலே இன் றைக்கு ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது.இயக்க வரலாற்றில் முக்கிய நாள்இன்றைக்கு இயக்க வரலாற் றில் ஒரு முக்கிய நாள்.இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறிய அரங்கத்திலே தொடங்கினாலும் இதனு டைய வீச்சு உலகளாவியதாகத் தான் இருக்கும். நான் என்றைக்கும் புத்தகங் களை வாசிப்பவன் மட்டும் அல்ல, புத்தகங்களை நேசிப்ப வன் - சுவாசிப்பவன்.யாழ் நூலகம் பல முறை எழ முடியாத அளவிற்கு சிங்களவர் கள் எப்படி அழுத்தினார்கள் என்பதை இந்தப் படம் விளக் கியது. வரலாறு மறைக்கப் படக் கூடாது; மறுக்கப்படக் கூடாது. திரிக்கப்படக் கூடாது. பொது சன நூலகம் என்று தான் யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்திற்கு அங்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. பொது ஜன நூலகம் என்று அவர்கள் பெயர் வைக்கவில்லை. கெட் டுப் போகாத தமிழும் பட்டுப் போகாத உணர்வும் அங்குதான் இருக்கின்றன. சோமீதரன் ஒரு புதை பொருள் ஆராய்ச்சி போல செய்து நமக்கு காட்டி யிருக்கின்றார். சிங்களவர்கள் எரித்தது நூலகத்தை மட்டு மல்ல நம்முடைய இன உணர்வையும் சேர்த்து எரிக்க நினைத்தார்கள். அந்த இன உணர்வுத் தீ இன்றைக்கும் இருக்கிறது. பரவிக் கொண்டி ருக்கிறது.இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள்நம்முடைய இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள் இன எதிரிகளும், ஊடகத் துறையினரும். அதற்கு நாம் பலியாகி விடக்கூடாது.இந்தக் கருத்துகள், இந்த உணர்வுகள் உலகளாவிய அள வில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக எடுத்து பரப்பப்படும்.பெரியார் சுயமரியாதைக் கருத்துகள் உலகமயமாகும். அறிவுப் புரட்சி ஏற்படுத்தப் படும் - அமைதிப் புரட்சி ஏற்படுத்தப்படும். இன்றைக்கு ஏற்பட்டிருக் கின்ற இந்த உணர்ச்சி இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு தொடக்கம் தொடக்கம் என்று கூறி விளக்கிப் பேசினார்.நிறைவாக பிரின்ஸ் என்னா ரெசு பெரியார் நன்றி கூறினார்&lt;br /&gt;யாழ் நூலகம் எரிப்பு ஆவணப் படம் உலக ளாவிய அளவில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக பரப்பப்படும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடக்க மற்றும் எரியும் நினைவுகள் என்ற தலைப்பில் யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம் திரையிடல் கொண்ட வரலாற் றில் மிக முக்கிய நிகழ்ச்சியாக 8.11.2008 அன்று சென்னை - பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், பாவலர் அறிவுமதி அவர்களும் நிகழ்ச்சியில் பார் வையாளர் வரிசையில் அமர்ந் தனர்.மண்டபம் நிரம்பி, நிற்க இடமில்லைஆனால் நிகழ்ச்சி துவங்குவ தற்கு முன்பே அன்னை மணி யம்மையார் அரங்கம் நிரம்பி வந்திருந்தோர் நாற்காலி மற் றும் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர். கூட்டம் அளவுக்கு அதிக மாக ஈழத் தமிழர் உணர்வு காரணமாகக் கூடியிருந்தது.முதலாவதாக சோமீதரன் என்ற ஈழத் தமிழரான இளை ஞர் எரியும் நினைவுகள் என்று அவரது முயற்சியால் எடுக்கப்பட்ட குறும்படம் ஆவணப் படம் திரையிடப் பட்டது. யாழ் நூலகம் எப்படி எரிக்கப்பட்டது? ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குரிய பழைய கால ஓலைச் சுவடிகள், வரலாற்று ஆதாரங்கள், ஏராள மான நூல்கள் சஞ்சிகைகள் எப்படி எரிக்கப்பட்டன? ஏன் அந்த சூழ்நிலை ஏற்பட்டது? என்ன காரணம்? எந்த நேரத் தில் யாழ் நூலகம் எரிக்கப் பட்டது?97,000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிந்து சாம் பல் மேடாயின? என்கின்ற வர லாற்றுச் செய்தியை விளக் கியது இக்குறும்படம்.இதைப்பற்றி அறிஞர்கள் கா.சிவத்தம்பி, ஓய்வுபெற்ற ஆசிரியர் அந்தோணிதாசன், சித்ரலேகா மவுனகுரு, சுலோச்சனா ரகுநாதன், நூலக உதவியாளர் பீதாம்பரம், யாழ்ப் பாண மாநகர சபை ஆணை யாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண முதல்வர் இராச. விஸ்வநாதன் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங் கம் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை தாங்கொணாத துயரத்தோடு சொன்ன செய் திகள் இக்குறும்படத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழர்கள் தேர்தல் சமயத் தில் எங்கே முன்னேறி விடு வார்களோ? என்ற ஆத்திரத்தில் சிங்களவர்கள், சிங்கள காவல் துறையினர், சிங்கள இராணு வம் தமிழர்களை ஒடுக்கத் திட்டமிட்ட வரலாறு.பொதுசன யாழ்ப்பான நூலகம் எப்படி எரிக்கப்பட் டது? யாழ் நகரை எப்படி சிங்கள போலீஸ் தீ வைத்து எரித்தது?100 கோடி மில்லியன் ரூபாய் சேதம்தமிழர்கள் அங்கிருந்து முற்றாக கதறி எப்படி வெளி யேறினார்கள்? யாழ் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. 1981லே யாழ் நகர மக்களின் 100 கோடி மில்லியன் ரூபாய் சொத்துகளை எப்படி எரித்து சிங்களவர்கள் சாம்பலாக்கினர் என்ற வரலாறு மீண்டும், மீண்டும் நூலகத்தைப் புதுப் பிக்க எடுத்த முயற்சி மீண்டும் நூலகத்தை சிங்களவர்கள் வெடி வைத்து தகர்த்தது.மற்றும் யாழ்ப்பாண நூலக வரலாறு இனக் கலவரம் தோன்றியதற்கான அறிகுறி மூல காரணம் என்ன? என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக விளக்கியது இக்குறும்படம் இது. ஒவ்வொரு தமிழனும் பார்க் கப்பட வேண்டிய படம். ஒவ் வொரு கிராமத்திலும், ஒவ் வொரு ஊரிலும் திரையிடப் பட வேண்டிய வரலாற்று ஆவணம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணக் குறும் படமாகும் இது.இதைப் பார்க்கத் தவறிய வர்கள் நல்லதொரு வரலாற் றுச் சம்பவத்தை அறிந்து கொள்ள முடியாமல் போயிற்றே என்ற ஆதங்கத்திற்குத்தான் ஆளாவார்கள்.இந்த ஒரு குறும்படமே போதும் ஈழப் பிரச்சினையை மக்கள் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அரிய படம் இது. திரைப்படம் முடிவடைந்து - அடுத்த நிகழ்ச்சி தொடங்கியது.கலி.பூங்குன்றன்திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் அனைவரையும் வர வேற்று பேசினார். அவர் தனது உரையில் இன்று ஓர் முக்கிய நாள். அறிவியல் ஆண்டில் நமது இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் சான்று. இன உணர்ச்சி மேலும் தீவிர மாகியது. குருதி உறையக் கூடிய அளவுக்கு இப்படம் அமைந் திருந்தது என்று கூறினார்.குறும்படத்தை எடுத்த சோமீதரன், ஒரு ஈழத் தமிழர் இளைஞர் என்று அவரைப் பற்றிய அறிமுகத்தை பெரியார் சாக்ரட்டீஸ் விளக்கிய அவர், சிங்கள அரசின் கொடுமை களை காலா காலத்திற்குக் காட்டும் படம் இது என்றார்.சோமீதரனுக்குப் பாராட்டுஅடுத்து எரியும் நினை வுகள் (யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப் படம்) என்ற இந்த குறும்படத்தை எடுத்து தயாரித்த இளைஞர் சோமீ தரன் அவர்களுக்கும், பாவலர் அறிவுமதி அவர்களுக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்.பாவலர் அறிவுமதிபிரபல திரைப்பட பாடலா சிரியர், இன உணர்வாளர் பாவலர் அறிவுமதி தமது உரையில், ஒரு கனத்த நெஞ் சத்தோடு நாம் அமர்ந்திருந் தோம். உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும் என்ற சோமீதரன் தனது குறும் படத்தில் காட்டியிருக்கின்றார்.உடைந்த வரலாற்றை நமக் குக் காட்டியிருக்கின்றார்.உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமைக்காரர்கள் உண்டென்றால் அவர்கள் சிங்கள இன வெறியர்கள்தான்.பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை உலக அறிவு களத்தில் ஒரு முன் மாதிரியான நிகழ்ச்சியைத் தொடங்கியி ருக்கிறது என்றார்.சோமீதரன்தொடர்ந்து சோமீதரன் தனது உரையில் எப்படி இந்தப் படத்தை சிங்கள இராணுவ நெருக்கடிக்களுக்கிடையே யாழ்ப்பாணத்தில் எடுத்தேன் என்பதை விளக்கிய அவர், இப்படி ஒரு படம் எடுக்கப்பட் டிருக்கின்றது என்ற செய்தியை குற்றாலத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் சொன்ன பொழுது, பத்திரிகை யில் இந்த படம் பற்றி வெளி வந்த குறிப்பை தாம் ஃபைல் செய்து ஏற்கெனவே வைத்திருந் ததாகக் கூறிய பொழுது தன்னால் பேச முடியவில்லை. சிந்திக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு உணர்ச்சி வயப்பட்டேன் என்ற அவர், இந்த குறும்படத்தை வெளி யிட ஊக்குவித்த தமிழர் தலை வர் அவர்களை தன் வாழ் நாளில் என்றும் மறக்க மாட்டேன் என்று நன்றியுடன் கூறினார்.தமிழர் தலைவர் உரைஇறுதியாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.அவர் தமது உரையில் குறிப் பிட்ட முக்கிய செய்தியாவது, இன்றைக்கு இளைஞர்கள் எங்கோ திசை தடுமாறிச் சென்று கொண்டிருக்கக் கூடிய கால கட்டத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய குறும்படத்தை வெளிக் கொணர்ந்த இளைஞர் சோமீ தரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்ட வார்த்தைகளே இல்லை.சோமீதரன் ஒரு வரலாற்று இயக்குநர்சோமீதரன் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவரை ஒரு வரலாற்று இயக்குநர் என்றே அழைக்கலாம். சமுதாயத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பெரி யார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டு இயக்க வரலாற்றிலே இன் றைக்கு ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது.இயக்க வரலாற்றில் முக்கிய நாள்இன்றைக்கு இயக்க வரலாற் றில் ஒரு முக்கிய நாள்.இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறிய அரங்கத்திலே தொடங்கினாலும் இதனு டைய வீச்சு உலகளாவியதாகத் தான் இருக்கும். நான் என்றைக்கும் புத்தகங் களை வாசிப்பவன் மட்டும் அல்ல, புத்தகங்களை நேசிப்ப வன் - சுவாசிப்பவன்.யாழ் நூலகம் பல முறை எழ முடியாத அளவிற்கு சிங்களவர் கள் எப்படி அழுத்தினார்கள் என்பதை இந்தப் படம் விளக் கியது. வரலாறு மறைக்கப் படக் கூடாது; மறுக்கப்படக் கூடாது. திரிக்கப்படக் கூடாது. பொது சன நூலகம் என்று தான் யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்திற்கு அங்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. பொது ஜன நூலகம் என்று அவர்கள் பெயர் வைக்கவில்லை. கெட் டுப் போகாத தமிழும் பட்டுப் போகாத உணர்வும் அங்குதான் இருக்கின்றன. சோமீதரன் ஒரு புதை பொருள் ஆராய்ச்சி போல செய்து நமக்கு காட்டி யிருக்கின்றார். சிங்களவர்கள் எரித்தது நூலகத்தை மட்டு மல்ல நம்முடைய இன உணர்வையும் சேர்த்து எரிக்க நினைத்தார்கள். அந்த இன உணர்வுத் தீ இன்றைக்கும் இருக்கிறது. பரவிக் கொண்டி ருக்கிறது.இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள்நம்முடைய இன உணர்வை திசை திருப்பப் பார்க்கிறார்கள் இன எதிரிகளும், ஊடகத் துறையினரும். அதற்கு நாம் பலியாகி விடக்கூடாது.இந்தக் கருத்துகள், இந்த உணர்வுகள் உலகளாவிய அள வில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மூலமாக எடுத்து பரப்பப்படும்.பெரியார் சுயமரியாதைக் கருத்துகள் உலகமயமாகும். அறிவுப் புரட்சி ஏற்படுத்தப் படும் - அமைதிப் புரட்சி ஏற்படுத்தப்படும். இன்றைக்கு ஏற்பட்டிருக் கின்ற இந்த உணர்ச்சி இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு தொடக்கம் தொடக்கம் என்று கூறி விளக்கிப் பேசினார்.நிறைவாக பிரின்ஸ் என்னா ரெசு பெரியார் நன்றி கூறினார்&lt;br /&gt;நன்றி - விடுதலை&lt;br /&gt;&lt;a href="http://files.periyar.org.in/viduthalai/20081109/Page06.html"&gt;http://files.periyar.org.in/viduthalai/20081109/Page06.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-9084542233160615200?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/9084542233160615200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=9084542233160615200' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/9084542233160615200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/9084542233160615200'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2008/11/blog-post.html' title='உதடுகளால் சொல்ல முடியாததை இமைகளால் சொல்ல முடியும்- அறிவுமதி'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-2234173036653386437</id><published>2008-09-13T03:12:00.000-07:00</published><updated>2008-09-13T03:24:18.315-07:00</updated><title type='text'>ஈரோட்டில் "எரியும் நினைவுகள்" திரையிடல்</title><content type='html'>எரியும் நினைவுகள் ஆவணப் படம் ஈரோட்டில் திரையிடப் பட இருகிறது. 'திரைநானூறு' அமைப்பின் ஏற்ப்பாடில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (14.05.2008) மலை 5.30 மணிக்கு திரையிடப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூமாலை வணிகவளாகத்தில்( மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்)  இந்த திரையிடல் நடைபெற உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் 1981 இல் எரியூட்டப்பட்ட நூலகத்தின் கதையே எரியும் நினைவுகள் என்ற இந்த ஆவணப் படம். 97,000 புத்தகங்களோடும் ஏராளமான ஓலைச் சுவடிகளோடும் கையெழுத்துப் பிரதிகளோடும் கொழுத்தி எரிக்கப் பட்ட இந்த நூலகம். தெற்காசியவின் மிகப்பெரிய நூலகமாகவும் தமிழர்களின் பெரும் நூற் சேகரமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;www.burningmemories.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-2234173036653386437?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/2234173036653386437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=2234173036653386437' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/2234173036653386437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/2234173036653386437'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2008/09/blog-post.html' title='ஈரோட்டில் &quot;எரியும் நினைவுகள்&quot; திரையிடல்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8639996856564587423</id><published>2008-07-30T03:48:00.000-07:00</published><updated>2008-07-30T04:50:13.999-07:00</updated><title type='text'>சினிமாக்களுக்கு நடுவில் எனது ஆவணப்படம் குறித்த பதிவு..</title><content type='html'>&lt;em&gt;கடந்த மாதம் ஒன்றாம் தேதி மாலை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஐம்பது நிமிடங்கள் படம் ஓடி முடிந்தபோது, அரங்கில் இறுக்கமான அமைதி. படம் உருவாக்கிய கொந்தளிப்பு பலரின் விழியோரம் கண்ணீர் துளியாக வெளிப்பட்டிருந்தது. என்னை அழவைத்துவிட்டது என்றார் உணர்ச்சிப் பெருக்கை கட்டுப்படுத்த முடியாத இயக்குனர் பாலுமகேந்திரா.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்த அந்த ஆவணப்படம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி சிங்கள பேரினவாத அரசால் முற்றிலும் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தைப் பற்றியது. அதனை எடுத்த சோமிதர‌ன் யாழ்ப்பாண தமிழர். போரை அனுபவித்த தலைமுறை என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சோமிதர‌னிடம் ஆவணப்படம் குறித்து உரையாடினோம். முதலில் அவரைப் பற்றி... &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'வெப்டூனியா' என்ற இணையத் தளத்தில் முற்று முழுதான தமிழ் சினிமா ஆக்கிரமிப்புக்குள் ஒரு ஆவணப் படம் பற்றிப் பதிவு செய்திருப்பது ஆச்சரியமானது. எனது ஆவணப்படம் குறித்த பதிவும் எனது நேர்காணலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. சில தவறுகளும் எழுத்துப் பிழைகளும் உள்ளன. முழுமையான பேட்டிக்கு கீழ் இணையத்தளத்தைப் பார்க்கவும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil.webdunia.com/entertainment/film/interview/0807/21/1080721033_1.htmhttp://"&gt;http://www.tamil.webdunia.com/entertainment/film/interview/0807/21/1080721033_1.htmhttp://&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil.webdunia.com/entertainment/film/interview/0807/21/1080721033_1.htm"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8639996856564587423?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8639996856564587423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8639996856564587423' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8639996856564587423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8639996856564587423'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2008/07/blog-post.html' title='சினிமாக்களுக்கு நடுவில் எனது ஆவணப்படம் குறித்த பதிவு..'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8468502879855412349</id><published>2008-03-02T09:31:00.000-08:00</published><updated>2008-03-02T10:03:04.049-08:00</updated><title type='text'>என்ன நடக்குது தமிழ்மணத்தில.....</title><content type='html'>தெரியாமத்தான் கேட்கிறன் என்னதான் நடக்குது தமிழ் மணத்தில......யார் யாரை வெளிய போகச் சொல்லுறது...யாருக்கு யார் கழுத்தறுப்பு செய்யுறது....  யாரவது உலகத் தலித் மாநாடு போட்டிச்சினமா? இல்லை தமிழ் தேசிய ஆய்விலும் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு திட்டம் முன் வைத்தும் பதிவுகள் ஏதும் வந்தனாவா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை நம்ம வரவனை முதல் லேட்டஸ் தூயா வரைக்கும்  யாரவது புதிசான மொக்கை போட்டார்காளா.? பாலபாரதி  பு.பித்தன் பற்றியோ, செ.மோகன் பற்றியோ ஏதேனும் அறிவியல் மன்னிக்கவும் அறிவுபூர்வ கட்டுரை எழுதினாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தன் முதல் தமிழரங்ககாரர் வரை ஏதும் சூடாக விவாதம் நடத்தினவையோ( இஞ்ச சயந்தன், வடை சுட்டு இன்ரனெற்றில சுடச் சுட அனுப்பினவை எண்டு நக்கல் விட்டாதையும்) தவிர இன்னும் பிற  நம் தோழர்கள் என்னென்ன செய்தவை எண்டு யாரவது எனக்குச் சொல்லுங்கப்பா.....அட கானபிரபாவை கேட்கயில்லை அதுசரி அவர் வேற என்ன செய்திருப்பார் நல்ல சினிமா பாடல்களை வாரி வழங்கியிருப்பார். மலைநாடன் பாற்றியும் கேட்கையில்லைத்தான்  அவரின் பாதுகாப்பு காரணங்களுக்காக கேட்காமல் விட்டுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தால் இப்பிடி நான் கேட்பதின் ஊடாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வலைப்பூ பக்கம் வந்திருப்பதை உங்களுக்கு தெரியப் படுதுகிறேன். டமில் ஸுழலில் இதுகள் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தநாள் தமிழச்சி மீண்டு ஆத்திரப்பட்டு பதிவு போட்டிருகிறா வழமை போலவே நிறைய வாழிகள். இப்ப தமிழ் மணத்தில் பதிவெழுதும் பல்லாயிரக் கணக்கானவர்களில் சில ஆயிரம் பேர் மொக்கைப் பதிவுக்கு தாவியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.ஈழத்து பதிவர்கள் எழுதுவதை நிறுத்திக் கொண்டது ஏனென்று தெரியல்ல... சிலர் தமிழீழம் கிடைச்சாத்தான் எழுதுவம் எண்டு சொன்னதாகவும் கேள்வி...நல்ல முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இதுக்குமேல் இனி மொக்கையாக எதுவும் போடுவதிலை இனிமேல் கிடைகிற நேரத்தில் கடலை போடும் எண்ணமிருப்பதால் வலையர்கள் தப்பித்தீர்கள். கா+ம் என காதலிக்கும் அவள் காதலனுக்கும் கலியாணம்.:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8468502879855412349?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8468502879855412349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8468502879855412349' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8468502879855412349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8468502879855412349'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2008/03/blog-post_02.html' title='என்ன நடக்குது தமிழ்மணத்தில.....'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-5031152420796910810</id><published>2008-03-01T00:04:00.000-08:00</published><updated>2008-03-01T01:25:05.729-08:00</updated><title type='text'>யாழ்நூலக ஆவணப்படம்-திரையிடலுக்கு தயார்</title><content type='html'>'வரும் ஆனா வராது' என்று ரேஞ்சில் இருந்த யாழ்ப்பாண நுலகம் குறித்த ஆவணப் படத்தை அனைவரின் பார்வைக்கும் முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது. 2006 இல் ஆரம்பிக்கப் பட்ட வேலை 2 வருடங்களின் பின் திரையிடலுக்காக தாராகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது யாழ் நூலக குறித்து நாம் உருவாக்க நினைத்த முழுமையான  ஆவணமாக இல்லை என்கிற போதும் ஏதோ ஒரு நிலையில்  வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற முடிவில் இதனை நிறைவு செய்திருகிறேம்.ஏனெனில் யாழ்ப்பான நூலகம் யாழ்ப்பாண சமூகத்தொடும் இலங்கையின் அரசியலோடும் மட்டும் வரையறுத்துக்கொண்ட ஒன்றல்ல.  யாழ் பொதுசன நுலக தனது 75 வருட வரலாற்றில் பல கதைகளைக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உருவாக்கியுள்ள படத்தில் முடிந்தளவு நூலகம் சார்ந்த வரலாற்றையும் அதன் எரிப்புக்கு பின்னான இலங்கையின் இனப் போரும் அதற்குள்ளான நூலகத்தின் பயணம் குறித்தும் பதிவு செய்திருக்கிறோம்.இன்னும் இன்னும் நிறைய செய்திகளும் காட்சிகளும் பலரிடம் இருக்கலாம். அவை மேலும் செழுமையான ஒரு வரலாற்று ஆவணத்தை ஒருவாக்க உறுதுனை புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் ,பணம் என்பவை ஒரு வரலாற்று ஆவாணப் படத்தின் உருவாக்கதில் அதிகம் செல்வாக்குப் பெற்றவை.அது போதும் இத்தோடு நிறுத்திக் கொள் என்கிறபோது நாம் நிறுத்தியே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இனி நீங்கள் படத்தைப் பார்கலாம். பல இடங்களிலும் திரையிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருகிறார்கள்.அப்போது நீங்கள் படத்தைப் பார்க்கலாம்.DVD உருவாகியவுடன் அதனை வங்கியும் பர்கலாம். விமர்சிக்கலாம்,நிரகரிகலாம் ,மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் சேர்க்க உதவலாம்.எங்கு எப்போது யார் திரையிடுகிறார்கள் என்ற விபரம் பின்னர் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த நேரத்தில் என்னோடும் எமது நிகரி திரைப்பட குழுவோடும்  இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-5031152420796910810?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/5031152420796910810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=5031152420796910810' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5031152420796910810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5031152420796910810'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2008/03/blog-post.html' title='யாழ்நூலக ஆவணப்படம்-திரையிடலுக்கு தயார்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-7727254218543076914</id><published>2007-10-25T08:43:00.000-07:00</published><updated>2007-10-25T08:48:11.980-07:00</updated><title type='text'>நிர்வாண இராணுவம்..</title><content type='html'>ஆண்குறிகளோடு அலையிற ராணுவம் எங்களுக்கு புதிசில்லை. சண்டை கோரமா நடக்கிற இந்த 25 வருசத்தில துப்பாக்கிகளை பிடிக்க மறக்கிற சந்தர்ப்பத்திலையும் தங்கடை ஆண்குறிகளை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு என்ர தோழிகளையும் அக்காக்களையும் தங்கைகளையும் அம்மாக்களையும் தேடி அலையும் கேவல ராணுவத்தை வீதியெங்கும் பாக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மன்னார் வங்காலையில நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இண்டைக்கு இந்தப் பதிவை நான் இட்டுக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில எங்கோ தமிழர் தாயகத்தின் ஏதோ ஒரு மூலையில் வெளித்தெரியாமல் வேட்டையாடப்படும் என் சக மனிதனின் என் சகோதரியின் கதறல் ஒலி என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கோணேஸ்வரி, கிருசாந்தி, சாராதாம்பாள், தர்சினி, என்று நீளும் பட்டியல் மட்டுமே நமக்கு தெரியும். வேட்டையாடப்பட்டு தன் ஆண்குறி அடங்கியும் கோரமடங்காமல், இரத்தம் பார்க்கும் ராணுவ வேட்டைகளின் கொல்லப்பட்ட ஒரு சிலரைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம். தினம் தினம் உடலில் உயிர் இருந்தாலும் நிர்வாணமாய் அலையும் ராணுவப் பசிக்கு இரையான எத்தனை என் தோழிகளை அவர்களின் உணர்வுகளை இன்னும் எத்தனை நாள் சுமக்க போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆண்குறியோடு அலையும் ராணுவத்திற்குள் பிரிவுகள் இல்லை. உலகின் எல்லா ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் தங்கள் பசியை அடக்க கிடைத்த ஒரே வழி பெண்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;80 களின் இறுதிப் பகுதிகளில் ஒரு நாள் என் காது கேட்க என் அம்மாவிடம் பக்கத்து வீட்டு அக்கா கதறியபடி ஏதோ சொல்லி கொண்டிருந்தார். அதற்கு சற்று முன்னர் தான் இந்திய ராணுவத்தால் 3 மணி நேரமாய் என் கிராமம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அண்டைக்கு ஒலிக்க தொடங்கின அந்த கதறல் குரல் இன்னும் எனக்குள்ளை ஒலிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் சமாதானம் எண்டு நாலு வருசம் ஆடின நாடகத்தில பார்வையாளராய் இருந்த எங்கடை சனம் எல்லாம் இப்ப மரணத்தின்ர பிரதான பங்காளியாய் மாறிப்போயிருக்கு. ஆனா அந்த நாடகத்தில நடிச்சவைக்கு இருக்கிற பாதுகாப்பு நாடகத்தை பாத்துக்கொண்டிருந்த சனத்துக்கு இல்லை.நாடகம் நடக்கேக்கை வெறியோடை பாத்துக்கொண்டிருந்த ராணுவம் இப்ப வேட்டையாடத்தொடங்கிட்டுது. வேட்டைக்காரனுக்கு இப்ப வேட்டை இலக்கில்லை. கைக்குள்ளை அகப்படுற எல்லாத் தமிழரின் இரத்தங்களையும் பெண்களின் உடல்களையும் ஆண்குறி ஏந்தி திரியும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் ருசிக்கத் தொடங்கி விட்டன.நாலு வருச சமாதான காலத்தில வீதியில போற எங்கடை பொம்பிளைப்பிள்ளையளை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஆண்குறி பிடித்தபடி பாத்தக்கொண்டிருந்த 'வெறிலங்கா'ப்படைகள் மன்னிக்க வேணும் "சிறிலங்கா"ப் படைகள் இப்ப தங்கள் ஆண்குறி அடக்க ஆணுறைகள் சகிதம் வேட்டையாட புறப்பட்டு விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த பெண்கள் படையணிகளை உலகம் வியக்க உருவாக்கினர். வேட்டையாடும் வெறிகார ராணுவத்தை அடக்க பல வெற்றி சமர்களை நடத்தியது. ஆனாலும் இண்டைக்கும் இந்தக்கணத்திலையும் குருதிக்குள் உறைந்து போன என் அக்காளின் கோரப் பிணத்தை பார்க்கும் துரதிஸ்டம்...&lt;br /&gt;என்னைக் கேட்டால் ஆயுதம் தூக்கின என்ர அக்காக்களே, தோழிகளே, தங்கச்சிகளே, முடிஞ்சால் அடியுங்கோ.. தயவு செய்து ஆண்குறியோடு அலையும் ராணுவ வெறியர்களுக்கு எங்கடை பெண்களை தேடியலைய நேரம் குடுக்காதேங்கோ..வன்னிக்குள் எல்லோரும் போய் ஒழிய முடியாத யதார்த்த சூழலில் ஓநாய்களின் காவலில் நாங்கள் வாழுகிறோம். அவர்களுக்கு பசிக்கிற போதெல்லாம் எங்கள் பெண்களை புசிக்கலாம். குழந்தைகளின் இளம் குருதி குடித்து கூத்தாடலாம். இது கோரம்..இதை பேசுகிற போது கோவத்தையும் விரக்தியையும் தவிர எதுவும் செய்ய முடியாத வெறும் கையாலாகததனம் மட்டுமே மிஞ்சி நிக்கிறது.. .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;எங்கள் இணைத்தளங்களினதும் பத்திரிகைகளினதும் இடங்களை நிரப்ப , இனியும் இந்தப் படங்கள் வேண்டாம். ஐயோ.. என நாங்கள் வைக்கும் ஒப்பாரி உலகத்திற்கு கேட்பதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு இருக்கெண்டு எனக்கு தெரியேல்லை. ஒரு வேளை உலகில் நடக்கும் இந்தக் கோரங்களைப் போன்ற கோரங்களுக்குள் என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து வீறிட்டெழும் அலறலும் அடங்கிப் போகலாம்.&lt;/strong&gt; &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இதுக்குமேல பேச எதுவுமில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனை நாள் என்ரை பேனாவுக்குள்ளை இரத்தம் ஊத்தி எழுதப்போறனோ தெரியேல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நேரம் எழுதினது வார்த்தையில்லை..&lt;br /&gt;என்ர வலி இது எங்கடை இனத்தின்ர வலி..&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஜனாதிபதி மகிந்தவுக்கு:தயவு செய்து உங்கடை ராணுவத்திற்கு ஆண்குறி அடக்க ஏதாவது வழி செய்யுங்கோ..இரணுவத்தினரை மட்டும் இதுக்கு குறை சொல்லேலாது.. அவையள் கூலிக்கு மாரடிக்கினம். புலிகள் மாதிரி போராளிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில இருந்து தன்ர ஊருக்கு போகேலாமல் தன்ர மனிசியை பாக்கேலாமல் விரக்தியோடை இருக்கிறவைக்கு ஆண்குறி அடக்கிறதுக்கு என்ர உறவுகளை பலியாக்க வேணாம். எதுக்கெல்லாமோ பாதுகாப்பு கவுண்சிலையோ சர்வ கட்சி மாநாட்டையோ கூட்டுறனிங்கள் இதுக்குமொருக்கா கூட்டிப்பாருங்கோ.. கொழும்பில கூத்தாடுற மேற்தட்டு வர்க்கம் பாதுகாப்பா தாகம் தணிக்குது. அங்கை பாதுகாப்பு படைக்கு வெறியெடுக்குது. அவங்களுக்கும் தாகம் தணிக்க ஒரு அமைச்சை உருவாக்கி அமைச்சரையும் போட்டு ஏதேனும் செய்யுங்கோ.. தயவு செய்து உங்களின்ர கொண்டாட்டங்களுக்கு எங்களை பலியெடுக்காதைங்கோ..&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புலிகளை நிர்வாணப்படுத்தி காட்சிக்கு வைத்த வன்மம் நிறைந்த இராணுவமும்.வன்மத்தை ரசிக்க சிங்களவர்களை பழக்கப்படுத்தும் சிங்கள அரசும் தன்னைத் தானே அழித்துக்க கொள்ளும் ஒரு வன்முறைச் சமுகத்தையே உருவாக்கும்.புத்தரின் புனித அரசமரம் உள்ள அநுராதபுரத்தில் நடந்த வன்மம்&lt;/STRONG&lt;&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;இக்கட்டுரை மீள்பதிவிடப் படுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-7727254218543076914?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/7727254218543076914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=7727254218543076914' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7727254218543076914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7727254218543076914'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/10/blog-post_25.html' title='நிர்வாண இராணுவம்..'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-5638616817955689103</id><published>2007-10-23T07:37:00.000-07:00</published><updated>2008-05-06T09:31:27.998-07:00</updated><title type='text'>யாழ்ப்பாணியும் மட்டக்களப்பானுமாகிய நான்.</title><content type='html'>காட்சி 1&lt;br /&gt;இடம் -மட்டக்களப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.மட்டக்களப்பின் வடக்குப்புறத்தே வாழைச்சேனைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஏறாவூர் என்று ஒரு ஊர் இருக்கு அது பாதிக்குப் பாதி முஸ்லிம்களையும் தமிழர்களையும் கொண்ட ஊர்.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருந்த ஊடலையும் உறவையும் கொலைகளையும் இன்னுமொரு  சந்தர்ப்பத்தில் சொல்லுகிறேன்.இப்போது சொல்லயிருக்கிற கதை வேற கதை.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கிலங்கையில் ஏறாவூர் காளிகோயில் பிரசித்தமான ஒன்று.தட்டார்கள் எனப்படும் விஸ்வகர்ம குலத்தினரால் நிர்வகிக்கப் படும் அந்த கோயிலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளும் அந்த குலத்தினரின் சொத்தாக இருந்தது.அவர்களைத் தவிர யாழ்ப்பானத்தார்களே அதிகம் அந்தப் பகுதியில் இருந்தனர்.யாழ்ப்பாணத்தார் என்றால் வெள்ளாளர்தான் பெருமளவில்.பருத்தித்துறை,வியாபாரிமூலை(இது பருத்திதுறைக்கு பக்கதிலதான் இருக்கு)மற்றும் தீவக காரர்கள்தான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகுதியை 4 ம் குறிச்சியெண்டும் சொல்லுவார்கள்.5ம் குறிச்சி ஏறாவூரின் அடுத்த பகுதி இதுவும் தமிழர் வாழும் பகுதி.1 ம் 2 ம் 3ம் குறிச்சிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டைகொருநாள் பள்ளிக்கூடத்தில படித்துக் கொண்டிருந்தன். யாழ்ப்பாணி உன்னை வெட்டணுண்டா.....எனக்கு தெரிந்தவரையில் அது -----(பெயர் சொல்லாமல் விடுறன்) அக்காவின் குரல்தான்.(அவவுக்கு ஒரு 45 வயதிருகலாம்) எங்கட பள்ளிக்கூட வகுப்பறை வரை குரல் கேட்டது.காளி கோயில் திருவிழா காலத்தில் மட்டும் அவவுக்கு குரல் அடைக்கும் மற்றம் படி நல்ல குரல். இப்பிடித்தான் அடிகடி ஏதாவது சண்டை வந்தால் யாழ்ப்பாணி என்ற குரல் பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பில் உள்ள பெருமளவு பலசரக்கு கடைகளும் மொத்த விற்பனை நிலையங்களும் யாழ்ப்பாணத்தவர்களுடையதே. ஏறாவூர் அதற்க்கு அண்டிய செங்கலடி போன்ற  இடங்களிலும்  இதே நிலையென்பதாலும் கோயில்களில் இருந்த யாழ்ப்பாணத்து பிராமண ஐயர்களின்  ஆதரவில் யாழ்ப்பானத்தவர்களுக்கு கிடைத்த முன்னுரிமையும் ஏறாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு எரிச்சலூட்டியதில் வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடியான சூழலில் நான் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 3 ம் வகுப்பு படிச்சுக் கொண்டிருந்தன்.(ஏறாவூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் என்றும் உண்டு இது அலிகார் மகா வித்தியாலயம் என்றும் சொல்லப் பட்டது) அப்ப நான் நல்ல கெட்டிக்காரன்?! வகுப்பில முதல் மாணவன் (இப்ப ? ). இப்படியிருக்கையில் 3ம் வகுப்பில் புதிய வகுப்பு ரீச்சருக்கு என் மீது &lt;br /&gt;ஏனோ கோபம். நான் நல்ல எழுதினாலும் திட்டுவார். இப்பிடி அவவைப் பிடிக்காமலே என் மூன்றாம் வகுப்பு ஓடிக் கொண்டிருந்தது.&lt;br /&gt; ஒரு நாள் பள்ளிக்கூடத்தில  நிண்ட இலந்த மரதில இலந்தப் பழம் பறிச்சு சாப்பிட்ட  10 மாணவர்கள் மாட்டுப்பட்டம் கையும் மெய்ய்யுமாக .(இலந்தப் பழம் புளியம் பழக் கோதுபோல கோதுடைய  உருண்டையான திராட்சை அளவு பருமன் உள்ள பழம் புளிப்புச் சுவை) ஆனால் என்னை மட்டும் அம்மாவைக் கூட்டிவரச் சொல்லி பேச்சும் கொடுத்தார். நாட்கள் இப்படி நகருகையில் மேலை வகுப்பு மாணவ்ர்கள் என்னை யாழ்ப்பாணி என்றும் பனங்கொட்டைசூப்பி எண்டு சொல்லுவதும் எனக்கு எரிச்சலூட்டியது. ஆனாலும் என் சக தோழர்கள் என்னை அப்பிடிச் சொன்னதில்லை.&lt;br /&gt;இப்படியே எனது 3ம் வகுப்பு முடிந்த போது 4ம் வகுப்புக்கு போவதற்க்கு முதலே டிசம்பர் விடுமுறையில் படிப்பதற்க்கு பாடப் புத்தகங்கள் தருவார்கள்.அது பெரும்பாலும் முன்னர் படித்த மாணவர்களின் பழைய புத்தகங்கள்(இலங்கையில் அரசாங்கத்தினால் சகல மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகம் வழங்கப் படும்) வகுப்பில் முதலாவதாக வரும் மாணவனில் இருந்து கொடுக்க ஆரம்பித்து புத்தகம் தீரும் வரை உள்ள மாணவர்களுக்கு கொடுப்பார்கள்.ஆனால் எனக்கு கொடுக்கவில்லை.காரணம் அந்த ரீச்சருக்கு என் மீதிருந்த கோபமே.&lt;br /&gt;&lt;br /&gt;என் வகுப்பு தோழர்களுக்கு எனக்கு தராதது வருதமாக இருக்க என் தோழன் ஒருவன் ஏன் ரிச்சர் சோமிக்கு புத்தகம் கொடுகலை என்டு கேட்டான். யாழ்பாணியள் இங்கவந்து படிச்சு உங்கலை முந்துவாங்கள்  நீங்கள் வழிசல்கள் மாதிரி வாய் த்துக்கொண்டிருங்க.....என்றார் சத்தமாகா..&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி-2&lt;br /&gt;&lt;br /&gt;இடம் -யாழ்ப்பாணம்&lt;br /&gt;&lt;br /&gt;சாவகச்சரியில் இருக்கும் அந்த ஊர் எனது அம்மாவின் சொந்த ஊர். நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மட்டக்கலப்பில் இருந்து வந்தவன் எண்ட படியால எல்லாரும் சற்று தள்ளியே இருந்தார்கள்.இருந்தாலும் நளவர் வீட்டுப் பிள்ளைகள் இருக்கும் வங்குக்கு என்னை அனுப்பாமல் விட்டதில் அம்மவின் சொந்தகாரரான அந்த ரீச்சருக்கு பெரும் பங்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவள்தான் அந்த வகுப்பின் முதல் மாணவி நல்ல அழகு துறு துறுவென இருப்பாள்(அவள் பற்றியகதை பெரும்கதை அது 12 வருசக் கதை அதைப் பிரகு சொல்லுறன்) அந்த பள்ளியில் செர்ந்த முதல் தவணைத் தேர்விலேயே நான் 2ம் மானவனாக வந்தேன்.இரண்டாம் தவணையும் இதை தக்க வைத்துக் கொண்டேன்.ஆனாலும் என்னுடன் அவ்வளவாக யாரும் சேருவதில்லை.பள்ளர் பிள்ளைகள் மட்டும் என்னுடன் கொஞ்சம் பழகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் தவணையில் நாந்தான் முதல் மாணவன்.தேர்வு மதிப்பெண் அட்டை கிடைத்தது எனகு மட்டும் மேடையில் கொடுத்தார்கல் முதாலம் பிள்ள்ளைக்கு அப்பிடி கொடுபது மரபு.5ம் வகுப்பு தொடங்கியது வகுப்பு ரீச்சர் மாணவகளுக்கு அட்வைஸ் கொடுத்தார் ஸ்கொலஸிப் வக்குப்பு நல்ல படிக்கவேணும் அங்க பாருங்க அவன் மட்டகளப்பான் அங்க படிச்சிட்டு வந்து உங்களை முந்திட்டான் ......என்று தொடர்ந்தது அவர் பேச்சு...அவள் என்ன நோக்கி நக்கலாகச் சிரித்தாள்...&lt;br /&gt;அடுத நாளில் இருந்து நான் பள்ளிக்கு கட் அடித்தேன்...என் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரிட்டசையை மட்டக்களப்புக்கு போய் எடுத்தேன்.எனது பள்ளியில் நான் மட்டுமே சித்தியடந்தேன்.வழமையாய் பாரட்டு விழா வைக்கும்  அந்த பள்ளிக் கூடம்  இம்முறை அப்படியொரு விழாவை வைக்கவில்லை.நான் மட்டும் பள்ளி முழுவது சொக்லேட் கொடுதபடி இருந்தேன்....&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விசயம் நான் யாழ்ப் பாணத்தில 5ம் வகுப்பு படித்த போது புலிகளின் பேச்சுப் போட்டியில் தென்மராச்சியில் முதல் பரிசு வாங்கி புலிகளுக்காக பல இடங்களில் பேசித்திரிந்தேன்...அப்போது அந்த சின்னவயதில் எங்களூரில் பேசும் போது அவளின் அப்பாவ&lt;br /&gt;ன் கையப் பிடித்தபடி அவள் என்னைப் பார்த்த பார்வை இப்போது வரைக்கும் நினைவிருக்கு நான் நினைகிறன் அவளுக்கு முன்பிருந்த வெறுப்பு இப்போது இல்லையென்றூ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-5638616817955689103?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/5638616817955689103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=5638616817955689103' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5638616817955689103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5638616817955689103'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/10/blog-post_23.html' title='யாழ்ப்பாணியும் மட்டக்களப்பானுமாகிய நான்.'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8340828887097261286</id><published>2007-10-21T20:59:00.000-07:00</published><updated>2007-10-21T21:46:46.422-07:00</updated><title type='text'>நான் ராமன்- சு.ஸ்டார் ரஜனி ஆவேசம்</title><content type='html'>நான் ராமன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என சு.ஸ்டார் ரஜனி சவால் விட்டார்.சண் குழும தொலைக்காட்சி நேற்று இதனை ஒளிபரப்பு செய்தது.மிகப் பரபரப்பான சூழலில் ரஜனி இதனைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ இராவணன் நான் ராமன் உன்னை அழிச்சு உங்கிட்ட இருந்து இந்த மக்கள காப்பத்துரதுக்குதாண்டா நா வந்திருக்கன். ரசனி திரும்பி நடந்தார். பாட்சா.... பாட்சா....&lt;br /&gt;என்று பின்னணியில் கேட்க பரிவாரங்கள்.ரசனி பின்னால் திரும்பி நடக்கத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா விருது விழாவில்  கலைஞரிடம் ராமர் க்கு ஆதரவாக பேசியதற்க்கும் இதற்கும் என்ன தொடர்பும் இல்லை. ஒரு தசாப்தம் முன்பாக பாட்சா படத்தில் ரகுவரனைப் பார்த்து  அன்வரின் நண்பன் மானிக் பாட்சா சொல்லும் டயலொக்.கே டிவி யில் நேத்துதான் முழுசா பாட்சா படம் பாத்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட கருமாந்திரம் பிடிச்ச பயலுகளா அதுக்கு அந்த படம் வாரதுக்கு சில வருசம் முன்னாடிதானே இந்த ராமர் பெயரால அத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் பாபர் மசுதி இடிக்கப்பட்டும்  பக்தி மெய்பிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா ரசனி, நாடடு நடப்புகளையும் மக்கள் எண்ணங்களையும் அப்பப்ப ரிவி ,பத்திரிகைகளை யும் பாருங்க. சும்மா பூச்சாண்டி காட்டுறதும் நல்லதில்ல கண்ணா  சாரி அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;கமலின் தென்னாலி பாத்த பிறகுதான் இலங்கயில் இத்தனை கொடுமை நடப்பது தெரியுமென்று சொன்னதைபோல தமிழ்நாட்டு பிரச்சனையிலும் கருத்து சொல்லிடுவிங்காளோண்ணு பய்மா இருக்கு. அவரின் பக்த கொடிகளா மன்னிக்கவும் கோடிளா நீங்களாவது உருப்பட்டா சரிதான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8340828887097261286?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8340828887097261286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8340828887097261286' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8340828887097261286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8340828887097261286'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/10/blog-post_6393.html' title='நான் ராமன்- சு.ஸ்டார் ரஜனி ஆவேசம்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-5327342730633140429</id><published>2007-10-21T06:29:00.000-07:00</published><updated>2007-10-21T07:59:45.898-07:00</updated><title type='text'>எங்களூரில் வெள்ளாளரும் பள்ளரும்...</title><content type='html'>எங்களூர் தென்மராட்ச்சியில் இருகிறது.அதை எங்களுர் எனபதை விட என் அம்மாவின் ஊர் என்பதே பொருத்தம்.நான் ஒருவருடத்திற்க்கும் சற்று அதிகமான காலம் அங்கிருந்திருக்கிறேன்.வெற்றியாகச் சொல்லவேண்டுமானால் யாழ்கோட்டை இயக்கத்தின் ஆழுகைக்குள் வந்த போது அந்த ஊருலேயே இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கோட்டை பிடித்தபோது சீனவெடி வெடித்த அண்ணாகள் பின்னால் ஓடியிருகிறேன்.வீட்டில் முன்னர் இயக்கத்தில் இருந்த என் மாமா இந்திய இராணுவத்துக்கு பயந்து மண்ணில் புதைத்து வைத்திருந்த புலிக்கொடியை அப்போதுதான் நான் தோண்டி எடுத்தேன்.&lt;br /&gt;என்கொரு பெருமை, கோட்டைபிடித்த சேதி வந்த அந்த மாலைப் பொழுதில் சந்தியில் ஏற்றிய புலிகொடி நான் தோண்டியெடுத்து கொடுத்தது என்பதில். &lt;br /&gt;அந்த சந்தியில் மூன்று மாவீரர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது அதில் ஒருவர் பள்ளர் மற்றயவர்களைப் பற்றி தெரியாது."அந்த பள்ப்பெடியன்"(இப்பிடித்தான் ஊருக்குள் சொன்னார்கள் அதனால்ததன் எனக்கு அவர் பள்ளரெண்டு தெரியும்) மேஜர் தரம் என்று நினைவு.அவரின் பெயரை அந்த ஊரின் பெருந் தெருவுக்கு வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமளவு வெள்ளாளர்களைக் கொண்ட அந்தப் பெருந்தெருவுக்கு அவர் பெயரை வைத்தது பற்றி&lt;br /&gt;ஊரி சத்தமில்லாமல் பேச்சடிபட்டது.சத்தம் போட்டு சாதி சொன்னால் 3 மாதம் பங்கர்.இப்பிடித்தான் ஒருத்தர் பள்ளன் தேங்காய் களவெடுத்துப் போட்டான் எண்டு சொன்னதுக்கு இயக்கம் களவெடுத்தவனை விட பள்ளர் என்று சொன்னவனுக்கு அதிக தண்டனை கொடுத்ததாம்.! இது மாதிரி நிறையச் சேதி வாறதால சனம் கப்சிப்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சண்முகம் ரீச்சர் நான் படிச்ச அந்த வகுப்புல வெள்ளாருக்கு மட்டும் தனியா வகுப்பு முடிஞ்சதும் சொல்லிகொடுப்பா.அத விடுவம் வெள்ளாளர் வீடுகளுக்குள்ள பள்ளர் வாரது எங்கள் ஊரில் இப்பவரைக்கும் இல்லைத்தான்.இப்ப சில இடங்கலில் வரவேற்பறை வரையும் வரவிடுகினம்.ஆனால் புழங்குறதில்ல.அதென்ன புழங்குறது எண்டுறியளோ அதுதான் கொடுக்கல் வாங்கல் செய்யுறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் இப்பிடி இருக்கையில நான் மட்டக்களப்புக்கு வந்துட்டன். சண்டை உச்சமடைய, இருந்த வெள்ளாளரில பாதிப்பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட வெள்ளாளர் எண்ணிக்கையில் குறையத் தொடங்கினர்.பள்ளர் இளைஞர்களும் வெளிநாட்டுக்குப் போனார்கள் ஆனால் வெள்ளாளரைப் போல குடும்பம் குடும்பமாகப் போகயில்ல.இப்ப வெள்ளாளர், பள்ளரையும் நளவரையும் மற்றசாதியினரையும் விட அதிக எண்ணிகையில் இல்லாமல் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளாளக் காணிகள் பள்ளருக்கு அதிக விலையில் கனடாவிலோ சுவிசிலோ வைத்து கைமாற்றப் பட்டது. சில வருடங்கள் முன்பு திருச்சியில் நடந்த ஒரு செத்த வீட்டில் இப்பிடி பள்ளருக்கு காணிவித்தது தொடர்பாக இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தேன்.இருவருமே பக்கத்துப் பக்கத்துக் காணிக்காரர்.ஒருவர் தனது காணியைப் பள்ளருக்கு வித்ததால் மற்றவரின் காணி மதிப்பு இறங்கி விட்டதே சண்டையின் பிரதான கருப் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சண்டையில் ஒருவர் சொன்னார் " பள் பெடிகளுக்கு இப்ப பணம் வந்துட்டுது.அதுதான் ஊரில ஒரு காணிவிடாம வாங்குறாங்கள்.எங்கடயதுகளும் காசுக்காக மரியாதையப் பாக்காமல் நளம் பள்ளுகளூக்கு காணியை விக்குதுகள்" இதையடுத்து இன்னொருவர் சொன்னார்" உவங்கள்  அறுவாங்கள் எங்கட வீடுகளை வாங்கி எங்கயிருந்தொ வந்ததுகளையெல்லாம் போராளி குடும்பம் மாவீரர் குடும்பம் எண்டு குடியமத்திப் போட்டாங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;அட இதை விடுங்கோ இப்ப ஊரில நடந்த ஒரு கூத்தைப் பாத்தியளோ! என்று செத்தவீட்டுக்கு வந்த இன்னொருவர் பேசத்தொடங்கினார் அவர்  சிலமாதங்களுக்கு முன்னர் இந்தியா  வந்தவராம்.&lt;br /&gt;" முதல் ஊரில 'அதுகளும்' ரியூசன் எண்டால் எங்களிட்டதானே வரோணும்.இப்ப என்னாடாவெண்டால் 'அதுகளிண்ட' இடத்தில போய்த்தான் எங்கட பிள்ளையளும் படிக்கோணும்.'அதுகள்' நடத்திற ரியூசந்தான்  பெரியது அவங்கள்தான் நல்ல மாஸ்டர்மரும்.அது சரியெண்டு சாதிபாக்கமல் பரவாயில்லையெண்டு நாங்கள் அனுப்பினம்.படிச்சால் சரிதானே சாதியில என்ன கிடக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவங்கள் ஒரு நடைமுறை கொண்டந்தாங்கள் பெற்றார் ஆசிரியர் சந்திப்பெண்டு.அது நல்ல விசயம் மெண்டு போனால், சந்திப்பு முடிஞ்சதும் சாப்பாடு எல்லாருக்கும். அவங்கள் சமைச்சதை அவங்கட ஆசிரியர்மாரும் எல்லாப் பிள்ளையளும் பெற்றாரும் ஒண்டாயிருந்து சாப்பிட வேணுமாம்" அவர் கூறி முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நீங்களும் சாப்பிட்டனியளோ?  மற்றவரின் கேள்வியில் நக்கல் இருந்தது. "பின்ன சாப்பிடாமல் வரமுடியுமே.பிள்ளையள் படிக்குது.அடுத்தடுத்த மாதாங்களில போகாமல் விடுவம் எண்டால் கட்டாயம் பெற்றார் வரொணுமாம்.அடுத்தமுறைக்கு நான் போகாமல் மனிசியை அனுப்பிவிட்டன்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு;&lt;br /&gt;&lt;br /&gt;*ஈழத்தில் சாதியென்பதே இல்லை.இல்லாததைப் பற்றிப் பேசக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;*கலியாணத்தில் மட்டும் சாதி பாக்கிறார்கள் மற்றம்படி சாதி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*வன்னியில் சாதி என்பதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியை வளர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*யாழ்ப்பாணத்தில் சில இடங்கலில் மட்டும் சாதி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தியாவைப் போல் ஈழத்தில் சாதிய அடக்கு முறைகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*இந்தியாவில் சொல்வதைப் போன்ற 'தலித்' என்றபதம் தேவையற்றது 'பஞ்சமர்' என்பதே போதுமானது&lt;br /&gt;&lt;br /&gt;மேற் கூறபட்ட சொற்றொடர்கள் என் கண்ணுக்கு கவர்ச்சியாகப் பட்டவை.அதனை சும்மா 'உஷா''துணை' குறிப்பாக தந்துள்ளேன்.&lt;br /&gt; &lt;br /&gt;முக்கிய குறிப்பு:&lt;br /&gt;இப்ப இயக்கத்தின் முக்கிய அரசியல் பொறுபுகளில இந்த ஊர் பெடியள்தான் இருகினமாம்.இன்னொன்று, முன்னர் சில பெரிய அடிபாட்டு காரரும் இந்த ஊர்க்காரத்தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-5327342730633140429?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/5327342730633140429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=5327342730633140429' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5327342730633140429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5327342730633140429'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/10/blog-post_21.html' title='எங்களூரில் வெள்ளாளரும் பள்ளரும்...'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-7405630678187900105</id><published>2007-10-09T08:34:00.000-07:00</published><updated>2007-10-09T08:56:15.308-07:00</updated><title type='text'>இரசாயனக் கம்பனிகளின் பலிக்களம்-ஒரு ஆவணப்படம்</title><content type='html'>"கடலூரைக் காப்போம்" என்ற ஆவணப் படமொன்று 'நிகரி' திரைப்பட வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டது.கொழும்பு மற்றும் சென்னையில் இயங்கும் நிகரி திரைப்படக் குழுவும் ,சென்னையில் உள்ள சமூக மாற்றத்திற்க்கான இளைஞர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் மிகக் குறைந்த செலவில் ஒரு மிதிவண்டிப் பேரணியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி,ஒரு அவலம் நிறைந்த மக்களின் கதைகளை இனிக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(இது முழுமையான படமல்ல சில பகுதிகள் விடுபட்டுள்ளன.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/zCeXowkNUHE"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zCeXowkNUHE" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/PaXp6NQbuxE"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/PaXp6NQbuxE" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-7405630678187900105?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/7405630678187900105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=7405630678187900105' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7405630678187900105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7405630678187900105'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/10/blog-post.html' title='இரசாயனக் கம்பனிகளின் பலிக்களம்-ஒரு ஆவணப்படம்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-824574123863216799</id><published>2007-07-14T23:13:00.000-07:00</published><updated>2007-07-14T23:14:33.745-07:00</updated><title type='text'>9th Madurai Documentary and Short Film Festival 2007</title><content type='html'>Dear Friends&lt;br /&gt;&lt;br /&gt;Greetings from Marupakkam, a media action group based in Madurai involved in organising regular screenings, video workshops and film festivals since 1996. We also make documentaries.&lt;br /&gt;&lt;br /&gt;We are happy to inform you that our 9th Madurai Film Festival will be organised on 2-6 December 2007 in Madurai.&lt;br /&gt;&lt;br /&gt;The festival is jointly organised by 15 organisations including educational institutions, voluntary organisatons, media groups and film societies.&lt;br /&gt;&lt;br /&gt;The festival will be a non-competitive one with no entry fee.  There is no limit for duration of the films.&lt;br /&gt;&lt;br /&gt;Short films and documentaries produced after January 2006 are eligible to take part in the festival.&lt;br /&gt;&lt;br /&gt;The films in non-tamil, non-English language should have subtitles in English.&lt;br /&gt;&lt;br /&gt;Films will be screened under three sections: Tamil 2) Rest of India 3) Foreign Films&lt;br /&gt;&lt;br /&gt;We invite the film makers to send their entries on DVD format with synopsis, filmography, stills, posters and other publicity materials on or before 30 September 2007.&lt;br /&gt;&lt;br /&gt;A Selection committee consisting of filmmakers, writers, teachers, activists, artists and students will select the best 80 films in total (including Tamil, Rest of India and Foreign short films and documentaries) to be screened in 10 venues.&lt;br /&gt;&lt;br /&gt;The selection committee’s recommendation will be declared on 31 October 2007.  Festival will not return the dvd’s as they will be used for further non-commercial screenings in and around Madurai, India.&lt;br /&gt;&lt;br /&gt;We invite the filmmakers to send their entries to the following address:&lt;br /&gt;&lt;br /&gt;Marupakkam,&lt;br /&gt;A 9/4 K.K.Nagar, Madurai 625 020, India&lt;br /&gt;Ph: +91 9344479353; +91 9344156392; +91 452 2523992&lt;br /&gt;Email: marupakkam@rediffmail.com&lt;br /&gt;&lt;br /&gt;We also have a retrospective section under which 10 best films (5 each) of two veteran documentary film makers will be screened.&lt;br /&gt;&lt;br /&gt;Besides Magic Lantern Foundation, New Delhi will screen 10 films from their Under Construction collection.&lt;br /&gt;&lt;br /&gt;Amudhan R.P.&lt;br /&gt;9th Madurai Documentary and Short Film Festival 2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-824574123863216799?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/824574123863216799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=824574123863216799' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/824574123863216799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/824574123863216799'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/07/9th-madurai-documentary-and-short-film.html' title='9th Madurai Documentary and Short Film Festival 2007'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-5836835423547775812</id><published>2007-06-26T02:09:00.000-07:00</published><updated>2007-06-26T03:55:06.429-07:00</updated><title type='text'>மாமா ஆகிவிட்டேன்.. இப்ப மாமாதான் ஸ்பெஸலுங்கோ?!</title><content type='html'>&lt;strong&gt;(அசுரன்,வரவையான் உள்ளிட்டவர்களின் மாமாப் பதிவுகளுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தில் இப்ப ஆளாளுக்கு தங்களுக்கு பிடிகாதவர்களை மாமா என்று அன்பின்பால் அழைக்கும் நிலையில் நானும் மாமா ஆகியிருகிறன்.உண்மையில் மாம என்ற அந்த இரண்டு எழுத்துக்களுக்குதான் எத்தினை மதிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கட வீட்டில நிறைய மாமாக்கள்.அவர்களில் மூத்த மாம எண்டு ஒருத்தர் இருப்பார்.அவரில் எல்லருக்கும் நல்ல மதிபிருக்குமுங்க.ஆனாலும் என்ர தாத்தாவுக்குதான்  பெரிய மதிப்பு தாடிவைத்து கையில் தடியோடு சாய்வு நாற்காலியில் இருக்கும் தாத்தா தனது பிள்ளைகளில் கண்டிப்பானவர்.பிள்ளைகளைக் கட்டுப்பாடக வளர்த்தார்.ஆனால் அவர் நல்ல மாமாவாக இருந்தார் எண்டு அம்மா சொன்னா.தாத்தாவின் இரண்டு தங்கைளின் பத்துப் பிள்ளைகளுக்கும் அவர்தான் மாமா.&lt;br /&gt;&lt;br /&gt;மாமாவான தாத்தா தனது தங்கைகளின் பிள்ளைகளுக்கு தனது வீட்டில் இருந்தே தேவையானவற்றையெல்லாம் கொடுத்தார்.தாத்தாவின் பிள்ளைகளைவிட தாத்தவின் மருமக்கள் அதிக அதிகாரம் செலுத்துபவர்களாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ர மூத்த மாமா பற்றி சொன்னன்.அவர் செரியான கண்டிப்பு.எங்களிலயும் கண்டிப்பாக இருப்பார்.ஆனால் அவரின் பிள்ளைகளுக்கு நல்ல செலவு செய்வார்.அவர் ஒரு பழைய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இப்ப தன்ர மூத்த பிள்ளையை லண்டனிலும் ரெண்டாவதை அமெரிக்காவிலும் செட்டில் பண்ணிவிட்டு பிரான்ஸில் இருகிறார்.அங்கதான் 20 வருசம் இருகிறார்.கமியூனிசம் கலியாணம் முடிக்கும் வரைதான் அதுக்குபிறகு பொறுப்புக்கள் வரும்போது அது சரிவராது என்பார்.நான் அமெரிக்காவை எதிர்க்கோணுமெண்டால் கலியாணம் முடி இந்த வருத்தம் சரிவரும் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்தமாமாதான் எனக்கு தமிழ் உணர்வு பெரியாரியம் எல்லாம் சொன்னவர். நான் இங்கிலிஸ் வகுப்புக்கு  கட் அடிச்சுப் போட்டு தமிழ் தமிழெண்டு திரியேக்க அவர்ட பிள்ளளயள் லண்டன் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள். "தம்பி தமிழ் உனக்குச் சோறு போடாது பேசம இங்கிலிஸில டெவலோப் பண்ணிட்டு அமெரிக்கா போக முடிந்தால் போ" என்கிர அவரின் அலோசனைக்கு இப்போது எங்கள் எல்லா மாமாக்களிடமும் நல்ல மதிப்பிருக்கு.குடும்பச் சண்டைகளில் மூத்த மாமாவோடு மல்லுக்கு நிக்கும் மற்ற மாமாக்கள் இந்த மாதிரி விசயத்தில் அவரி எதிர்ப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;எனர மற்ற மாமாக்களும் தமிழ் தேசியத்துக்குள் வளந்தவர்கள்தான்.மூத்தமாவைப்போல் கம்யூனிசத்துக்குள் இருந்து வராமல் நேரடியாக தமிழ்தேசியத்துக்குள் வந்தவர்கள். திராவிட இயக்க செல்வாக்கு அவர்களிடம் இப்போதும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ம்...இதில தமிழ்நாட்டிற்க்கு வந்த பிறகு கூடப் படிகிறவனில் இருந்து கூட்டிக்குடுகிறவன் வரைக்கும் பொலிஸ் மாமாக்கள் ஈறாக பல மாமாக்காளைத்தெரியும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;இதை எழுத என்ன காரணமுன்னா என்னோட ஒண்ணுவிட்ட அக்கா ஒருத்திக்கு பொண்ணு பிறந்திருக்குது அதனால நான் இப்பா மாமாவாகிட்டனுங்கோ..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரி, அசுரன் உள்ளிட்டவர்கள் எப்படி மாமாக்களை தீர்மானம் செய்கிறார்கள் எனபதி எனக்கும் சொன்னா நானும் இனி அவங்கள மாதிரிப் பதிவு போடுறன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-5836835423547775812?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/5836835423547775812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=5836835423547775812' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5836835423547775812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5836835423547775812'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/06/blog-post.html' title='மாமா ஆகிவிட்டேன்.. இப்ப மாமாதான் ஸ்பெஸலுங்கோ?!'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-5113364023185276726</id><published>2007-05-30T22:03:00.000-07:00</published><updated>2007-05-31T00:32:51.926-07:00</updated><title type='text'>ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்</title><content type='html'>&lt;em&gt;புத்தரின் படுகொலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று என் கனவில்&lt;br /&gt;புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.&lt;br /&gt;சிவில் உடை அணிந்த&lt;br /&gt;அரச காவலர் அவரைக் கொன்றனர்.&lt;br /&gt;யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே&lt;br /&gt;அவரது சடலம் குருதியில் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் இருளில்&lt;br /&gt;அமைச்சர்கள் வந்தனர்.&lt;br /&gt;'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை&lt;br /&gt;பின் ஏன் கொன்றீர்?'&lt;br /&gt;என்று சினந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை ஐயா,&lt;br /&gt;தவறுகள் எதுவும் நிகழவே இல்லை&lt;br /&gt;இவரைச் சுடாமல்&lt;br /&gt;ஓர் ஈயினைக் கூடச்&lt;br /&gt;சுடமுடியாது போயிற்று எம்மால்&lt;br /&gt;ஆகையினால்......&lt;br /&gt;என்றனர் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி சரி&lt;br /&gt;உடனே மறையுங்கள் பிணத்தை'&lt;br /&gt;என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவில் உடையாளர்&lt;br /&gt;பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.&lt;br /&gt;தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்&lt;br /&gt;புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்&lt;br /&gt;*சிகாலோவாத சூத்திரத்தினைக்&lt;br /&gt;கொழுத்தி எரித்தனர்.&lt;br /&gt;புத்தரின் சடலம் அஸ்தியானது&lt;br /&gt;*தம்ம பதமும்தான் சாம்பரானது.&lt;br /&gt;&lt;br /&gt;                        -கவிஞர் எம்.ஏ.நுஃமான்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இ&lt;/strong&gt;ப்பத்தியாறு வருடங்களுக்கு முன்னர் இதே சூன் முதலாம் திகதி காலைப் பொழுது,  நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பாதிரியார் தவீது அடிகள் அவரைத்தேடி வந்த ஒரு சேதி கேட்டு மாரடைப்பால் மரணமடைகிறார்.அவருக்கு கிடைத்த அதே செய்தியை &lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் ஒப்பாரி வைத்தபடியே யாழ்ப்பாணத்தின் மையப் பகுதி நோக்கி ஓடுகிறார்கள்.ஒரு பெருங் கூட்டம் அந்த இடத்தில் கூடிவிட்டது.அந்த இடம் முழுவதும் அழுகையும் ஒப்பாரியும் நிறைந்திருந்தது. எரிந்து கொண்டிருக்கும் தணல் மேட்டில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது.அத்தனை பேர்களின் கண்ணீராலும் அந்த தீயை அணைக்க முடியவில்லை.ஈழத்தமிழர்களின் தேசிய நூலகமான யாழ் நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் ,ஒலி ஒளி நாடக்களும் எரிந்து சம்பலாகிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. ஆனலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான  முதல் விதை போடப்பட்டது..சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய  நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை  உணரப்பட்டது. யாழ் நகரபிதா,வண. லோங் அடிகள்,இந்திய தூதுவராலய செயலர்,அமெரிக்கதூதுவர்,பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள்,பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது.இந்திய கட்டடக் கலைஞர் நரசிம்மன் என்பவரின்  வழிகாட்டுதலில் &lt;br /&gt;யாழ் நூலகக் கட்டடம் உருப் பெறத் தொடங்கியது.பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிபினாலும் உருபெற்ற நூலகம் கம்பிரமாக தலை நிமிர்ந்து நின்றது&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம்.தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது.11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது.யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்புமையங்கள்,சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று..&lt;br /&gt;&lt;br /&gt;ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது.இளைஞர்கள் &lt;br /&gt;கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும் ,நூலகங்களும் மாறியிருந்தது.சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர் மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது.அவர்கள் தருணம் பார்த்திருந்தனர்.1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்க்கள் தமிழர் கல்வி ஆதரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது .&lt;br /&gt;1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப் பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும்,கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட &lt;br /&gt;சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்ப்பணதில் உள்ள புத்தகக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது,தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு ,மகிழூர்ந்து என்பன தீக்கிரையாக்கப் பட்டன.1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கோண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல் &lt;br /&gt;தினசரிப் பத்திரிகையான  ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்க்கும் தீ வைக்கப்பட்டது.அந்த அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது.எரிந்து கொண்டிருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இருந்தவ்ர்களில் பலரும் சிதறி ஓட இருவர் அலுவலகதினுள் சிக்குண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீ யாழ்ப்பாண நகரமெங்க்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ்  நூலகத்தின் மேற்க்கு மூலையில் முதல் தீ வைக்கப் பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவது தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள்&lt;br /&gt;துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர்.தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் காவல்துறை தலமை அலுவலகம் இருந்தது.அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னாகள்.கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக் காணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில்&lt;br /&gt;தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில்  சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர்களும் சனாதிபதி செயவர்த்தனாவின்நெருக்கத்திற்குரியவர்களுமான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசு விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர்.1983  தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும்.தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களும். இவர்களின் ஏற்பாட்டில்யே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர்.இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில்&lt;br /&gt;சனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாளில் மொத்த  யாழ்ப்பாணக் கல்வி வளத்தையும் எரித்துவிட நினைத்து சிங்கள அரசு வைத்த தீ தமிழரின் உரிமைத் தீப் பிளம்பாக மாறியது.அந்த தீ இன்று கொழுந்துவிட்டு இலங்கையெங்க்கும் எரிகிறது.ஈழத் தமிழரின் தேசிய அடையாளதின் மீது நிகழ்ந்த ஒரு படுகொலையாகவே காலம் முழுவதிலும் யாழ் நூலக எரிப்பு சொல்லப்படும்.&lt;br /&gt;யாழ் நூலகம் பற்றிப் பேசுகிறபோதெல்லம் இப்போதும் பலர் அழுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எந்த வன்முறை பிரதேசத்திலும் நிகழ்ந்திராத ஒரு கொடுமையினை சிங்கள அரசு நிகழ்த்திக்காட்டியது.ஒரு அரசே தனது நாட்டின் மிகப் பெரும் நூலகத்தை எரிகிறதென்றால் அதன் வன்முறை உணர்வு எத்தனை உச்சமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;1984 இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின் &lt;br /&gt;பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பத்திரங்களைப் பெறலாயிற்று.இந்த கட்டுரையை எழுதும் இந்த கணம் வரைக்கும்  நூலகம் இராணுவதினரால் சுற்றிவளைக்கப்பட இராணுவ &lt;br /&gt;அதி உயர் பாதுகாப்பு வலையதுக்குள்ளேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சர்வதேசகக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டியிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவதற்கு உதவின. பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர்.இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.&lt;br /&gt;இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம்  ஒரு படுகொலையின் &lt;br /&gt;சமாதியாகவே இருகிறது இப்போது மீளவும் கட்டப் பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே.முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை.பெருமபால பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம் &lt;br /&gt;தனித்தே இருகிறது.அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   (இக்கட்டுரை அப்பால் தமிழ் இணையத்தளம் மற்றும் தமிழ் ஓசை பத்திரிகைக்காக எழுதப்பட்டது)                                                                                                                                              -செளமியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-5113364023185276726?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/5113364023185276726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=5113364023185276726' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5113364023185276726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5113364023185276726'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/05/26.html' title='ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-7778356849025117335</id><published>2007-05-27T00:27:00.000-07:00</published><updated>2007-05-27T04:34:44.333-07:00</updated><title type='text'>-அப்பா-கனிமொழியின் கவிதை</title><content type='html'>கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம் அதிசயமானதொன்றல்ல.இந்திய அரசியலில் இது புதுமையும் இல்லை.இதைப் பற்றி ஊடகங்களில் நிகழும் விமர்சனங்கள்தான் புதுமையானது.&lt;br /&gt; அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை 'அகத்திணை' என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;சின்ன வயதில் &lt;br /&gt;செய்த தவறுகளுக்கெல்லாம்&lt;br /&gt;பூச்சாண்டியாய் உன்&lt;br /&gt;பெயரைத்தான் சொன்னாள்&lt;br /&gt;அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் கணக்குப் பாடம்&lt;br /&gt;குழம்பியபோது&lt;br /&gt;பத்திரிகையில் புதைந்த&lt;br /&gt;உன் தியானத்தை எப்பிடிக்&lt;br /&gt;கலைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறை நாள்களில்&lt;br /&gt;சினிமாவுக்குப் போக&lt;br /&gt;அம்மாவைத் தூதுவிடுவதே&lt;br /&gt;ஆபத்தற்றதாய் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;வாரம் ஒருமுறை&lt;br /&gt;பின் சீட்டில் வைத்து&lt;br /&gt;தேக்காவுக்கு அழைத்துச் சென்றது&lt;br /&gt;&lt;br /&gt;உன் கால் செருப்பு&lt;br /&gt;ஓசையில் &lt;br /&gt;வீடு அமைதியானது&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுக்குப் பிடிக்கவில்லை&lt;br /&gt;என்று குட்டை ஸ்கர்ட்டை&lt;br /&gt;அம்மா எதிர்த்தது&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் நீ  என்று&lt;br /&gt;பதிந்துபோய்விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;பெருமாள் கோயிலில்&lt;br /&gt;யாரோ ஒருவன் &lt;br /&gt;கையில் பிடித்துக்கொடுத்தபோது&lt;br /&gt;நடுங்கிய உன் கைகளில்&lt;br /&gt;தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்&lt;br /&gt;இத்தனை காலமாய்?&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;                &lt;br /&gt;                &lt;em&gt;-கனிமொழி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்னராட்சியில் ஒருவர் மன்னராக முடிசூடிக்கொண்டால்  அவரது சந்ததியில் வாரிசு இல்லாத ஒரு நிலை உருவாகும் போது மட்டுமே வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும்.. இல்லை வாரிசு சிறுவனாக இருந்தால் அந்த வாரிசு வளரும் வரை இன்னுமொருவர்  ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து அந்த வாரிசிடம் ஒப்படைக்க வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய இந்த மன்னர் முறைமைக்கு சற்றும் குறைவில்லாத அதிகார பரிமாற்றமே இந்திய அரசியலிலும் உள்ளது.இந்த அரசியலில் உருவெடுக்கும் பலவாரிசுகளோடு ஒப்பிடுகையில் கனிமொழி விசயமறிந்த பெண் என்றே தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-7778356849025117335?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/7778356849025117335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=7778356849025117335' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7778356849025117335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7778356849025117335'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/05/blog-post_27.html' title='-அப்பா-கனிமொழியின் கவிதை'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-4811680467910907848</id><published>2007-05-22T00:11:00.000-07:00</published><updated>2007-05-22T05:38:22.032-07:00</updated><title type='text'>எரிக்கப் பட்ட -யாழ்ப்பாண நூலகம் பற்றிய வீடியோ ஆவணப்படம்</title><content type='html'>மே 31 நள்ளிரவில் நூலகத்தில் வைக்கப்பட்ட தீ 26 வருடங்கள் தண்டி இன்றுவரையும் எரிந்துகொண்டே இருகிறது.நான் பிறந்து 18 நாட்களில்&lt;br /&gt; எரியூட்டப்பட்ட அந்த நூலகம் குறித்த ஆவணப் படத்தினை எடுக்க வேண்டும் என்ற எனது கனவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல் வடிவம் கொடுத்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;img src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/JaffLib01.jpg"&gt;&lt;br /&gt;2005 இல் நூலகம் தொடர்பான ஆவணப் படம் ஒன்றினை எடுக்க வேண்டுமென பலரிடம் சொன்னேன்.2006 இல்  நூலகம் எரிகப்பட்டு 25 ஆண்டுகள். 97,000 புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் சிங்கள இனவாதத் தீயில் எரிந்து சாம்பலாகின.இது தமிழர் கலச்சாரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படுகொலையின் வரலாற்றை பதிவு செய்வது அவசியமாகிறது.நூலகம் ஒன்றின் அவசியம் யாழ்பாணச் சூழலில் உணரப்பட்டு 1930களில் அது உருவாக்கம் பெறறது முதல் இன்றுவரையான நூலகத்தின் வராலறும் தமிழரின் வழ்வியலும் அரசியலும் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு தனிமனித முயற்சியாக தொடங்கினாலும் இதற்கான அனைவரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே இந்த ஆவணப் படத்தை முழுமையானதாக உருவாக்க  முடியும்.யாருடைய உதவியுமற்று தொடங்கிய இந்த முயற்சிக்கு சரிநிகர் சிவகுமார் என்னுடன் இணைந்திருந்தார்.இன்னும் இணைந்திருக்கிறார்.பத்மநாப அய்யர்,துவாரகன் ஈழநாதன்.கனேடிய நண்பர்கள் சிலர் என்னை ஊக்கப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலகம் பற்றிய பல சேதிகளும் தகவல்களும் படங்களும் இன்னும் பலரிடம் இருக்கலாம்.அது உங்களிடமும் இருக்கலாம்.அவையெல்லாம் இணைத்ததாகவே இந்த ஆவணப் படம் இருக்க வேண்டும் அதற்க்கு அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை. கடந்த வருடத்தில் மீண்டும் சண்டை சூழ்ந்த சூழலில்  மிகுந்த சிரமம் எடுத்து இந்த படத்தை எடுத்தேன்.பண நெருக்கடியும் தகவல்களைத் தேடுவதில் உள்ள நெருக்கடியும் இருக்கும் சூழலில் இந்த முயற்சியை மேற்கொள்ளுகிறேன் இதற்க்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 20 தினங்களில் இந்த ஆவணப்படத்தினை உங்கல் பார்வைக்கு வழங்க முடியும் என் எண்ணுகிறேன்.உங்களிடம் தகவல்கள் படங்கல் இருப்பின் என்னுடன் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;img src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/JaffLib10.jpg"&gt;&lt;br /&gt;"எரியும் நினைவுகள்" ( 55 நிமிட வீடியோ ஆவணப் படம்)&lt;br /&gt; &lt;br /&gt;யாழ் நூலக ஆவணப் படத்தினை முப் பரிமாணத்தில் நாம் எமது படத்தில் பார்க்கின்றோம்.மூன்று முக்கிய மையப் பொருட்களுக்கு அமைவாகவே 55 நிமிட நேரப் படம் நகர்ந்து செல்கிறது.பண்பாடு ,அரசியல்,சமூகவியல் ஆகிய மூன்று பிரதான அம்சங்களின் பின்னணியில் நூலகம் பார்க்கப் படவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் வரலாறும் நூலகத்தின் கலாச்சார முக்கியத்துவமும்.: &lt;br /&gt;யாழ்ப்பாண நூலகம் தமிழரின் தேசிய காலாச்சார மையமாக மாறியமை,யாழ் நூலகத்தின் உருவாக்கம். திரவிட தனித்துவம் இருக்கவேண்டும் என்பதும் நூலகம் ஒரு அடையாளத்துகுரியதாக இருக்க வேண்டும் மென்ற ஆசையும் நூலக உருவாக்கமும். நூலகம் ஒரு பண்பாட்டு வடிவமாகவும் சமய கலச்சார மையமாகவும் யாழ்ப்பாணத்தாரிடம் உருவெடுத்தமை உதாரணமாக சரஸ்வதி பூசை ஒரு கலச்சார விழாவாக நூலகத்தில் கொண்டாடப் பட்டமை தங்கள் பிள்ளைகள் பரிட்சையில் சித்தியானால் நூலகத்தினுள் பொங்கல் வைத்தல் போன்றவற்ரை கொள்ள முடியும்.இன்றுவரையும் யாழ்பாண நூலகம் ஒரு காலாச்சார அடையாளமாக பார்க்கபடுகின்ற நிலை.யாழ்ப்பாண கலாச்சாரத்தினையும் நூலகத்தினையும் இணைத்து எமது படத்தில் பார்க்க இருக்கின்றோம் . &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;அரசியலில் நூலகம் :&lt;/strong&gt; &lt;br /&gt;நூலகம் மூன்று அரசியல் நிலைகளில் இருந்துள்ளது. முதலாவதாக 1960 தில் நூலகத் திறப்பு அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ் மாநகர சபைத்தேர்தலில்  மீண்டும் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது(1959 இல் நூலகம் திறக்கப் பட்டது 61 இல் அல்பிரட் துரையப்பா யாழ் மேயராகின்றார்) &lt;br /&gt;இதன் பின்னர் த்மிழரின் தேசியச் சின்னமாகௌருவெடுத்த நூலகம் 1981 இல் சிறீலங்கா அரச ஆதரவோடு எரிக்கப் படுகிறது .இதன் பின்னர் இலங்கையின் தேசிய அரசியல் அரங்கிலும் இனமுரண்பாட்டிலும் அது பிரதான பாத்திரமாக மாறுகிறது. இப்போது வரையும் தேசிய அரசியலில் அது பிரதான பங்கு வகிப்பதாகவே உள்ளது &lt;br /&gt;இரண்டு பிரதான தேசியக்கட்சிகளின் அரசியலிலும் அதேநேரம் போராட்ட அரசியலிலும் நூலகம் முக்கிய பாத்திரமாகிறது.&lt;br /&gt;மூன்றாவதாக அது சர்வதேச அரசியல் அந்தஸ்து பெற்ற ஒன்றாகவும் உள்ளது.இன்று சர்வதேச சமூகத்தின் பார்வைகுட்பட்டதாக அது உள்ளது. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;சமூகவியல் நோக்கில் நூலகம் : &lt;/strong&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி முக்கியத்துவம் காரணமாக கல்வியோடு தொடர்புடைய நூலகம் மக்கள் மத்தியில் முகியத்துவம் மிகுந்ததாகவுள்ளது.யாழ்ப்பாணச்சமூகக் கட்டமைபில் சிறப்பியல்புகளில் ஒன்று சனசமூக நிலயங்கள்.ஒவோரு ஊரிலும் இருகின்ற சனசமூக நிலயங்களுக்கெல்லம் மையப் புள்ளியாக யாழ்நூலகம் உருமாறுகிறது.சனசமூக நிலயங்களுக்கும் மக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பிருந்தது.மக்கள் ஒன்றுகூடி கருத்துக்களை பரிமாறுவதற்கான தளமாக அது இருந்தது.பின்னாளில் போராளிகளுக்கான தொடர்பு மையமகவும் மாறியது இந்தப் பின்னணியில் நேரடியாக யாழ் நூலகத்தோடு தொடர்பு பட்டிருக்காத பலரும் சமூகப் பாரம்பரியத்தின் ஊடாக தொடர்பு பெற்றிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக,&lt;br /&gt;அழகான கட்டடமாகவும் மிக நெருக்கமான தொடர்பு பட்டதாகவும் துருத்திகொண்டு தெரியும் யாழ் நூலகம் தமிழரை பழி தீர்பதற்கு சரியா தெரிவாக இருந்திருகிறது.இதனப் போலவே எவ்வாறு தமிழரைப் பழிதீர்பதற்கு இந்த நூலகம் பயன் படுத்தப்பட்டதோ அதே போல் தமிழரை தன்வசப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இதனை மையப் படுத்திய தமிழரின் உளவியல் சமூகவியல் யதர்த்தமும் அதேபோல் அரச உளவியலும் இந்த படத்தில் ஆரயப் படுகிறன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 25 வருடகால இனப்படுகொலைப் போரியலில் நூலகம் பங்களித்து நிற்கிறது.போராளிகளின் வாசிப்புக்கும் பின்னர் கோட்டைக்கெதிரான சண்டையில் போராளிகளின் அரணாகவும் நூலகம் பயன்பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு: someeth13@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-4811680467910907848?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/4811680467910907848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=4811680467910907848' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/4811680467910907848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/4811680467910907848'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/05/blog-post_22.html' title='எரிக்கப் பட்ட -யாழ்ப்பாண நூலகம் பற்றிய வீடியோ ஆவணப்படம்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-6001354159604692142</id><published>2007-05-19T06:49:00.000-07:00</published><updated>2007-05-19T08:01:47.409-07:00</updated><title type='text'>நகுலன்...காலமானார்.</title><content type='html'>17.05.2007 அன்று மிக அமைதியான வாழ்வியலின் ஒரு நாடகக்காரனாக வாழ்ந்த நகுலன் என்கிற எழுத்து ஆழுமை நிரந்தர அமைதிக்குப் போய்விட்டது. இன்று(19.05.2007) அவரின் இறுதி நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/DSC_0087.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/DSC_0087.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபதற்கென்றுதான் &lt;br /&gt;வருகிறோம் &lt;br /&gt;இல்லாமல் போகிறோம்.&lt;br /&gt;                 &lt;br /&gt;            -நகுலன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவீன தமிழ் இலக்கியத்தின் அற்புதமான படைப்பளி.அவர் எப்போதும்  எந்த குழுக்களுக்குள்ளும்  சிக்கிகொள்ளாத ஒரு நீடித்த தனிமையில் இருந்தார்.இறக்கும் போது அந்த தனிமை  அவரை யாரும் நெருங்க முடியாத துரத்திற்க்கு கொண்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;நகுலன் என்கிற டி.கே.துரைசாமி பிரந்தது தமிழ் நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் வளர்ந்தது இறுதிவரை வாழ்ந்தது எல்லாமே கேரளத்தின் திருவானந்தபுரத்தில்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராச்சிப் பட்டமும் பெற்றவர்.திருவானந்த புரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேரசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலாசிரியர் ,சிறுகதை எழுத்தாளர்.கவிஞர்,விமர்சகர்,ஆராச்சியாளர் என்கிற பல பரிணாமங்களைக் கொண்டாலும் எந்த இத்தியாதிக் இலக்கியக் குழுகளிலும் சிக்காதவர்  நகுலன்.&lt;br /&gt;&lt;br /&gt;காமம், மரபு,பிரம்மச்சர்யம்,காமம்,தனிமை,தர்க்கம் என் நீளும் நகுலனின் எழுதுலகம் அலாதியானது. ஏழ்மையும் ,தனிமையும் அவருடன் எப்போதும் கூட இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நகுலன் கவிதைகளை மீண்டுமொருமுறை படித படியே அவர் எழுதாலேயே அவரை அஞ்சலிப்போம்.தன் மரணம் குறித்து அவர் நீறையவே எழுதியிருகிறார்.அதை நோக்கி அவர் காத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/DSC_0122-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/DSC_0122-1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" ராத்திரியில்&lt;br /&gt;ஒவ்வொரு நட்சத்திரமும்&lt;br /&gt;என்னை பிரசவிக்கிறது"&lt;br /&gt;        &lt;br /&gt;           -நகுலன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/DSC_0079.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/DSC_0079.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"one said:&lt;br /&gt;The cat has its claws&lt;br /&gt;The rat has its teeth&lt;br /&gt;Even the bird has its beak&lt;br /&gt;What have you?&lt;br /&gt;The other said:&lt;br /&gt;Flash wedded to the mind&lt;br /&gt;Subject to the  school of suffering and&lt;br /&gt;survival"&lt;br /&gt;&lt;br /&gt;-Nakulan&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/CNV000018_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://i144.photobucket.com/albums/r189/someeth_2006/CNV000018_2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( நண்பர் காஞ்சனை சீனிவாசன் அவர்களின் நகுலன் குறித்த புகைப் பட ஆவணத்தில் இருந்து எடுக்கப் பட்ட படங்கள் இவை. நகுலனின் மறைவுக்கு சில மாதங்கள் முன்னர் இந்தப் வண்ணப்படங்கள் எடுக்கப் பட்டன.கறுப்பு வெள்ளைப் படம் சில வருடங்கள் முன்னர் எடுக்கப் பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-6001354159604692142?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/6001354159604692142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=6001354159604692142' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/6001354159604692142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/6001354159604692142'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/05/blog-post.html' title='நகுலன்...காலமானார்.'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-7949734679506498014</id><published>2007-05-18T03:25:00.000-07:00</published><updated>2007-05-18T04:22:57.244-07:00</updated><title type='text'>மே 13....படுகொலையின் மற்றுமொரு நாள்.</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;மே 13 என்பது என் வழ்வின் அற்புதமான நாளாகத் தான் எப்போதும் இருந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;1981 இல்  மே 13 க்கு பின்னரான நாட்களில் தீட்டப் பட்ட கொடும் திட்டத்தின் படுகொலையின் செய்தியினை மே 31 நள்ளிரவில் யாழ் நூலகத்தில் கொழுந்துவிட்டெரிந்த தீ உலகிற்க்குச் சொல்லியது. 2006 அந்த படுகொலைக்கு 25 வயது.அதற்க்கு 18 தினம் முன்பாக மே 13 நள்ளிரவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் உறங்கிகொண்டிருந்த அப்பாவிகளை உயிர்பலிவாங்கின சில துப்பாக்கிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மறந்தாலும் மே 13 என்னைச் சூழ உள்ளவர்களால் எப்போதும் நினைவு படுத்தப்படும் நாள்.இந்த ஆண்டு அதற்கு பல தினங்கள் முன்பதாகவே அது எனக்கு நினைவில் வலியாய் வந்தது.கடந்த வருடத்தில்  யாழ்ப்பாணத்தில் அந்த மக்களின், சின்ன் சின்னப் பிள்ளைகளின் உணர்வினைக் சில நாட்கள் கூடவே இருந்து கண்டிருகிறேன்.அதனைப் பதிவு செய்திருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்தவர்கள் குறித்த விபரம் தெரியும் என்று நீதிபதியிடம் சொன்ன  சாட்சிகள் இன்றுவரை என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் இனியும் தெரியப்போவதில்லை.யார் கொலை செய்தார்கள் என்பதும் இனித்தெரியப் போவதில்லை.ஒருகிராமமே ஏதிலிகளானது........&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மே 13 படுகொலையில் இறந்துபோன ஒரு வயது கூட ஆகாத சின்னப் பிஞ்சுகள் இரத்ததில் மிதந்ததைப் பார்த்த இளம் குழந்தைகளின்  உணர்வுகளை, சென்ற வருடத்தில் கட்டுரையாக எழுதியிருந்தேன்.ஆங்கிலத்தில் எழுதப் பட்ட அந்த கட்டுரையை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(உங்கள் வேலைப் பளுக்களுகிடையில் இந்தக் கட்டுரையைப் படிப்பது கடினமெனில் நேரமிருக்கையில்  வாசியுங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Human rights: Fear stalks the survivors of Allaipiddy&lt;/strong&gt;&lt;br /&gt;By: S.Somitharan&lt;br /&gt;Courtesy: Northeastern Monthly - July 2006&lt;br /&gt;&lt;br /&gt;   We are scared. We d not know why they kill little children. After the massacre that night we peeped through the window. Children were swimming in pools of blood. My uncle was also in the same state,? said a young girl. &lt;br /&gt;&lt;br /&gt;Another girl added ?Those who did not see the actual scene saw pictures of the dead kids. We like to live at Allaipiddy but we are scared.?&lt;br /&gt;&lt;br /&gt;These children (whose names like those of most others in this article are withheld for security reasons) are displaced in a Catholic church in Jaffna town after the massacre at Allaipiddy in Kayts on 13 May. Like this child others too are bereft of their homes and cannot return. &lt;br /&gt;&lt;br /&gt;Ironically, none but the Sri Lanka navy and the EPDP cadres in Allaipiddy are willing to give protection to the civilians. Let alone being reluctant to accept security guarantees from the navy and EPDP, the civilians are also apprehensive of residing near camps in fear such places might be attacked by the Tigers.&lt;br /&gt;&lt;br /&gt;The people of Allaipiddy returned to the village they abandoned in 1990 after the Ceasefire Agreement of 2002. They rebuilt their homes and businesses. Till 13 May this year they believed they could live in Allaipiddy though fighting was raging elsewhere. Today however residents feel the killings at Allaipiddy are without precedent because unlike on other instances where people of the area are arrested on suspicion after an attack on government forces, in the case of Allaipiddy, the navy deliberately targeted civilians, including children, without cause. &lt;br /&gt;&lt;br /&gt; I am quite certain the victims had nothing to do with any subversive activity. It is precisely this reason that we feel there is no guarantee for the lives of anyone at Allaipiddy. That is why the whole village fled elsewhere for refuge,? said a displaced resident from the village. &lt;br /&gt;&lt;br /&gt;Residents however believe that the navy was interested in acquiring the house where the family was massacred, but its owners were unwilling to part with it. This could be the punishment.&lt;br /&gt;&lt;br /&gt;Allaipiddy, as was the case in most of the villages that are now within the 144 sq. km. high security zone (HSZ), first suffered displacement in 1990. Many of the survivors are fishing families from coastal areas such as Kankesanthurai and Keerimalai, while others are from the interior farms of Tellipalai. &lt;br /&gt;&lt;br /&gt;The Sri Lankan security forces moved into Allaipiddy in 1990 because of a need to establish a camp to facilitate troop movement and supply lines to the Jaffna Fort, which was at that time under the control of the Sri Lanka government. The disappearances, extrajudicial executions and sheer terror perpetrated by the security forces on the civilian population at Allaipiddy forced them to vacate the village. &lt;br /&gt;&lt;br /&gt;It is believed more than 100 persons were either killed or disappeared from that village during the military campaign of 1990. (An account of the depopulation of three villages: Mandatheevu, Allaipiddy and Mankumban are set out in a North East Secretariat for Human Rights ? NESOHR ? report published in 2005). What remained till resettlement began after the CFA was initialled were the navy and the EPDP.&lt;br /&gt;&lt;br /&gt;Allaipiddy will remain a contentious spot because it occupies the strategically important position it does. As long as the LTTE retains its base at Pooneryan, the navy needs Allaipiddy to control LTTE sea movements between its base and the government facilities at Kankensanthurai. It will also be of some importance as a supply line for troops in Jaffna. &lt;br /&gt;&lt;br /&gt;Rev Fr. Amalraj a Catholic priest attached to the parish at Allaipiddy rescued some injured people from certain death by taking them to hospital on the night of 13 May. The navy tried its best to prevent him in fear the survivors would later identify the killers. Through his prompt and humane action three persons survived and are now witnesses ? two old people and a child. It is believed that the woman took a glancing shot and fell down and the killers had left her for dead. The man was severely injured and was admitted to hospital, but lived to tell the tale. The child was hiding behind a door and saw all what happened.&lt;br /&gt;&lt;br /&gt; Returning to Allaipiddy is almost impossible. There is no security for Tamil civilians. However, there is no difference between Allaipiddy and the rest of Jaffna. When I ride a motorbike even in Jaffna town I feel the small of my back tingling in fear of straying into the crossfire,? said Amalraj.&lt;br /&gt;&lt;br /&gt;Many people in Jaffna think similarly. Rather than the day-to-day killings that are the order of the day at present, the period when there was total war was better they feel. After four years of the CFA, terror has suddenly re-emerged with disappearances and murder that make the residents feel very vulnerable. &lt;br /&gt;&lt;br /&gt;According to the Human Rights Commission (Jaffna) 153 disappearances have been reported recently. But it is well known that those whose names are reported form only a fraction of those whose rights have been violated in some way. Due to the multiplicity of possible perpetrators, the public is scared to complain to the authorities. Second, it is mostly the educated and the city dweller that has access to the HRC not those in the outlying villages who have to cross checkpoints manned by the military to reach Jaffna. Young people do not complain nor do families with young people ? the high risk category. &lt;br /&gt;&lt;br /&gt;Human rights activists feel that people living in groups are harassed more than others because if the military enters a place with a large group of people, they abuse more people. This could be because the demonstration effect of such abuse could have greater impact than in the case of few individuals. It could also be because nobody takes ultimate responsibility in an IDP camp and the security forces can behave with impunity.&lt;br /&gt;&lt;br /&gt;An example of what happened recently is illustrative. When a claymore blast occurred near a welfare centre, soldiers entered the centre on suspicion the perpetrators could have run inside. When they could not find them they turned violent hands on the young males within the camp. Then they told the males and the older folk to leave the makeshift huts while the girls were kept inside. The soldiers and the girls remained together for around half an hour. &lt;br /&gt;&lt;br /&gt; The victims are unwilling to speak because they might be victimised again. They are scared to report to the HRC either,? said an NGO worker laconically. &lt;br /&gt;&lt;br /&gt;Another reason the public is scared to complain is because the perpetrators of violence are not easily identifiable. It could be the military, the paramilitaries or the Tigers. The confusion and the culpability of all parties in some way or another have given rise to distrust towards all of them. &lt;br /&gt;&lt;br /&gt; A woman having love affair with EPDP cadre is killed, as much as the man who gives meals to the LTTE. The Jaffna public was trained to protect themselves when there was full-scale war, including air raids, but today, since individuals are the target there is no escape,? the NGO worker said. &lt;br /&gt;&lt;br /&gt; The only option is to run away from Jaffna, but it will be better to go overseas,? said a resident. &lt;br /&gt;&lt;br /&gt;It was when the Jaffna public was under such stress that the bodies were discovered at Kopay. The body of a Hindu priest was exhumed and identified. He had no political connections. The body of a youth was also discovered there, wearing a watch that was eerily still ticking. He too was identified but there was report about him with the HRC. Nobody had complained to the HRC he was missing because he had gone to his grandmother?s home and was not missed anywhere till the fateful news arrived of his corpse. &lt;br /&gt;&lt;br /&gt;What is more, though there are details of killing people look at it as news and sensation. It has not acted as a preventive of further killing. Therefore, the acts of violence continue unabated. This is partly because the law enforcement machinery is impaired, but not entirely.&lt;br /&gt;&lt;br /&gt; Civil society has lost its voice and the state acts as if it has no obligation towards one as a citizen. So even public opinion carries no weight,? said the NGO worker.&lt;br /&gt;&lt;br /&gt;An existence wrapped with fear is beginning to tell on people?s minds. Psychological disturbance is not only telling on them in the way they handle conflict-related issues but also in other matters that they confront in their day-to-day lives. Amongst the groups vulnerable are children. &lt;br /&gt;&lt;br /&gt; The next generation is badly affected because they see pictures in the media as well as in real life, which leaves them scarred,? said Dr. S. Sivayogam a psychiatrist at the Jaffna Teaching Hospital. &lt;br /&gt;&lt;br /&gt;The public believes that anyone can kill anyone else and get away with it. It creates a great sense of vulnerability and futility, which is affecting their emotional well being. &lt;br /&gt;&lt;br /&gt;Civilians do not carry arms. But in today?s war it is they who are worst affected. It is the government and LTTE that should guarantee civilian protection and how well they do it will play an important role in defining the politics of the future.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-7949734679506498014?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/7949734679506498014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=7949734679506498014' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7949734679506498014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/7949734679506498014'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/05/13.html' title='மே 13....படுகொலையின் மற்றுமொரு நாள்.'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8233902580553389571</id><published>2007-04-08T21:58:00.000-07:00</published><updated>2007-04-08T22:08:28.031-07:00</updated><title type='text'>வரவனையான்- சோமி - சயந்தன், ஒரு பரபர உரையாடல்</title><content type='html'>&lt;strong&gt;சயந்தனின் பதிவில் இருந்து முழுமையாக எடுக்கப் பட்டு எனது பதிவில் பிரசுரிக்கப் படுகிறது.&lt;br /&gt;தொடர்ந்து எங்கள் ஒலிப்பதிவுகளை வலையுலகில் ஏற்றிவரும் அண்ணன் "மொக்கை ஒலி" சயந்தன் மாஸ்டருக்கு &lt;/strong&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;வலைப் பதிவுலகில் பின்னூட்டமிடும் வசதியென்பது வேறெந்த ஊடகத்திற்கும் கிடைத்திராத பெரும் வாய்ப்புக்களில் ஒன்று. பதிவாளர் முடித்த பதிவு, அதனை வாசிப்பவரிடத்தில் ஆரம்பிக்கும் அவரது சிந்தனையின் தொடர்ச்சியை, தொடர்ந்தும் இறுதி வரை கொண்டு செல்ல உதவும் பின்னூட்ட வசதிகள் சரியான முறையில் தமிழ் வலைப்பதிவுச் சூழலில் பயன்படுத்தப் படுகிறதா..? &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் பாராட்டுக்களாகவும் வாழ்த்துக்களாகவும் அல்லது வசைவுகளாகவும் அமைகின்ற பின்னூட்டங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகின்றது..?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருடைய எண்ணப் பதிவுகளை வெளியிட, இன்னுமொருவருடைய அனுமதியை வேண்டி நிற்கும் ஊடகச் சூழலில், பெரும் கட்டுடைப்பாக அவரவர்கள் தமது மனப்பதிவுகளை சுதந்திரமாகவும், திறந்த நிலையிலும் வெளியிடும் வாய்ப்பினை வலைப் பதிவு தந்திருக்கிறது. இந்நிலையில் எழுதப் படும் பதிவுகள் ஒருவருடைய மன வெளிப்பாட்டின் பதிவுகளாக அமைவது தவிர்க்க முடியாததாகிற போது, அவை கண்டிப்பாக ஏதாவது மாற்றத்திற்கான, அல்லது வாசகரை ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கும் படியாக அமைவது கடைப் பிடிக்கப் படக் கூடியதா..?&lt;br /&gt;&lt;br /&gt;இவைபற்றிய கலைந்துரையாடல் இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=DDA404CPE&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=DDA404CPE" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8233902580553389571?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8233902580553389571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8233902580553389571' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8233902580553389571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8233902580553389571'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/04/blog-post_08.html' title='வரவனையான்- சோமி - சயந்தன், ஒரு பரபர உரையாடல்'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8126275432804895885</id><published>2007-04-07T08:49:00.000-07:00</published><updated>2007-04-07T09:18:21.254-07:00</updated><title type='text'>முன்னோட்ட முகப்பு ;ஒரு பரபர உரையாடல்....</title><content type='html'>எந்தவித முன்னேற்பாடுமற்ற கதைகளின் குவியல் இது...............&lt;br /&gt;&lt;br /&gt;பல வட்டார வழக்கியல் தமிழ்கள்.........&lt;br /&gt;&lt;br /&gt;வரவனியானின் பின்னூட்ட அரசியல் மீதான கட்டுடைப்பு.......&lt;br /&gt;&lt;br /&gt;சயந்தனின் சைற் அடித்தல்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;சோமியின் சொதப்பல்கள்.............&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இன்னும் பல  ...காத்திருங்கள் விரைவில் உங்கள் தமிழ்மணத்தில்..... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஒரு நள்ளிரவுபொழுதில் சயந்தனும் பின்னிரவில் அல்லது அதிகாலையில் நானும் வரவனையானும் மும்முனையில் நடத்திய மொக்கைக் கதைகளின் தொகுப்பு விரைவில் உங்கள் தமிழ்மணத்தில் வருகிறது. &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="315" height="80"&gt;&lt;param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=DCBEFE4P0&amp;Autoplay=0"&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&amp;songID=DCBEFE4P0" width="315" height="80"  scale="noscale" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8126275432804895885?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8126275432804895885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8126275432804895885' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8126275432804895885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8126275432804895885'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/04/blog-post.html' title='முன்னோட்ட முகப்பு ;ஒரு பரபர உரையாடல்....'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-368126027503068315</id><published>2007-02-26T13:28:00.000-08:00</published><updated>2007-02-26T13:33:03.821-08:00</updated><title type='text'>World Record......சிறிலங்கா</title><content type='html'>இலங்கை இந்தியாவுக்கு பக்கதில இருந்தாலும் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியா சாதிக்காத சாதனையை இலங்கை சாதித்திருகிறது.எனக்கு வந்த  மின்னஞ்சல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன்&lt;br /&gt;&lt;br /&gt;Oggetto:  World Record......&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mahinda Chinthana has kept a world record in having the largest cabinet. &lt;br /&gt;The below is a comparison between the cabinets of some countries and that of Sri Lanka. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Canada -         31 ministers for 37 million people&lt;br /&gt;India -           20 ministers for 1000 million people &lt;br /&gt;Russia -          25 ministers for 150 million people &lt;br /&gt;Malaysia -        23 ministers for 25 million people&lt;br /&gt;Bangladesh -     22 ministers for 150 million people &lt;br /&gt;America -        15 ministers for 274 million people&lt;br /&gt;Pakistan -        13 ministers for 130 million people &lt;br /&gt;Sri Lanka -       108 ministers for 19 million people &lt;br /&gt;&lt;br /&gt;Monthly salary of a cabinet minister ? Rs. 65,000 &lt;br /&gt;Monthly salary of a non cabinet minister ? Rs.63,500&lt;br /&gt;The incentive for participating for a parliamentary session ? Rs.500&lt;br /&gt;The incentive for participating for a select committee? Rs.200&lt;br /&gt;Monthly fuel incentive for a cabinet and a non cabinet minister ? Rs. 75,000&lt;br /&gt;Monthly fuel incentive deputy minister - Rs.50,000&lt;br /&gt;Monthly incentive for the personal telephone ? Rs.20,000&lt;br /&gt;Monthly mobile incentive ? Rs. 10,000&lt;br /&gt;The facility is provided to take an unlimited amount of IDD and local calls from the official telephone for a month. &lt;br /&gt;&lt;br /&gt;Every minister has a right to employ 4 secretaries as media, personal,&lt;br /&gt;coordinating, and public relations. Vehicles, fuel incentives, telephone &lt;br /&gt;incentives and limited entertainment incentives are provided for all of &lt;br /&gt;them from the ministry.&lt;br /&gt;&lt;br /&gt;For the 18 cabinet and non cabinet ministers, the monthly expense for fuel&lt;br /&gt;From the government is Rs:1,350,000. Also for the 10 new deputy ministers, &lt;br /&gt;Rs:500,000 should be separated. The total monthly fuel expense for them is &lt;br /&gt;Rs:1,850,000.&lt;br /&gt; &lt;br /&gt;Oh.... what a blessed Nation.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-368126027503068315?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/368126027503068315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=368126027503068315' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/368126027503068315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/368126027503068315'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/02/world-record.html' title='World Record......சிறிலங்கா'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-184149104212479175</id><published>2007-02-23T02:38:00.000-08:00</published><updated>2007-02-23T20:46:56.940-08:00</updated><title type='text'>கடைசிக் கடிதம்..........</title><content type='html'>&lt;em&gt;பிரியத்துகுரிய என் செல்பேசியே,&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நீ யாரோ ஒருவரின் வாய்க்கும் காதுக்கும் இடையில் சிக்குப் பட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எவனோ ஒருவன் சொல்லும் ஆபாச ஜோக்கை இன்னொருவனுக்கு கடத்திகொண்டிருகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இனிய காதலர்களின் மொழி உன்னூடே பகிரப் பட்டுக்கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர்,திராவிடம் ,செயலலிதா பற்றிய அரசியல் பேச்சுக்கள் நடக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;யாரவது ஆன்மிக அருளுரை நிகழ்த்திக் கொண்டிருக்காலாம் ஒரு பக்த்தன் உன் வழியே அதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனை கொல்லும் சதித் திட்டம் உன்  ஊடே நிகழ்த்தப் படலாம்.&lt;br /&gt;இப்படி இப்படி இன்னும்... &lt;br /&gt;&lt;br /&gt;சாரு நிவேதிதா கற்பனை செய்தது போல் நானும் கற்பனை செய்து பார்த்தேன்...வேண்டாம்....&lt;br /&gt;இதற்கு மேல் என்னால் கற்பனை செய்வது இலகுவானதாயில்லை.இன்னும் வலிக்கிறது&lt;br /&gt;உனக்கு சாருவையும் தெரியும்  போனவாரம் தனது கவிதைப் புத்தகம் தந்து விட்டுப் போன சேகரையும் தெரியும்.கடந்த மூன்று வருடத்தில் எனக்கு தெரிந்த அத்தனை பேரையும்தெரிந்தவள் நீ.&lt;br /&gt;உனக்கு தெரியாமல் நான் சல்லாபித்ததுகூட இல்லை.நான் உறங்கும் போதும் என் கூடவே அருகில் விழித்திருந்து அதிகாலையில் நேரம் சொல்லி எழுப்பியவள் நீ.நடு இரவிலும் என்னை உலகத்தோடு இணைத்தவள். நான் ஒரு பத்திரிகைக்காரன்  என்பதை நள்ளிரவில் தட்டியெழுப்பி சேதி சொல்லிப் புரிய வைத்தவள்.உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த அரசியல் இரகசியங்கள் எத்தனை(என் காதல் அரசியல் வரைக்கும்).எத்தனை முக்கியத்துவம் மிக்க தொலைபேசி இலக்கங்களை உன்னுள் தேக்கி வைத்திருந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தோழிகளுக்கும் எனக்குமான ஊடாட்டத்தை முற்றிலும் அறிந்தவள் நீ.அன்று அவள் பேசிய வார்த்தைகளில் நொந்து போயிருந்த எனக்கு நீடித்த தனிமையில் இருந்த ஒரே ஆறுதல் நீதானே.என் தோழியின் பல குறுஞ்சேதிகளைத் தேக்கிவைத்து நினைவுகளில் என்னை தினம் தினம் மகிழ்ச்சிப் படுத்தியவன் நீ. இன்றைக்கு எல்லாவற்றையும் உன்னுள் வைத்து கொண்டு என்னைப் பிரிந்து போனாயோ.&lt;br /&gt;&lt;br /&gt;என் தோழி என்னைப் பிரிந்த பொழுதுகளிலான அதே வேதனையே இப்போதும் என்னுள்.&lt;br /&gt;விடிய விடிய உன்னில் பேசியிருகிறேன்.அந்த பொழுதுகளில் என் தோழியின் துக்கத்தையும்  வேதனையையும் நீ தூங்காது விழித்திருந்து உள்வாங்கினாய்&lt;br /&gt;என் துயரம் சந்தோசம்.அழுகை,வன்முறை,அறிவு ,உணர்வு எல்லாமும் தெரிந்த  ஒருத்தி நீ மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ பிரிந்து போன போதுதான் எனக்கு தெரிந்தது எனக்கும் உனக்கும் இத்தனை உறவிருந்ததென்று. ஒரு நாள் முழுவதும் சாப்பிடவே பிடிக்கவில்லை அழுகை அழுகையாக வந்தது.ஒரு செல்போன் போனதுக்கு ஏன் இவ்வளோ அதுவும் பழைய போன், வித்தாலும் 1000 ரூபா தேறாது என்று என் நண்பன் சொன்னான் அவனுக்கு தெரியாது உனக்கும் எனக்குமான உறவு&lt;br /&gt;புதிய போன் வாங்க வேண்டிய தருணங்களிலெல்லாம் உன்னை என்னில் இருந்து பிரிக்கமுடியாமல் உன் கூடவே இருந்தேனே உனக்கு மட்டும் எப்படி மனசு வந்தது என்னைப் பிரிந்து செல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த திங்கள் பின் காலைப் பொழுது வரை தூங்கி கண் விழித்த போது என்னில் நீ பிரிந்திருந்தாய்.நான் உன்னைப் பிரிந்து தூங்கியதில்லையே.என் நண்பன் உன்னைப் பிரித்து மேசையில் தனித்து வைத்த கோபத்தில் என்னை விட்டுப் போனாயோ இல்லை அப்படிச் செய்வதற்க்கு நீ சாதாரண மனுசி இல்லையே. இல்லை உன்னை யரோ பலாத்காரமாக திருடிச் சென்றிருக்கிறார்கள்.அவர்களோடு நீ முரண்டு பிடித்திருப்பாய்.அவர்கள் யாரிடமாவது இப்போது உன்னை விற்றிருக்க கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை போலவே என் கூட இருந்த ஒரு டிஜிற்றல் கமரா என்னை விட்டுப் போனதன் பின் வந்தவள் நீ.உனக்கு அது பற்றிய நிறையக் கதைகள் சொல்லியிருகிறேன்.நண்பன் செந்தூரன் விருபிய கமெரா அது.அவன் அகாலமாக இறந்து சில நாட்களில் அதுவும் அகாலமாக என்னை விட்டுப்போனது. எனக்கு தொடர்ந்து வலியைத் தந்த அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் பிறகு உன்னில் ஒன்றித்தேன்.மனிதர்களைவிடவும் உன்னை நான் நேசித்தேன்.நான் விரும்பியும் இருக்கமுடியாமல் தவிக்கிற நானாக இருத்தலில் நீ நீயாக இருந்தாய்.நானும் உன்னில் மட்டும்தான் அதிகம் நானாக இருந்தேன்.என் கோபத்தில் எத்தனை தடவை  நீ அடிபட்டிருப்பாய்? உன்னை நான் தூக்கியெறிந்த பொழுதுகள் எத்தனை.  உன்னை இந்தனை கொடுமைப் படுத்திய போதும் எனக்காக எப்படி உன்னல் இயங்க முடிந்தது என்று நானே ஆச்சரியப் பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் எழுத முடியவில்லை. இபோது தவிர்க்கமுடியாமல் புதியவள் ஒருத்தி வந்திருக்கிறாள்.அவள் உன்னை விட பெறுமதியானவளாம்.அழகானவளாம்.என்னைப் படமெடுகிறள்.பாட்டுப்பாடுகிறாள்,நியும் பாடக் கூடியவள்தான் ஆனால் நான் உன்னில் பாட்டை ரசித்ததில்லை.என் குரலைப் பதிவு செய்கிறாள்.இன்னும் நிறைய சாகாசங்கள் செய்கிறாள். ஆனால்,என்னால் இன்னும் அவளோடு இணைய முடியவில்லை. நீ கூட இருந்த போது இருந்த உணர்வு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை சிலவேளை உனக்கு நான் மடல் எழுதலாம் அப்போது அவள் என்னில் நெருங்கியிருக்கலாம்.இதுதானே மனித இயல்பு.உன்னைப் பற்றிய வலி நிறைந்த உணர்வுகளை சுமந்த படியே இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளுவது எனக்கு அவசியமாகிறது.கால ஓட்டத்தில் நீயும் கூட என்னை மறந்து விடுவாய்.என்னுடன் புதியவள் அப்போது மிக நெருகமானவளாக இருக்கலாம். நினைவுகள் மட்டுமே அப்போது நம்மிடம் மீதமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பிரிய செல்போனே நான் உன்னில் இருந்து விடை பெற்றுக் கொள்ளுகிறேன்.&lt;br /&gt; பிரியமுடன்&lt;br /&gt;உன் தோழன்&lt;br /&gt;சோமி.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு: அன்பு நண்பர்களே என் செல்போன் எனது வீட்டில் வைத்தே திருட்டுப் போன காரணத்தால் உங்கள் அனைவரினதும்  தொலைபேசி, செல்லிடபேசி இலக்கங்கள் தொலைந்துவிட்டன தயவு செய்து போன் பண்ணூகள் இல்லையெனில் மிஸ்டுகால் கொடுங்கள் நான் போன் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளுகிறேன்.இல்லையெனில் குறுஞ்செய்தி அனுப்புங்கள்.எனது பழைய இலக்கமே தொடர்ந்தும் பாவனையில் உள்ளது.(0091 9940 390 479)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-184149104212479175?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/184149104212479175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=184149104212479175' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/184149104212479175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/184149104212479175'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/02/blog-post_23.html' title='கடைசிக் கடிதம்..........'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8180791274559986100</id><published>2007-02-16T12:29:00.000-08:00</published><updated>2007-03-05T11:57:56.733-08:00</updated><title type='text'>தமிழாலயம்.........</title><content type='html'>தமிழாலயம். இந்த பெயர் கொழும்பு இளவட்டங்களுக்கு நிறையப் பரிட்சயமானது.சாதிய,வர்க்க,கருத்தியல்,காதலியல்,வேதியல்,விளங்காதவியல்,தேசியம்,பண்பாடு,&lt;br /&gt;கலாச்சாரம் உள்ளிட்ட இன்ன பிற விடயங்களில் ஆர்வமுள்ள இளந்தலைமுறையினரை ஒன்றிணைத்த இடம்.உயர்தரப் பரீட்சை எடுத்துப் போட்டு சும்மா இருக்கிற காலத்தில பயனுள்ள வேலையளச் செய்யுறதுக்கு ஆசைப் படுகிற கூட்டத்துக்கான இடம்&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொழும்பு வந்த புதிதில் அடக்கமுடியாத என் ஆர்வத்தில் சேர்ந்து கொண்ட அமைப்பிது.நண்பர் ஏ.ஆர்.திருச்செந்தூரன்(இவர் இப்ப  பெரிய வானொலி அறிவிப்பாளர்)எனக்கு தெரிந்த ஒரே கொழும்பு நணபர்.சோமி எங்கள மாதிரி ஆர்வமுள்ள இளஞர்களுக்காக உருவான தமிழாலயம் எண்ட அமைப்பில உங்களைச் சேர்த்து விடுறன் எண்டு அழைத்துப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவ்வப் போது உயர்தர வகுப்புகளுக்கு செல்லும்(எந்த காலத்தில வகுப்புக்கு ஒழுங்கா போயிருக்கம்) கொழும்பு தமிழ்ச்சங்க கட்டடத்தில் நடந்த தமிழாலயக் கூட்டத்திற்குச் சென்றேன்.ஆக கொழும்பு பெட்டையளோட சேர்ந்து நாடகம் போட ஒரு அரிய வாய்ப்பு எண்ட புழுகம் ஒரு புறம் என்னை உசுப்பேற்றியது.அநியாயத்துக்கு காலுக்குச் சப்பாத்து வேற போட்டு கொண்டு தமிழ்ச்சங்கம் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5 மணிக்கு கூட்டமென்றார்கள். எப்போதுமில்லாத அதிசயமாக ஆர்வத்தில 5 மணிக்கே நான் கூட்டத்துக்கு போனே 5.40 க்கு ஒரு நாலு பேர் வந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.6 மணிக்கு இன்னும் இருவர் வந்து சேர்ந்தனர். என்னை அறிமுகப் படுத்த வேண்டிய திருச்செந்தூரன் 6.10 கு வந்து சேர்ந்தான். ம் 6.15 க்கு வந்து சேர்ந்த மூவரில் ஒருவர்தான் அன்றைய கூட்டத்துக்கு தலமையாம். சரியெனகூட்டம்  ஆரம்பமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்தான் சோமிதரன்,  பிறந்தது யாழ்ப்பாணதில. யாழ்ப்பாணத்தில எங்கெயெடா? ஒருவன் கேட்டன். கேட்டவன் பெயர் சேயோன் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உயர் தரம் படித்தவன். 'பருத்தித்துறை" என்றேன் இவனும் பருத்திதுறைதான் என்றான் சேயோன்.அந்த பருத்தித்துறைப் பையன் பெயர் இ.செந்தூரன்.பிறகு கதைக்கலாம் என்று பேச முற்பட்ட செந்துரனை தடுத்தவன் பெயர் ராகுலன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மட்டக்களப்பில படிச்சவர்.நாடகம் போடுவார் என்னைப்போல என்று திருச்செந்துரன் சொல்ல என்னை உற்றுப் பார்த்தவன் பெயர் சயந்தன்(இதுதான் எனக்கும் சயந்தனுக்குமான முதல் பார்வை ஹி..ஹி...) இவர் சிறுகதையாசிரியர் சயந்தன் என்றார்கள்.சோமிதரனை அகில இலங்கை தமிழ்மொழித்தின விவாத போட்டியில் சந்திதோம். உமாசுதன் ,ரஜீவ் நிர்மலசிங்கம் இவர்கள் இருவரும் நான் ஏற்கனவே விவாதத்தில் சந்தித்தவர்கள். திருச்செந்தூரனின் விவாத சகபாடிகள் இவர்களும் தமிழாலயத்தில் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்.செந்தூரன் ரோயல் கல்லூரி மாணவன். கூட்டம் முழுவதிலும் சயந்தனுக்கு பெரும் சவாலாக இருந்தவன்(தமிழாலயம் அடுத்த பாகத்தில இது பற்றிய பல சுவாரஸ்யங்கள் சொல்லுறன்).இவர்களைத்தவிர பிரவினும் அந்த கூட்டத்தில் இருந்திருக்க வேணும் மற்றவர்கள் யாரென்பது மறந்து விட்டது. தமிழாலயத்தின் முதலும் கடசியுமான சஞ்சிகை உயிர்ப்பு.அதில அன்றைய தமிழாலயம் உறுப்பினர்கள் ஒரு 30 பேருக்கும் மேல பெயர் வெளிடிட்டிருந்தார்கள் அதை விரைவில் வெளியிடுறன்.உயிர்ப்பு பற்றியும் தனி பதிவு போடுறன்.எனது முதலும் முடிவுமான கவிதையை வெளியிட்ட சஞ்சிகை அது.சயந்தன்தான் அதற்கு ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியென என்  நாடகம் ஒன்று  தமிழலயத்தின் தைப் பொங்கல் விழாவில போடுவதாக முடிவானது.25 பேர் கோண்ட நாடகமாக தொடங்கின் கடசியில் ஓரங்க நாடகம் போடும் நிலைக்குக்கு நான் தள்ளப் பட்ட சோகம்.(அதுவும் தனிப் பதிவா போட வேண்டியதுதான்).கிட்டத்தட்ட 2 வருடங்கள் நான் தமிழாலயத்தில் இணந்திருந்தேன். 4 உயிர்ப்பு இதழ்கள் வெளிவந்தன. ஒன்றைத் தவிர மற்றய மூன்று இதழ்களின் ஆசிரியர் பீடங்களும் சயந்தனின் ஆழுகைக்குள் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பொங்குதமிழ் எழுச்சி நடந்த போது மேத்தா,அப்துல் ரகுமான் ,வைரமுத்து கவிதைகளை வாசித்த படி பொங்கியது தமிழாலயம்மும்.சும்மா சொல்லக் கூடாது பெடியள் எல்லாருக்கும் ஓவரான தமிழ் உணர்ச்சிதான். அடுத்த பொங்கலுக்கு இரட்மலானை இந்துக் கல்லூரியில மாணாவர்களுக்கு பரிசுகளோடு சென்ற தமிழாலயம் படை ஏழைச் சிறுவர்களுக்கு உதவிகளைச் செய்தது.அடுத்து நிதி சேகரிப்புக்காக நடத்தப் பட்ட கலைச்சாரல் விழா அந்த நாளில் வெள்ளவத்தை இளசுகளை அமர்க்களப் படுத்தியவொன்று உயர்தர வகுப்பு வாத்தி மாரைக் கூப்பிட்டு  விவாதம் புரிய வச்சதில எக்கச்சக்க கலக்சன்.(தமிழ் நாட்டில செலிபிரேட்டியா சினிமாக்காரர ககூப்பிடுறதைப் போல.உங்களுக்குத் தெரியாது உயர்தர வகுப்புக்காலத்தில வாத்திமார்தான் எங்களுக்கு ஹீரோக்கள்.அவையளப் பற்றிக் கிசுகிசுவும் வரும்) கலைச்சாரலில சேர்த்த காசு  இப்பவும் அன்றைய பொருளாளரும் சயந்தனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான ஒருவரிடம் இன்னும் பாதுகாப்பாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடியாக 2000ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எடுத்த மானவர்களிடமிருந்த தமிழாலயம் அதன் பின்னர் அடுத்த  உயர்தர வகுப்பு தேர்வெளுதிவிட்டு சும்மா இருப்பவர்களிடம் கொடுக்கப் பட்டது. அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கோ ஏன் ஒரூகாலத்தில் தமிழாலயத்தில் கோலோச்சிய சயந்தனுக்கோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இவளவு சொன்னன் நான் மினகெட்டு போனதுக்கு அந்த கூட்டத்தில ஒரு பொம்பிளப் பிள்ளையாவது இருந்ததோவெண்டு சொல்லையில்லையே எண்டு நீங்கள் கேட்கிறது விளங்குது.அட அநியாயத்திலும் அநியாயம் பெண்களை உள்ளெ சேர்ப்பதில்லை என்று தமிழாலயத்தில் முடிவே எடுத்திருக்கிறார்களாம்.காரணம் இளஞர்கள் தமிழாலயத்தில நடக்கும் உறுப்பினர் கூட்டத்தை சரியாக கவனிக்க மாட்டார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சில மாதங்களில் சயந்தன், பி.எஸ் செந்தூரன் ஆகியோரின் பெரும் முயற்சி மற்றும் போராட்டத்தின்  பயனாய் பெண்களுக்கு தமிழாலயத்தில் இடஒதுக்டு  கிடைத்தது.(இதுக்குப் பிறக்கு குட்டங்அகளுக்கு கணிசமானவர்கள் வந்தனர்.இ.செந்தூரன் பெண்கள் வருகையினால் இளஞர்கள் திசை மாறுவார்கள் என்று கூறி வெளிநடப்புச் செய்தார்) அனைவரும் எதிர்பார்த்தது போலவே வந்து சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவர் நிரந்தரப் பொருளாளர்.இன்னொருவர் ஆசிரியர் பீட உறுப்பினர்.அடுத்தவர் செயலாளரோ இல்லை வேறு ஏதோ ஒரு பெரிய பதவி.(இதுவும் சயந்தன்,பி.எஸ் ஆகியோரின் முயற்சி எண்டு நீங்கள் நினைத்தால் ஆம் என்று சொல்ல முடியாது.என்ன இருந்தாலும் உள் விவகாரங்களை வெளியில் சொல்லி கட்டுப்பாட்டை மீறுவது நாகரிகமல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடியாக இருந்த தமிழாலயத்தில் எனக்கு தெரிந்து கொழும்பு பாடசாலைகளில் பயின்ற பெரும்பாலான விவாதக்காரர்கள் இணைந்திருந்தனர்.தமிழாலயத்துக்கும் ஒரு விவாத அணி இருந்தது. நான் அணியில் ஒருவன். தொடர்ந்து அணியில் இருந்த நான் ஒரு விவாத அரங்கில் பெண்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்ற நிர்பந்ததில் எனது இடத்தை வழங்க வேண்டியதாகப் போனது.அதன் பின்னர் நான் வேலையில் பிசியாகியதில் மீண்டும் அந்த இடத்தை பிடிக்க முடியாது போனது.பெண்கள் இட உதுக்கீட்டுக்காக ப்ரும் போராட்டம் நடந்ததால் பலர் தாமது இடங்களைத் தியாகம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட தமிழாலயத்தை சொன்ன நான் ஒருவர் பெயரை சொல்லாமலேயே வந்து விட்டேன்&lt;br /&gt;அவர்தான் க.க.உதயக்குமார் ஆசிரியர்.எங்கள் தலைவர் அவர்.அவரை ரேடியோவில் அறிவுப்பு செய்யுமாபோல  அறிவுப்பு செய்துகொண்டிருந்த ஏ.ஆர்.திருச்செந்தூரன் காகா உதயக்குமார் எண்டு அறிவுப்பு செய்தது முக்கிய வரலாற்று நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;அடுத்த தமிழாலயம் தொடரில் பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன .இதுவரை எழுதியது தமிழாலயம் பற்றிய உற்சாக அறிமுகம் மட்டுமே.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8180791274559986100?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8180791274559986100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8180791274559986100' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8180791274559986100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8180791274559986100'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/02/blog-post_16.html' title='தமிழாலயம்.........'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-8216440168120608550</id><published>2007-02-16T12:08:00.000-08:00</published><updated>2007-04-04T13:47:06.656-07:00</updated><title type='text'>கொழும்பில் என் முதல் அறை நண்பர்கள்..</title><content type='html'>2000 மாம் ஆண்டு நவம்பர் 27 ம் திகதி எனக்கு பரிட்சையமில்லா கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன்.இலங்கையைப் பொறுத்தளவில் இது எல்லோருக்குமே முக்கியமானதும் பதற்றமானதுமான நாள்.தெகிவளையில் ஒரு சிங்கள வீட்டில் அம்மா என்னை விட்டுச் சென்ற போது எனக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் என்னுடன் சேர்த்து மொத்தம் 6 பேர்.அந்த அறை வீட்டின் மையப் பகுதியில் இருந்தது.பக்கத்து அறையில் வீட்டுகாற அன்ரியின் மகள் படித்து கொண்டிருப்பது கேட்டது.குரலை வைத்து அவளின் முகத்தை கற்பனை செய்துகொண்டேன்.அன்ரி அருமையாகப் பேசினார்.எனக்கு பிடித்திருந்தது.அறைக்குள் வந்தவுடன் என்னை அறிமுகப் படுத்தினேன்.அன்ரியோட இவ்வளவு நேரமாக கதைத்தீர் என்ற அவர்கள் கேள்விக்கு,"அன்ரி நல்லவா போல இருக்கு" என்று பதில் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"புதுத் தும்புத்தடி நல்லா கூட்டும்" சட்டென பதில் அவர்களிடமிருந்து வந்தது. அந்த பதிலைச் சொன்னது அமுதன்.பொறியியல் மாணவன் பகுதி நேரத் தொழிலெனவும் ஊர்சுற்றுவது முழு நேர தொழிலெனவும் சொன்னார்.அடுத்து வந்த நாட்களில் அதனை உறுதியும் செய்தார்.இன்னொருவர் சுரேஷ் இவர்தான் அந்த அறைக்குத் தலைவர் யாழ்ப்பாண சைவ வேளாள கட்டுமானத்தின் பிரதிபலிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கட்டிலுக்கும் மேல் சாமிப் படமிருக்கும் காலை மாலை இருவேளை பூசை செய்வார்.வெளிநாடுக்கு போவதே குறிக்கோள்.வெளிநாட்டில குடியுரிமை இருக்கும் பொம்பிளையள் கிடைத்தால் கலியாணம் செய்து கொண்டு போகலாம் எண்டதும் இவரிண்ட எண்ணம்.முப்பதைத் தாண்டிய வயதில்  பிடித்த பெண் வரும் வரை  போட்டோக்களையும் குறிப்புகளையும் பார்த்தபடி  ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது ரஞ்சித் உசார் பேர்வழி  வெளிநாட்டுக்குப் போவதெ இஅவ்ரினதும் ஒரே இலக்கு, அதுவரை  சிங்களமே தெரியாமல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வண்டி ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்.ஒவ்வொரு நாளும்  தன்ர புளுகல்களை சொல்வது இரவில் இவரது வேலை. "ரஞ்சித் பறக்கவிட்டு சுட்டாத சும்மவே சுடு" இது அமுதன் ரஞ்சித்துக்கு கொடுக்கும் பதில்.(புளுகுறதைத்தான் பறக்கவிட்டுச் சுடுதல் என்பார்கள்)&lt;br /&gt;நானும் அமுதனும் ரஞ்சிதோடு அடிபிடி சண்டையில் இறங்கும் நண்பர்கள்.அமுதனின் ஆதரவிருந்ததால் என் உடம்பை ஒத்த ரஞ்சித்தோடு சண்டைக்கு போவதில் எனக்கு பயம் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவர்  மலையகத்தைச் சேர்ந்தவர். இவரும் பறக்கவிட்டு சுடுவார். ஆனால் நல்ல ஆங்கில சிங்களப் புலமையும் சுறுசுறுப்பான ஆர்வம் கொண்ட இளைஞர். வீட்டுகார அன்ரியோடு நல்ல ஒட்டு.அதனால் தினம் தினம் எங்கள் அனைவரின் கிண்டலுக்கும் உள்ளானார். ஆனால் அவர் அன்ரியோடு  ஒட்டாய் இருப்பதற்க்கு காரணம் எங்கள் அறையில் இருந்த யாழ்ப்பாண மேலதிக்கம். தோட்டாக்காட்டன் இங்கிலிஷ் கதைகிறதப்பார் என்கிற கிண்டல்கள் முதல் தோட்டக்காட்டன்  வடக்கத்தையான் போன்ற பல கிண்டல்கள் அவனுக்கு கேட்க்கும் படியே சொல்லப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;அறையில் யாழ்ப்பாண நண்பர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு. ஏதும் ஆங்கிலத்தில் தெரிய  வேண்டுமெண்டால் மேல் வீட்டில் இருக்கும் அங்கிளிடம் கேட்பார்களே தவிர தோட்டக்காட்டானிடம் கேட்பது சங்கை குறைவு என்பார்கள்.அவனுக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது. காரணம் நானும் அந்த அறையில் மைன்னரிட்டிதான்  என்னை மட்டக்களப்பான் என்பார்கள்.யாழ்ப்பாணதில் பிறந்திருந்தாலும் அந்த அறைக்குள் நான் மட்டக்களப்பானாகவே நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நெடு நேரம் வரை மட்டக்களப்பானும் தோட்டக்காட்டானும் அன்ரியோட என்ன கதைகிறார்கள் எண்டு அறைக்குள் ஒரு குசுகுசுப்பு வரும். நான் அப்ப  படித்துக் கொண்டிருந்ததால்  நெடு நேரம்  விழித்திருப்பன். அவனும் விழித்திருந்து படிப்பான். அவன் அப்பாவும் அம்மாவும் இன்னும் தோட்டதில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எப்பிடியாவது அதிக சம்பளம் வாங்கும் வேலைக்கு சேர்ந்து அவர்களை  வீட்டில் உட்கார வைத்து சோறு போட வேண்டும் என்பதே அவன் கனவாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் சிங்களதில் பல வேலைகளைச் செய்வதற்க்கும்  ஆங்கிலத்தில் எழுதுவதற்க்கும் ஆங்கிலதில் பேசிப்பழகுவதற்க்கும் எங்கள் அறை நண்பர்களுக்கு தோட்டக்காட்டன் துணை புரிந்தான்.(எங்களுக்கு இங்கிலிசுல கிரமர்தான் தெரியும் பேசுறது கஷ்டம் எண்டதாலதான் உன்னட்ட கேட்க்கிரம் என்பது அமுதம் சொல்லும் தன்னிலை விளக்கம்.) இருப்பினும் அவனுள் அரம்பம் முதலே உருவான அல்லது உருவாக்கப் பட்ட தாழ்வுமனப்பான்மை எங்களில் இருந்து சற்று தள்ளியிருந்து பேசும் நிலையினை அவனுள் உருவாக்கி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பின்னணியிலும் பொலிசுக்காரன் சோதனைக்காக வருகிறபோதும். வீட்டு அன்ரிக்கெதிராய்  அணிதிரளும்போதும். ஏன் கட்டுநாயக்கா தாக்குதல் செய்தி கேட்டு துள்ளிக் குதித்த போதும் நாங்கள் அனைவரும் தமிழராக உணர்ந்தோம் என்பதை மறுபதற்கில்லை. பொது இடத்தில் என்னையோ அவனையோ மற்ற நால்வரும் தனியாக விட்டதில்லை.சிக்கலெதிலும் மாட்டிவிட்டதுமில்லை சிக்கல் வந்தால் காப்பாற்றவும் தவறியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எமது அறையின் ஆறமவர் அமுதனின் நண்பர்(அவர் பெயரும் மறந்து விட்டது) அருமையயன காதல் கதை அவருடையது. கண்களால் மட்டும் பேசும் பல்கலைக்கழகக் காதலை வியந்து பேசுவார்.அவரும் அவரின் காதலியும் வெவ்வேறு சாதிக்காரர்.இருந்தாலும் காதலிக்கும்வரை காதலிப்போம்  எண்டு காதலித்தார். அமைதியானவர்  பின்னர் இவர் எமது அறையில் இருது வேறு அறைகுச் சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஒருநாள் வெள்ளவத்தையில் அவரைச் சந்தித்தேன் திருமனம் முடித்துவிட்டதாகச் சொன்னார். யார் அந்த அக்காவா நான் ஆர்வமாகக் கேட்டேன். அவரிடம் ஒரு சிரிப்பு பதிலாக வந்தது அதன் பின்னர் நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் போனபின்னர் ஒருவர் வந்தர். லண்டனுக்கு போகப் போய் 6 மாதம் வெளிநாடெல்லம் சுற்றி 3 மாதம் பெல்ஜியம் சிறையில் இருந்தவர். பின்னர் இவரின் கோரிக்கை மனு அங்கிகரிக்கப்படாததால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட்டார். வந்து 1 வாரம் அவரின் அனுபவக்குவியல்களை அவிட்டுவிட்டர்.9 லட்ச்சம் இழந்தும் சிரித்துக்கொண்டே தனது அனுபக்கதையின் இறுதியில் ஒரு வசனம் சொன்னார் "நான் கிட்டத்தட்ட 20 விமானநிலையங்களைப் பார்த்திருப்பன், இப்ப சொல்லுறன் இன்னும் ஆறுமாதத்தில நான் லண்டனுக்கு எப்பிடியும் போவன்" இதைக் கேட்டதும் கடுப்பான அமுதன் இன்னும் உனக்கு புத்தி வரவில்லையா என்று கேட்டார்."எனக்கு எந்த நாட்டில எப்பிடி பேசோணும் எப்பிடி அசேலத்துக்கு கடிதம் கொடுக்கோணும் எண்டு தெரியும் நான் போய் காட்டுறன் பாருங்கோ'வெண்டார். அவர் சொன்ன மாதிரியே இப்போது அவர் லண்டனில இருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான என் முதல் அறை எனக்கு குட்டித் தமிழீழம் போன்றதுவே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-8216440168120608550?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/8216440168120608550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=8216440168120608550' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8216440168120608550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/8216440168120608550'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/02/blog-post_3664.html' title='கொழும்பில் என் முதல் அறை நண்பர்கள்..'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-5254327000751357305</id><published>2007-02-04T23:03:00.000-08:00</published><updated>2007-02-05T03:29:08.389-08:00</updated><title type='text'>வித்தியாசமான ஆடை...</title><content type='html'>&lt;a href="http://photos.hi5.com/0000/275/348/AFDIKQ275348-02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://photos.hi5.com/0000/275/348/AFDIKQ275348-02.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2005 இல் கோவாவில் நடை பெற்ற சர்வதேச திரைப் பட விழாவில் நகைச்சுவைப் பிரஞ்சுப்(french) படமான Astrix And Obeliex - Mission Cleiopetra வில் நடித்த நடிகை படம் இது. எனது கமராவுக்குள் சிக்கிய இந்தபடத்தில் உள்ள அவரது ஆடை வித்தியாசமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிளியோப்பட்ராவுக்கும் சீசருக்கும் இடையிலானா ஈகோவும் அதன் பயனாக விளைந்த சவால் ஒன்றை மையப் படுத்திய கதை.நல்ல நகைச்சுவை உணர்வுடன் திரைக்கதை வடிமைக்கப் படுள்ளது. குறித்த காலத்தில் பிரமாண்டமான மாளிகையொன்றை கட்டி முடிப்பதற்க்காக கிளியோபட்டாரா முயல்கிறார்.அது நிறைவடைந்தால் சீசர் தோற்று விடுவார் அதனைத் தடுப்பதற்க்கான  முயற்சியும் கட்டுவதற்க்கான முயற்சியுமே கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புகைப்படத்தில் பிண்னணியில் இருப்பவர்கள் இந்தியாவுக்கான பிரஞ்சுத்தூதுவர் மற்றும் பிரஞ்சு திரைப்பட இயக்குனர்&lt;br /&gt;&lt;br /&gt;( என்ன சோமி ஏதாவது சீரியசான விசயங்களை புளக்கில பகிர்ந்துகலாமே என்று எனது நண்பர் கேட்டிஇருந்தார்......அத்தானுங்கோ இது...ஹி..ஹி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9716164-5254327000751357305?l=somee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://somee.blogspot.com/feeds/5254327000751357305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9716164&amp;postID=5254327000751357305' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5254327000751357305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9716164/posts/default/5254327000751357305'/><link rel='alternate' type='text/html' href='http://somee.blogspot.com/2007/02/blog-post_04.html' title='வித்தியாசமான ஆடை...'/><author><name>சோமி</name><uri>http://www.blogger.com/profile/00477435925773042518</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://www.illustratorsonline.com/herring/maps/journalist.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9716164.post-6769460357079030488</id><published>2007-02-03T10:51:00.000-08:00</published><updated>2007-02-10T02:49:29.902-08:00</updated><title type='text'>சின்னம்மம்மா. . .</title><content type='html'>காலையிலிருந்தே திருச்சி மாமா வீட்டில் இருந்து பலதடவைகள் போன் வந்தாகிவிட்டது.கையில் வைத்திருக்கும்  கமராவை இறக்கி வைக்க முடியாதபடி வேலை.அன்றைகென்று கமராமேன் இல்லாமல் நானே கமரா பண்ணுவதால் அதிக அழுத்தம் வேறு.சிறிது நேரத்தில் எனது உதவி இயக்குனர் செல்லிடப் பேசியையும் உற
